Pages

Showing posts with label Sehroza Dawat. Show all posts
Showing posts with label Sehroza Dawat. Show all posts

Wednesday, October 24, 2012

Dr Abdul Huq Ansari, K. S. Sudarshan and an inspiring insight

Dr Abdul Huq Ansari

The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 8-10 October2012 issue. It conveys an inspiring insight.

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்)
டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். மார்ககப் பற்றும் சமூகத் தொண்டார்வமும் நிறைந்தவராய் மிளிர்ந்தார். இதனால் மாணவப் பருவத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்தார். மேலும் படித்தார். முன்னேறிக் கொண்டே போனார். தர்ஸ்காஹ் இஸ்லாமியில் ஆலிம் பட்டம் பெற்றார். தொடர்ந்து அரபி மொழியில் இளங்கலைப் பட்டமும் ஃபிலாஸஃபியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து அதே துறையில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். அதற்கடுத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி.எஸ் பட்டமும் பெற்றார். எந்த மார்க்கப் பற்றுடனும் சமூகத்தொண்டார்வத்துடனும் அவர் மாணவப் பருவத்தில் தன்னை இஸ்லாமிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டாரோ அந்த பற்றும் ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவர் சார்ந்த இயக்கமும் வளர்ந்து கொண்டே போனது. இறுதியில் அவர் அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த பிறகு அவர் 2007-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகும் இயக்கத்திற்கான நூல்களை எழுதி வெளியிடுகின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதே நிலையில் அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் 2012  அக்டோபர் 13 ஆம் தேதியன்று தான் வாழ்நாள் முழுவதும் ஏற்று வந்த நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான திருப்தி உள்ள நிலையில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருடைய தோழர்களும் உறவினர்களும் அளவற்ற அன்புடனும் வாஞ்சையுடனும் அவரை நல்லடக்கம் செய்தனர்.

மற்றும் கே.எஸ். சுதர்ஸன்
கே.எஸ். சுதர்ஸனும் 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் படிப்பில் முன்னேறிக் கொண்டே போனார். நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்குள் மிகைத்திருந்தது. இதனால் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசபக்தி முழக்கங்களால் கவரப்பட்டு அதன் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். படிப்பும் தொடர்ந்தது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பி.ஈ பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் எந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்த அமைப்பின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில் முனைப்புடன் மும்முரமாகச் செயலாற்றி வந்தார்.ஒரு கட்டத்தில் அதன் உச்சக்கட்ட பொறுப்பை சர்சங்சாலக் - அகில இந்தியத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு 2009-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் பதவி விலகியதிலிருந்து எந்த இயக்கப் பணியிலும் ஈடுபடாமல் வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 15 செப்டம்பர், 2012 அன்று அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் தன்னுடைய இறப்புக்கு இருபத்தேழு நாள்களுக்கு முன்பு அவர் தொடர்பாக வெளியான செய்தி ஒன்று பல்வேறு ஊகங்களுக்கும் எண்ணங்களுக்கும் வித்திட்டது. 20 ஆகஸ்ட் 2012 அன்று பெருநாள் பண்டிகையின் போது போபாலில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவோ (அல்லது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கோ) அவர் தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குப் போக விரும்பினார்.

இருவருக்குமிடையில் இருக்கின்ற ஒற்றுமை சுவையானது...! இருவரும் சந்தித்த முடிவோ முற்றிலும் மாறுபட்டது..!

 இவ்விரு தலைவர்களின் வாழ்வில் சில விஷயங்களில் காணப்படுகின்ற ஒற்றுமை சுவையானவை. இவ்விருவருமே முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான இயக்கங்களில் தம்மை வாழ்நாள் முழுவதும் இணைத்துக் கொண்டிருந்தனர். இருவருமே தாம் சார்ந்திருந்த இயக்கத்தின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற அளவுக்கு வளர்ந்தனர். ஆனால் இருவரின் இறுதி முடிவில் அடிப்படையான வேற்றுமையைப் பார்க்க முடிகின்றது. டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்களுக்கு தம்முடைய நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான மனநிறைவு இருந்தது. அவை தொடர்பான எண்ணத் தெளிவுடனும் முழுமையான திருப்தியுடனுமே அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்திருக்க வேண்டும். இயக்கத்திற்கான நூல்களை எழுதித் தர வேண்டும் என்கிற தன்னுடைய நாட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத குறை மட்டுமே அவரை வாட்டியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, சுதர்ஸன் அவர்கள் தம்முடைய கடைசி காலத்தில் ஒருவிதமான வேதனைக்கும் கவலைக்கும் ஆளாகி இருந்தார்.  குறைந்தபட்சம் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்களைக் குறித்தும் தான் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்து அவர் பெரிதும் அதிருப்தியுற்றவராய், அதனை மீள்பார்வை செய்கின்றவராய் இருந்துவந்திருக்கின்றார்.  அவருடைய தோழர்கள் சொல்வதைப் போல் அவருடைய மனநிலை சரியில்லாமல் போய்விட்டது என்பதை சரி என எடுத்துக் கொண்டாலும் அவருடைய உள்மனத்துக்குள் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அதுதான் அவரை தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லத் தூண்டியிருக்க வேண்டும். 16 செப்டம்பர், 2012 தேதிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் அவர் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து வந்தார் என்கிற தகவல் இடம் பெற்றுள்ளது.

எது எப்படியோ இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்துவிட்டது. இனி ஆகப் போவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனின் கையில்..!
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 8-10 அக்டோபர் 2012 இதழ்

Tuesday, October 23, 2012

Parvaz Rahmani, K S Sudarsan and Islamic Dawah

Parvaz Rahmani


The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 20-22 September2012 issue. It is written in the true spirit of Islamic Dawah.
அந்தச் சாவை நினைத்து வருத்தம் ஏற்பட்டதேன்...?

கே. எஸ். சுதர்ஸனின் (மறைவு 15 செப்டம்பர், 2012) மரணம் குறித்து சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வருத்தம் ஏற்பட்டதோ, தெரியவில்லை. ஆனால் கடந்த 20 ஆகஸ்ட் அன்று ஈகைப் பெருநாளின்போது ஆர். எஸ். எஸ் இயக்கத்தின்இந்த மூத்த தலைவர் போபால் நகரத்தின் புகழ் பெற்ற தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற விரும்பியதாகவும் அல்லது தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பியதாகவும் அதற்காக வேண்டி தாஜுல் மஸாஜீத் பள்ளிவாசலுக்குப் போக விரும்பியதாகவும், ஆனால் அவருடைய ஸ்டாஃப் - உதவியாளர் களும், காவல் துறை அதிகாரிகளும் ‘போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது’ என்று சொல்லியும், ‘பெருநாள் தொழுகை முடிந்துவிட்டது’ என்று எடுத்துரைத்தும் தொழுகையை நிறைவேற்றுகின்ற அவருடைய ஆசையை அணை போட்டு தடுத்துவிட்டதாகவும் அதன் பிறகு முன்னாள் முதல்வர் பாபுலால் கோடா அவரைத் தன்னுடைய முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த வீட்டில் சுதர்ஸன் தன்னுடைய முஸ்லிம் ‘சகோதரர்களுக்கு’ பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், சேமியா பாயசத்தை ரசித்து ருசித்து அருந்தி மகிழ்ந்ததாகவும், தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொண்டதாகவும் போபாலிலிருந்து வந்த செய்தியைப் படித்த, கேட்ட முஸ்லிம்களுக்கு அவருடைய மரணம் தவிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். சுதர்ஸன் அவர்களின் இந்த ‘மாற்றம்’ குறித்து எந்தவோர் ஆங்கில நாளிதழிலிலும் விமர்சனமோ, கருத்துரையோ வரவில்லை; என்னுடைய பார்வைக்கு வரவில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு பற்றி ஆங்கில இதழ்களில் வெளியான செய்தியில் அவருக்கு ‘ஞாபக மறதி’ நோய் தொற்றிவிட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் உர்தூ பத்திரிகைகளில் அவருடைய இந்த திடீர் ஆர்வம் குறித்து பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. சுதர்ஸன் அவர்களுக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டதால் அவர் இவ்வாறு பெருநாள் தொழுகைக்காக விருப்பம் தெரிவித்திருக்க மாட்டார்; தொழுகை, பெருநாள், முஸ்லிம்கள் பற்றிய அவருடைய பார்வையிலும் கருத்திலும் நிச்சயமாக ஏதோவொரு அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் இந்த பரபரப்பான விவாதத்திற்குப் பின்புலமாக அமைந்தது.

ஒரு நண்பர் அனுப்பிய குறுந்தகவல்...!
இந்த நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் குறிப்பிடத்தக்கது. 17 செப்டம்பர் அன்று 09313522885 என்கிற தொலைபேசி மூலமாக அவர் அனுப்பிய குறுந்தகவலின் விவரம் வருமாறு: ‘சுதர்ஸன் ஜி 20 ஆகஸ்ட் அன்று போபாலின் தாஜுல் மஸாஜித் மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றி இஸ்லாம் தர்ஷன்மூலமாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவே விரும்பினார். ஆனால் அவருடைய தோழர்கள் அவருடைய இந்தத் தனிப்பட்ட சுதந்தரத்தையும் அவருக்குத் தரவில்லை. அவரை பள்ளிவாசலுக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். கடைசியில் சுதர்ஸன் அவர்கள் அதிருப்தியுற்ற நிலையிலேயே இந்த உலகை விட்டுப் போய்விட்டார். சுதர்ஸன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சர்சலாங்- அகில இந்தியத் தலைவராக இருந்த காலத்தில் நம்முடைய தோழர் ஒருவர் இஸ்லாத்தின் அருள் மார்க்கச் செய்தியை விரிவாக விவரித்து கடிதம் எழுதினார். சுதர்ஸன் ஜி அவருக்குப் பதில் கடிதமும் எழுதினார். வண்டியை அனுப்பி தன்னிடம் வரவழைத்து நீண்ட நேரம் பேசவும் செய்தார். இறந்து போனவர் வெளிப்படையாக எதனைவும் அறிவிக்கவில்லை. ஆனால் தன்னுடைய செயலின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தினருக்கு கனமான செய்தியை பதிவு செய்திருக்கின்றார். எவராவது அவருடைய அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டால் எத்துணை நன்றாக இருக்கும்...! முஸ்லிம்களும் அழைப்புப் பணி தொடர்பான உணர்வைப் பெற்றால் எத்துணை நன்றாக  இருக்கும்..!” மகாராஷ்டிர நண்பரின் உணர்வுகளும் ஆதங்கமும் பொருத்தமானவையே. சிறப்பானவையே. ஒருவருக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டாலோ, முதுமையின் மூப்பால் பீடிக்கப்பட்டாலோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசத்தான் செய்வாரே தவிர, முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது உளறுவாரே தவிர, இப்படி தீர்க்கமாக தொழ வேண்டும் என்றோ வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றோ சொல்ல மாட்டார். இது போன்ற எண்ணங்களை உணர்வும் எண்ணமும் உறுதியாக இருக்கின்ற மனிதர்தான் வெளிப்படுத்துவார். எனவே மகாராஷ்டிர நண்பரின் கவலையில் அர்த்தம் இருக்கின்றது.

நிச்சயமாக இப்படி நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது...!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னாள் சர்சந்சாலக் - அகில இந்தியத் தலைவராகன குப்பள்ளி சீதாராமையா சுதர்ஸன் அவர்கள் தீவிரமான கடுமையான இந்துத்துவக் கொள்கை மீது பற்று கொண்டவராக இருந்தார். 2000 முதல் 2009 வரை சர்சந்சாலக்காக - அகில இந்தியத் தலைவராக அவர் இருந்த காலத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அவருடைய நிலைப்பாட்டைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம்தான் இருந்தன. முஸ்லிம்கள் தொடர்பான சங் பரிவாரத்தின் நிலைப்பாட்டை அவர் ஆணித்தரமாகவும் அழுத்தம்திருத்தமாகவும் எடுத்துரைத்து வந்துள்ளார். நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாகவும் அவர் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். சில நேரங்களில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கருத்துகளை மறுத்துரைத்தும் அவர் பேசியிருக்கின்றார். எது வரை எனில் ‘இந்த நாட்டில் இது வரை ஆண்ட பிரதமர்களில் இந்திரா காந்திதான் வெற்றிகரமான பிரதமர்’ என்றும் மனம் விட்டுப்பேசி இருக்கின்றார். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? தன்னுடைய மனத்திற்குச் சரி எனப் பட்டதை வெளிப்படுத்துவதில் அவர் என்றைக்குமே தயங்கியதில்லை. நறுக்குத்தெறித்தாற்போல் ஆணித்தரமாகவே எதனையும் சொல்லி வந்துள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அவர் அதிகமாகப் பேசியதில்லை. மௌனம் சாதித்தே வந்துள்ளார். இந்தக் காலத்தில் அவர் வாழ்க்கை குறித்தும் வாழ்க்கை உணர்த்துகின்ற உண்மை குறித்தும் அதிகமாக ஆராய்ந்திருக்க வேண்டும். சத்தியத்தை அடைய வேண்டும் என்கிற உந்துதலில் நாள்களைக் கடத்தியிருக்க வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் போதனைகளையும் மீள்பார்வை செய்திருக்க வேண்டும். இவ்வாறு நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. மகாராஷ்டிர நண்பர் அனுப்பிய குறுந்தகவல் இதனை மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. எனவே சங் பரிவாரத்துடன் நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக இஸ்லாம், முஸ்லிம்கள் தொடர்பாக அவருக்குள் வேரூன்றி இருந்த நிலைப்பாட்டையும் எண்ணத்தையும் அவர் தம் கடைசி காலத்தில் மீள்பார்வை செய்து வந்திருக்க வேண்டும். அதற்கும் வாய்ப்பிருக்கின்றது.
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 20-22 செப்டம்பர் 2012 இதழ்

Sunday, November 13, 2011

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரியின் ஆதங்கம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடங்கி அறுப-தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அறிவு, சிந்தனை, செயல் என பல்வேறு களங்களில் அது நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது. இந்த நீண்ட பயணம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி: சித்தாந்தக் களத்தில் ஜமாஅத் ஊழியர்கள் அடைய வேண்டிய படித்தரத்தை இன்று வரை எட்டவேயில்லை.

ஜமாஅத் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மத்தியில் அழைப்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊழியர்களும் சரி, முஸ்லிம் சமுதாயத்தின் சீர்திருத்தத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்ற ஊழியர்களும் சரி,  சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றுகின்ற ஊழியர்களும் சரி, நாட்டு நடப்பு, தேசப் பிரச்னைகள் தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஊழியர்களும் சரி - எல்லாருமே அறிவுக்களத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

நாட்டுநடப்பிலும் அன்றாட பிரச்னைகளிலும் நல்ல விஷய ஞானத்தைக் கொண்டிருக்கின்றவருக்கு இந்திய மதங்கள் பற்றிய ஞானம் இல்லை. ஏதாவதொரு துறையில் நல்ல தேர்ச்சி பெற்றவருக்கோ மார்க்கப் புலமை இல்லை.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு விதங்களில் பயிற்சி தரப்படுவதால் சித்தாந்த பயிற்சி முகாம், சிந்தனைப் பட்டறை என பல்வேறு நிலைகளை அவர்கள் கடந்து வந்திருப்பதால் அவர்களுக்கு இந்திய மதங்களில் சிலவற்றைக் குறித்து சுருக்கமான அறிமுகம் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அவர்களில் எவருக்குமே எந்தவொரு மதத்தைக் குறித்தும் விரிவான, ஆழமான ஞானம் இல்லை.

இன்ன மதத்தைக் குறித்து இன்னாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதனைக் குறித்து வேறு எவரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்கின்ற அளவுக்கு நம்மில் எத்தனை வல்லுநர்கள் உருவாகி இருக்கின்றார்கள்?

உண்மையென்னவெனில் சிந்தனைப் பட்டறைகளிலும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றதால் இவர்களுக்கு இந்திய மதங்களைக் குறித்து ஒரளவுக்கு அறிமுகம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், இந்த மதங்களின் நூல்களை வாசிப்பதற்கும், வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கும் இவர்கள் மெனக்கெடுவதில்லை. அந்தச் சுருக்கமான அறிமுகத்தை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகின்றார்கள். அவற்றைக் குறித்து அறிவதற்கும் நூல்களை வாசிப்பதற்கும் நேரமும் ஒதுக்குவதில்லை; அவகாசமும் கிடைப்பதில்லை.

நாம் வாழ்கின்ற நாடு எந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாடு. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் வல்லுநர்களும்  தேர்ச்சி பெற்ற திறமையாளர்களும் கொட்டிக் கிடக்கின்ற நாடு இது.
எல்லாத் துறைகளிலும் பெரும் பெரும் படிப்பாளிகளும் சூரப்புலிகளும் நிறைந்துள்ள நாடு இது. 

இந்தப் பின்னணியில் நம்முடைய இயக்கத்திலும் வல்லுநர்களும் ஆற்றல்வாய்ந்தவர்களும் நிறைந்திருக்க வேண்டாமா என்கிற கவலை எனக்குள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. சிலசமயம் பேருருவம் எடுத்து என்னுடைய தூக்கத்தைப் பறிப்பதுமுண்டு.

நம்மில் சிலராவது வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்த வல்லுநர்களாக மலர வேண்டாமா?

நம்மில் சிலராவது புத்த மதத்திற்கு அத்தாரிட்டி இவர் எனச் சொல்கின்ற அளவுக்கு புத்த மதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டாமா?

நம்மில் சிலராவது சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டாமா?

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், உபநிஷத்துகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

இவ்வாறு இந்த மதங்களில் ஆழ்ந்த புலமை பெற்று குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் ஒளியில் அவற்றை விமர்சனமும் ஆய்வும் செய்கின்ற அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் நம்மில் உருவாக வேண்டாமா?

இஸ்லாமிய இயக்கத்தின் தற்போதைய நூல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நூல்களில் மேற்கத்திய சிந்தனைகள், சித்தாந்தங்கள் மீதான விமர்சனத்தைப் பார்க்க முடியும். நாத்திகம், கம்யூனிஸம், முதலாளித்துவம் போன்றவை பற்றிய விவாதங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும் இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆனால் இந்தியாவில் இருக்கின்ற மதங்கள், இந்தியப் பாரம்பர்யங்கள், பழக்கவழக்கங்கள், மாண்புகள் பற்றி இந்த நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளதா?

எங்காவது ஏதாவதொரு பொருளில் இவற்றைப் பற்றிய மேலோட்டமான விவாதத்தை மட்டுமே பார்க்க முடியும். மௌலானா அவர்களின் ‘இஸ்லாமிய பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளும் உட்கூறுகளும்’ என்கிற நூலில் இந்து மதத்தின் சில நம்பிக்கைகள் குறித்து மேலோட்டமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. ‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலில் போர் தொடர்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள், நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பணியாற்றுவதுதான் நம்முடைய நோக்கமெனில் இந்து மதம் குறித்து நல்ல முறையிலும் ஆழமாகவும் வாசித்து விளங்கியிருப்பது இன்றியமையாத-தாகும். இந்து மதம் மட்டுமல்லாமல் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் போன்றவற்றையும் நல்ல முறையில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும்.

‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரையில் கிறிஸ்துவ மதம் குறித்து எழுதப்பட்டிருக்கின்ற குறிப்புகள் அனைத்துமே மத்தியக் காலத்திலும், நவீனக் காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள், என்ஸைக்ளோபிடியா பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

சென்ற நூற்றாண்டில் கிறிஸ்துவ அறிஞர்களும் யூத அறிஞர்களும் பைபிள் மீது செய்துள்ள விமர்சனங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் கிறிஸ்துவ, யூத வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் பயனீட்டப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிஞர் என்னதான் மிகப்பெரும் மார்க்க மறுமலர்ச்சியாளராக, சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக முத்திரை பதித்து தனித்து நின்றாலும் எல்லாக் கலைகளிலும் தனித்-தேர்ச்சியையும் நுணுக்கமான விவரங்களையும் கவனித்து ஆய்கின்ற செயல்திறனையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

இப்போது நமக்கு இருக்கின்ற மிகப் பெரும் தேவை என்னவெனில்  அறிவாற்றலும் ஆராய்ச்சித்திறனும் கொண்ட, இஸ்லாத்தின் கோட்பாடுகளிலும் ஆழமான புலமை கொண்ட சில இளவல்கள் இந்திய மதங்கள், அவற்-றின் வரலாறு, பாரம்பர்யங்கள், தற்போதைய சமூக விழைவுகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆழ-மாக ஆராய வேண்டும்; இஸ்லாத்தை இந்தியப் பின்னணியில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பணி கனமான பணி. என்றாலும் மிகவும் அவசியமான பணி என்றே நான் கருதுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அலிகரில் சென்டர் ஃபார் ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்கிற பெயரில் கல்வி நிறுவனத்தை நான் தொடங்கியதற்குப் பின்புலமாக இருந்தது இந்தச் சிந்தனைதான்.

தில்லி திரும்பிய பிறகு பல்வேறு பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அவற்றில் ஒன்றுதான் இந்த சென்டரும். 2005 ஆகஸ்டு மாதத்தில் இதனைத் தொடங்கினேன்.

இதிலிருந்து சில இளைஞர்கள் சொக்கத்தங்கங்களாக வெளியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

உங்களுடைய கேள்விக்கு ஒரு கோணத்தில் இதுவரை பதிலளித்துவிட்டேன். இப்போது உங்களுடைய கேள்வி-யின் இன்னொரு பரிமாணத்திற்கு வருகின்றேன். அதாவது என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்திருக்கின்றேன்?

ஒரு மூன்று துறைகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தி வருகின்றேன். முதலாவதாக மதங்களுக்கிடையே ஒப்பாய்வு, இரண்டாவதாக, சூஃபிஸம், மூன்றாவதாக ஒழுக்கக் கல்வி.

ஒழுக்கக் கல்வி தொடர்பாக நான் சில நூல்களை எழுதியிருக்கின்றேன். ஒழுக்க மாண்புகள் தொடர்பான கல்வியில் தனி முத்திரை பதித்த ஒழுக்கவியலாளரும் புகழ் பெற்ற அறிஞருமான முஸ்கவியா குறித்து நான் மேற்கொண்ட ஆய்வை (முனைவர் பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது) அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.
ஒழுக்கவியல் குறித்து புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அபுன் னஸர் ஃபாராபி அவர்களின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றேன். இப்னு சீனா, முக்ஸில்லா போன்றோரின் ஒழுக்கவியல் போதனைகள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்.

சூஃபிஸம் குறித்து Sufism and Shariah என்கிற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் முஜத்தித் அல்ஃபெ ஸானி ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள் தொடர்பான ஓர் ஆய்வு நூல் ஆகும். என்றாலும் அதில் இஸ்லாமிய சூஃபிஸத்தின் உட்கூறுகளை வரையறுப்பதற்கு முயன்றிருக்கின்றேன். உர்தூ மொழியிலும் இதன் மொழிபெயர்ப்பு வெளியாகி அறிவுக்களங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கத்தின் நிலைமை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்  டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி  அளித்த பேட்டியிலிருந்து

Tuesday, July 7, 2009

இது தான் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்!!


Markazi Majlis-e-Numaindgaan is the top most governing body of Jamaat-e-Islami Hind. It comprises of 120 members. It elects the Ameer-e-Jamaat - all India President - of the Jamaat. Usually it meets once in two years. It is the most powerful body of Jamaat. It is the one which elects Markazi Majlis-e-Shoora - Central consultative council. It has the power to suspend and dismiss the Ameer-e-Jamaat and the Majlis-e-Shoora.
Recently the Majlis had its session in Bangalore. Moulana Parvaz Rahmani, who is also the editor of Dawat sehroza attended it. As he has been elected to the Majlis for the first it was his first experience. Being a writer and that too a writer par excellence, he has penned his first hand experience in a short article.
It was a marvellous piece. As usual I translated it in Tamil and shared it with my friends. I have titled it as இது தான் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்!! Yehi hai Jamaat-e-Islami Hind!! To read it click the gif image below.



Tuesday, May 26, 2009

Mutton, eggs and Jamaat-e-Islami Hind!!!

Once there was a sheep in a dusty town.
It was living happily in its own world.









One day an hen came jogging towards the sheep.

The following conversation took place between them:
"Hi! May Peace be upon you"
"Hi! May Peace be upon you"
"How do you do?"
"I am fine by the grace of Allah! How do you do?"
Soon they became close friends.

One day the clever hen proposed an idea.
As it was a brilliant idea, the sheep concurred with the hen.
What was the idea?
The hen had said: "We have become close friends. Why not we start a hotel?"
The sheep sheepishly agreed to the proposal and they started the ground work to start the hotel.
One day the sheep asked the hen: "What would be the name of our proposed hotel?"
The hen said cooly: "I have already thought it out. The name of our future hotel would be MUTTON And EGGS!!"
The sheep was very clever. He immediately understood the game. He withdrew from the hotel project saying,"While I would be committed, you would be merely involved"

This is the story often told to highlight the difference between commitment and involvement.
In Islam and Islamic movement like Jamaat-e-Islami Hind, commitment to the cause is expected from the cadre.

Ibrahim (AS) with his declaration "Surely my prayer, all my acts of worship, and my living and my dying are only for Allah, the Lord of the whole Universe" (Quran 6: 162) has set the parameters for the scale of commitment.

In other words we do not have pass marks or high marks or first class or second class as far as commitment is concerned. You ought to get 100 percent or perish. It has made very clear in the hadith, "One cannot become a believer unless his love and his hate, his giving and refusing, his friendship and his enmity evolve on the basis of Allah and His Prophet"

Where do we stand now?
Are we committed to the cause of Islam?
Are we merely involved in the process?

We do participate in the weekly meetings. We do sit in the front row in the important gatherings. We do circulate Islamic books with our friends and relatives. We do promote our magazines and journals from Dawat sehroza to Samarasam Tamil Fortnightly to Radiance views weekly. We do actively take part in nation wide campaigns and caravans. We do read Quran and Hadith and nisabi kitabs. We do give gifts to others. We do this. We do that. We can go on bragging our activities. But is it sufficient? Have you ever analysed a basic question? Whether we do all this things when we find time or we do give prime importance?

The present Ameer-e-Halqa used to say about a karkun (let's call him Mr X): "If you cut Mr X to bits and pieces, each and every bit would scream Jamaat-e-Islami, Jamaat-e-Islami"
And surely that is commitment, you would say.
But I would like to add a correction. "If your body is cut to pieces, each and every bit and piece should scream Allah, Allah."
Just like Syedna Bilal(RA) used to say "Ahad! Ahad!"

That is commitment.

Also read : Jamaat-e-Islami Hind and the black belt!!
and : Three dimensions of a personality!

Sunday, April 26, 2009

The story of a dayee with a smiling face and sparkling eyes!


This post is about Br Abdul Muheeth Siddiqui.
I have known Abdul Muheeth for the past twenty years. He is from Nizamabad and was attached with SIO there.

He used to visit Jamaat Office way back in late 1980s when I was serving as Office Secretary. He was doing some business and used to make frequent trips to Srivilliputhur. On his way to Srivilliputhur, he would always make it a point to stay in Jamaat Office (Chennai) for a day or two.

He was a very soft spoken youth and always remained calm and composed. But I distinctly remember the spark in his eyes. He was very passionate in doing Islamic Dawah and his passion reflected in his sparkling eyes. He would always bring some brothers, friends with him.

As days rolled on, his visits became less frequent and due to various developments the chance of meeting him got dimmer and dimmer. But, time and again, in a flash, his smiling face would emerge from nowhere in my mind and I used to cherish his fond memories. And I used to inquire about him whenever I meet some tahreeki brother from Andhra Pradesh.

Br. Muheeth, as it turned up, was very active in Jamaat activities. His circle of friends was very wide. He had just two motives. One, to reform the Muslim Youth and mould them into good Da'ees. Two, to convey the message of Islam to non-Muslim Youth.

Then one Thursday evening came a shocker. I was browsing the Sehroza Dawat when my eyes captured the headings and I could not believe it.

It was an obituary on Br. Abdul Muheeth!
Inna lillahi va inna ilaihi rajeewoon.

The obituary was written by a SIO friend. He has shed light on some aspects of the deceased brother. They are worth sharing:

Br. Abdul Muheeth had the knack of making friendships easily; He was seen invariably amidst a bunch of friends and well-wishers.

He had a tender heart which would melt in no time. The Prophet of Islam has taught us a beautiful way to win others: Give Gifts, Say Salam. Br. Muqeeth didn't stop himself with mentioning this beautiful gem of an advice in his speeches. He practised it.

Feeding the hungry is his favourite amal-e-salih. During Ramazan his house would become a hostel. More than ten to twelve students would be staying in his house. And his mother would never get tired making elaborate arrangements of Sahr and Iftar for these youth of various backgrounds.
He used to give scholarships to many students.

Abdul Muheeth Siddiqui is no more today. He passed away few months back when he was returning from Hyderabad in a car accident.
Thousands of well wishders and friends thronged to attend his Janaza prayer. Hundreds of non-Muslims came with a heavy heart and gazed the proceedings.

May Allah forgive him and grant him exalted place in Jannat.

Tuesday, April 14, 2009

Interview : Dr M. Rafat on "Islamic Movement in India in Modern Times"

Dr Muhammad Rafat

Recently Dr. Muhammad Rafat, Ameer-e-Halqa of Jamaat-e-Islami Hind JIH Delhi has given an interview to Janab Parvaz Rahmani, Editor Dawat. Dr.Rafat is from Uttar Pradesh and has been attached with the JIH for the past three, four decades. He is also a member of Markazi Majlis-e-Shoora and Markazi Majlis-e-Numaindgan of JIH. He has doctorate in Physics and teaches to engineering students in Jamia Millia Islamiya Delhi. He is very articulate and soft spoken man.

In his aforesaid interview he has shed light on the present scenario of the Islamic Movement in India. The interview is simply superb. It is very crispy, enlightening and thought provoking. I could not resist the temptation to translate in Tamil and share it with my Tamil knowing friends.
I have met him a couple of times. He is very humble, polite and as they say in Tamil he would never அதிர்ந்து பேச மாட்டார்.
He is a very knowledgeble person and well read man. Earlier I had translated one of his beautiful essay on 1857 and the status of Muslims then.
Herewith I have attached the gif images of the same.
Kindly share it with other brothers. Please write me your views and impressions if time permits.

Monday, April 13, 2009

Dawat sehroza! is online!

Alhumdulillah!
All praise be to Allah.

Dawat sehroza is on line. It is pleasing,heartening and amazing to see Dawat on line. I don't know what to say. I am typing these lines with tears in my eyes. This is the long pending dream. This is the happiest day in my life.

Happy to see my favourite khabr-o-Nazr in the net. Jazakallah. I pray for all those who are behind this noble venture. May Allah bestow them with the best in both the worlds. Aameen.

I could not recall when I first came across Dawat. But it became a companion in no time.

In those days, when I was in Tirupattur, a bustling town with dusty streets, Dawat is the window through which I learnt everything. Without any visa or any formalities I visited various countries with the help of Dawat. I got acquainted the names of various luminaries, stalwarts of the Jamaat through Dawat.

How addicted had I become of this bundle of paper..!
I would be frequenting the residence of Janab Muhammad Shafee who was the sole agent of Dawat. I used to procure the copies of Dawat from him.

Shafee bhai is a very busy man. He is a beedi worker as well as an owner of a Beedi company. Besides he was the Nazim of Halqa-e-Karkunan. He had also started an elementary school catering to the needs of the very poor and downtrodden.

Above all he is also a Dayee. He is a man with wheels. He would always be found wandering here and there, with a bag full of magazines, books, pamphlets, stickers and what not!

He had this knack of reading the faces! The karkunan of the Jamaat of those days had this ability. On seeing me he would understand everything. His hands would invariably go into his bag and come out with a copy of Dawat. Sometimes he would blush and mumble something
which would be so incomprehensible that made me think! I would catch the key words and search them in Dawat.

Then God brought me to the city of unknown ie Chennai. That is another story which could be shared some other day.


T Azeez Luthfullah, Chennai
Related Posts Plugin for WordPress, Blogger...