Pages

Showing posts with label Moulana Syed Jalaluddin Umari. Show all posts
Showing posts with label Moulana Syed Jalaluddin Umari. Show all posts

Saturday, November 10, 2012

மேற்கில் உதித்த சூரியன்...



மர்யம் ஜமீலா (1934-2012) எண்ணற்ற இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை விதைத்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய எழுத்துகளைப் போலவே அவருடைய வாழ்வும் வசீகரமானது. மலைக்க வைக்கும். சிந்திக்க வைக்கும். இறையருளை நினைவு கூர வைக்கும்.

மேற்கில் உதித்த சூரியனாய் உலகெங்கும் எண்ணற்ற இதயங்களை தனது எழுத்துக்களால் ஈர்த்த மர்யம் ஜமீலா அக்டோபர் 31, 2012 அன்று லாகூரில் அவருடைய இல்லத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இறக்கின்ற வரை அவருடைய பேனா ஓயவேயில்லை. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி வர்ல்ட் முஸ்லிம் புக் ரிவியூ காலண்டிதழில் அவர் தொடர்ந்து பல்வேறு நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்தார்.


ஒரு ஆசை

என்னை ஷஃபீக்கா ஆபாவின் பக்கத்தில்...

‘ஒரு பெண் உலகை விட்டுப் போகும்போது கணவன் கண்ணீர் விட்டு அழுகின்றார் எனில் அந்தப் பெண் எத்துணை நற்பேறு பெற்றவளாக இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:  ‘ஒரு பெண் வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்து, பெரும் பாவங்களை விட்டு முற்றிலும் விலகி இருந்து, அவள் இறக்கின்ற வரை கணவனின் மகிழ்வையும் திருப்தியை யும் பெற்றிருந்தாள் எனில் அவள் சுவனவாசி என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்’

இந்த நபிமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தாம் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலா அவர்களின் கணவர் யூசுப் கானின் நண்பர் ஒரியா மக்பூல் ஜான் சொல்வதைக் கேளுங்கள்:

‘ஆண்கள் எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதுவும் யூசுப் கான் போன்ற மிடுக்கான, கம்பீரமான ஆண் மகனைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? எல்லா வேளைகளிலும் அவர் பட்டான்களுக்கே உரிய மிடுக்குடனும் கண்டிப்பான தோரணையுடனும்தான் பார்த்திருக்கின்றேன். அவரை உணர்ச்சிவசப்பட்டு எந்த நாளும் பார்த்ததில்லை. ஆனால் அவர் அந்த மகத்தான பெண்மணியின் மரணத்தின்போது குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.

நியூ யார்க் நகரத்தின் ஒரு செக்குலர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யூசுப் கானின் இரண்டாவது மனைவி ஆவார். எத்தகைய உணர்வும் உந்துதலும் அவரை நியூ யார்க்கிலிருந்து லாகூர் கொண்டு வந்து சேர்த்தது என்பதை யாரால் தான் உணர முடியும்? ஆனால் லாகூரில் அந்த இரண்டு மாடி வீட்டில் அவர் யூசுப் கானின் இரண்டாவது மனைவியாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து அந்த வீட்டில் நிலவிய இணக்கமும், அன்பும், பாசமும் இருக்கின்றதே... அதனை இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குள்ளும் அப்படியொரு இணக்கமும் அன்பும் இழையோடியது. இருவரின் குழந்தைகளும் சகோதர வாஞ்சையுடன் ஒன்றாய்க் கலந்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் கூட அந்நிய உணர்வு அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

குழந்தைகள் முதல் மனைவியை அம்மி (அம்மா) என்றும் இந்தப் பெண்மணியை ஆபா(அக்கா) என்றும் அழைத்து வந்தார்கள். குழந்தைகள் முதல் மனைவியின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வளர, இந்தப் பெண்மணி உலகம் முழுவதற்கும் மேற்கத்திய சிந்தனைகளின் வெற்றுத்தனத்தையும் இஸ்லாத்தின் சத்தியச் செய்தியையும் உணர்த்துவதற்காக எழுத்துப் பணி ஆற்றி வந்தார். அதிலேயே ஓயாமல் ஒழியாமல் ஈடுபட்டு வந்தார்.

- இவ்வாறு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரியா மக்பூல் ஜான் எழுதியிருக்கின்றார்.

அவர் குறிப்பிட்டுள்ள இன்னொரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். மக்பூல் ஜான் எழுதுகின்றார்: “மர்யம் ஜமீலா அவர்கள் மறைந்த நாள் அன்று நான் அவருடைய வீட்டில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தேன். மறைந்த மர்யம் ஜமீலா அவர்களின் கணவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பட்டான் சாகிப் கண்களில் கண்ணீர் மல்க துக்கம் தோய்ந்த குரலில் என்னிடம் சொன்ன வாக்கியம் என்னை உருகச் செய்துவிட்டது. தன்னையும் ஷஃபீக்கா ஆப்பாவுக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன்பு மர்யம் ஜமீலா வசிய்யத் செய்திருந்தாராம். ஆஹா...! என்னே அன்பு.. என்னே பாசம்...! இது போன்ற அன்பும் பாசமும் இஸ்லாத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்ட தூய்மையான உள்ளத்தில்தான் உதிக்கும்.”

ஒரு சான்று

திருப்பத்தைத் தந்த சென்னைவாசி

மர்யம் ஜமீலா இஸ்லாத்தை ஏற்றதில் சென்னைவாசி ஒருவருக்கும் சிறு பங்கு இருந்தது.

அந்த சென்னைவாசியின் பெயர் சி அப்துல் ஜலீல்.

சென்னை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்-ஏ-முகாமியாக இருந்துள்ளார். வணிகராக, பழ வியாபாரியாக, பத்திரிகையாளராக இருந்துள்ளார். உர்துவிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்து வந்துள்ளார்.

அவர் இவ்வாறு மௌலானா மௌதூதி அவர்களின் ஜிந்தகி பாத் மௌத் என்கிற கட்டுரையை (தமிழில் ’மரணத்திக்குப் பின்’ என்கிற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது IFT வெளியீடு. ) ஆங்கிலத்தில் Life after death என்கிற பெயரில் மொழிப்பெயர்க்க அதனை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து அந்தக் காலத்தில் வெளி வந்த முஸ்லிம் டைஜஸ்ட் என்கிற மாத இதழ் வெளியிட, நியு யார்க் நகரில் வாழ்ந்து வந்த மார்கரட் என்கிற யூதப் பெண்மணிக்கு அந்தக் கட்டுரை வெகுவாக கவர, அவர் மௌலானா மௌதூதியுடன் தொடர்புக் கொள்வதற்காக கேப்டவுன் முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகையை தொடர்புக் கொள்ள, அவர்கள் சி அப்துல் ஜலீலைத் தொடர்புக் கொள்ள, மெட்ராசிலிருந்து ஜலீல் சாகிப் முகவரியை அனுப்ப, மார்கரெட் அம்மையார் மௌலானாவைத் தொடர்புக் கொள்ள... அதன் பிறகு நடந்தது வரலாறு ஆயிற்று.

சி. அப்துல் ஜலீல் அவர்களின் அந்த Life after death  என்கிற ஆங்கிலக் கட்டுரை வெளியான அந்த முஸ்லிம் டைஜஸ்ட் நான் மாநில அலுவலகத்தில் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். அப்போது அந்தக் கட்டுரைக்குப் பின்னால் இது போன்ற சரித்திரம் இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இன்று அல்கோபாரிலிருந்து அப்துல் அஸீம் என்கிற பெரியவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இந்த சரித்திர நிகழ்வின் இன்னொரு செய்தியைத் தாங்கியிருந்தது. மேற்படி முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகை, லைஃப் ஆஃப்டர் டெத் கட்டுரை போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த அப்துல் அஜீம் இன்னொன்றையும் சொன்னார்:

“1969-இல் நான் சி. அப்துல் ஜலீல் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னிடம் மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டீஸ் என்கிற நூலைக் காட்டினார்.

அதில் ‘ I am glad to present to you my book , as your translation " LIFE AFTER DEATH" inspired me to discover Islam"  (உங்களுக்கு என்னுடைய நூலை அன்பளிப்பாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் லைஃப் ஆஃப்டர் டெத் என்கிற உம்முடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைதான் என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது) என மர்யம்ஜமீலா அவர்களே கைப்பட எழுதியிருந்தார்.”

மர்யம் ஜமீலாவின் வரலாற்றின் இந்த அம்சம் உண்மையிலேயே மலைக்க வைப்பதாகும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார். அதனை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றார். அது தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகின்றது.
அந்தக் கட்டுரையை நியூயார்க்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி வாசிக்கின்றார். பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
சத்தியத்தைத் தேடியடைகின்ற ஆர்வம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு வழிகாட்டுதல் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதற்காக இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்; எவரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபடுத்திக் கொள்வான் என்பதற்கு மர்யம் ஜமீலாவின் வரலாறு சான்று.

ஒரு கருத்து

காலமெல்லாம் பேசப்படும்

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமும் இன்றைய அழைப்பாளர்களுக்கும் சத்தியப் போராளிகளுக்கும் பெரிதும் ஊக்கமும் உந்துதலும் தருவதாகும். இதனை அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அமீரே ஜமாஅத் குறிப்பிட்டிருப்பதாவது:

“நியூ யார்க்கில் வாழ்ந்து வந்த தீவிரமான, கட்டுக்கோப்பான மதப்பற்று மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்த மர்யம் ஜமீலா குர்ஆனை வாசித்ததன் மூலமாக இஸ்லாத்தின் உண்மைநிலையையும் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதையும் உணர்ந்ததும் சற்றும் தயங்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

எதற்கும் பயப்படவில்லை.

எத்தகைய பேராசைக்கு ஆளாகவில்லை.

உறவினர்களின் அன்புக்குப் பணிந்து விடவில்லை.

எத்தகைய முட்டுக்கட்டைக்கும் குனிந்துபோக-வில்லை.

சத்தியத்தை ஏற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியும் ஊக்கமும் இருந்ததெனில் தன்னுடைய உற்றார் உறவினøயும் பிறந்த நாட்டையும் எல்லாவற்றையும் துறந்து அந்நியமான நாடு ஒன்றுக்கு புலம் பெயர்ந்தார். ஹிஜ்ரத் செய்துவிட்டார். அதன் பிறகு திரும்பிப் போகவே இல்லை.

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இந்தப் பரிமாணம் ஒளிமயமானதாகும். காலமெல்லாம் பேசப்-படக்கூடியதாகும். சத்தியத்தைத் தேடியடைய விரும்பு-கின்ற அனைவருக்கும்ஊக்கம் அளிப்பதாகும்’

ஒரு ஏக்கம்

தமிழில் மொழிபெயர்ப்பது எப்போது?

மேற்கில் உதித்த சூரியனாக அறிவுலகில் ஜொலித்த மர்யம் ஜமீலா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். மாக்கியவல்லியின் உலகாயதச் சிந்தனைகளை நார் நாராய்க் கிழித்திருக்கின்றார். அய்ரோப்பியர்கள் பெரிதும் தூக்கிவைத்துக்கொண்-டாடுகின்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார். வால்டேரின் செக்குலரிசத்தை-யும் சிக்மண்டு ஃபிராடின் பாலியல் சார்ந்த உளவியலையும் ப்பூவென ஊதித் தள்ளியிருக்கின்றார். பிரிட்டிஷ் அறிஞர் தாமஸ் ராபர்ட் மால்தஸின் மக்கள்தொகை அபாய அறிவிப்பையும் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சிந்தனையையும் எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாக, ஆழமாக விமர்சித்திருக்கின்றார் எனில் படிப்பவரின் புருவங்கள் வில்லாய் வளைந்துவிடும்.

மேற்கத்திய சிந்தனைகள் மீதான அவருடைய விமர்சனங்கள் கூர்மையானவை. கனமானவை. காலத்தை வென்று நிற்பவை. அதே சமயம் ஆழமான தத்துவங்-களையும் எளிமையாக, தீர்க்கமாக எழுதுகின்ற வல்லமை அவருக்கு இருந்தது. மர்யம் ஜமீலா அத்துடன் நிற்கவில்லை. இந்த மேற்கத்திய பாடாவதி சிந்தனைகளுக்கு மாற்றாக ஒளிமயமான இஸ்லாமிய அறவுரைகளை அழகாக, தீர்க்கமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

குறிப்பாக வெஸ்டர்ன் சிவிலிசேஷன் அண்டு தி டிஹியூமனைசேஷன் ஆஃப் மேன்கைண்டு என்கிற நூலையும் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ன்ட் பை இட்செல்ஃப் என்கிற நூலையும் இஸ்லாம் அண்டு தி வெஸ்ட் என்கிற நூலையும் சொல்லலாம்.

எளிமையான ஆங்கிலத்தில் ஓட்டமும் துள்ளலும் நிறைந்த நட்பு மணம் கமழ்கின்ற சரளமான நடையில் ஆழமான கருத்துகளை மிகவும் சாதாரணமாக எழுதி முடித்திருக்கின்றார் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலாவின் நூல்கள் தமிழில் வெளியாகாமல் இருப்பது ஒரு குறையே. இனி வருங்காலத்திலாவது அவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.

மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல்:

1. ISLAM VERSUS THE WEST (இஸ்லாம் வர்சஸ் தி வெஸ்ட்)
2. ISLAM AND MODERNISM  (இஸ்லாம் அண்டு மாடர்னிஸம்)
3. ISLAM IN THEORY AND PRACTICE (இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டிஸ்)
4. ISLAM VERSUS AHL AL KITAB PAST AND PRESENT (இஸ்லாம் வெர்சஸ் அஹ்லே கிதாப் பாஸ்ட் அண்டு பிரசன்ட்)
5. AHMAD KHALIL (அஹ்மத் கலீல் - வரலாற்று நாவல்)
6. ISLAM AND ORIENTALISM  (இஸ்லாம் அண்டு ஒரியன்டிலிஸம்)
7. WESTERN CIVILIZATION CONDEMNED BY ITSELF  (வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ட் மை இட்செல்ஃப்)
8.  CORRESPONDENCE BETWEEN MAULANA MAUDOODI AND MARYUM JAMEELAH  (கரஸ்பான்டன்ஸ் பெட்வீன் மர்யம் ஜமீலா அண்டு மௌலானா மௌதூதி)
9. ISLAM AND WESTERN SOCIETY (இஸ்லாம் அண்டு வெஸ்டர்ன் சொசைட்டி)
10. A MANIFESTO OF THE ISLAMIC MOVEMENT (ஏ மானிஃபெஸ்டே ஆஃப் தி இஸ்லாமிக் மூவ்மெண்ட்)
11. IS WESTERN CIVILIZATION UNIVERSAL (இஸ் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் யூனிவர்சல்)
12 WHO IS MAUDOODI ? (ஹு இஸ் மௌதூதி?)
13 WHY I EMBRACED ISLAM  (வை ஐ எம்ப்ரேஸ்ட் இஸ்லாம்)
14 ISLAM AND THE MUSLIM WOMAN TODAY (இஸ்லாம் அண்டு தி முஸ்லிம் வுமன் டுடே)
15 ISLAM AND SOCIAL HABITS  (இஸ்லாம் அண்டு சோஷியல் ஹாபிட்ஸ்)
16 ISLAMIC CULTURE IN THEORY AND PRACTICE (இஸ்லாமிக் கல்ச்சர் இன் தியரி அண்டு பிராக்டீஸ்)
17 THREE GREAT ISLAMIC MOVEMENTS IN THE ARAB WORLD OF THE RECENT PAST (த்ரீ கிரேட் இஸ்லாமிக் மூவ்மென்ட்ஸ் இன் தி அரப் வர்ல்ட் ஆஃப் தி ரிசென்ட் பாஸ்ட்)
18 SHAIKH HASAN AL BANNA AND IKHWAN AL MUSLIMUN (ஷேக் ஹஸன் அல்பன்னா அண்டு இக்வான் அல் முஸ்லிமீன்)
19 A GREAT ISLAMIC MOVEMENT IN TURKEY (ஏ கிரேட் இஸ்லாமிக்மூவ்மெண்ட் இன் துர்க்கி)
20 TWO MUJAHIDIN OF THE RECENT PAST AND THEIR STRUGGLE FOR FREEDOM AGAINST FOREIGN RULE  (டூ முஜாஹிதீன்ஸ் ஆஃப் தி ரீசன்ட் பாஸ்ட் அண்டு தேயர் ஸ்டிரக்கல் ஃபார் ஃப்ரீடம் அகைன்ஸ்ட் ஃபாரின் ரூல்)
21 THE GENERATION GAP ITS CAUSES AND CONSEQUENCES  (தி ஜெனேரேஷன் கேப் இட்ஸ் காசஸ் அண்டு கான்ஸ்க்யூசன்சஸ்)
22 WESTERNIZATION VERSUS MUSLIMS  (வெஸ் டர்னைசேஷன் வர்சஸ் முஸ்லிம்ஸ்)
23 WESTERNIZATION AND HUMAN WELFARE (வெஸ்டர்னைசேஷன் அண்டு ஹியூமன் வெல்ஃபேர்)
24 MODERN TECHNOLOGY AND THE DEHUMANIZATION OF MAN (மாடர்ன் டெக்னாலஜி அண்டு தி டீஹியூமனைசேஷன் ஆஃப் மேன்)
25 ISLAM AND MODERN MAN (இஸ்லாம் அண்டு மாடர்ன் மேன்)‘

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Friday, October 7, 2011

Ameer-e-Jamaat Bereaved



Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat has lost his sister. She passed away yesterday(6th October, 2011) night in Chennai at her son's residence. (Inna lillahi wa inna ilaihi rajeewoon..,.) She had been ill for some time. On hearing this news Ameer-e-Jamaat rushed to Chennai.

Today she was buried in Rahmania Masjid burial ground. Ameer-e-Jamaat led the janaza prayer.

May Allah forgive her and grant maqfirath and Jannah. Ameer-e-Jamaat would be in Chennai for two days.

Sunday, September 25, 2011

My pen has not retired: Moulana Kausar Yazdani


What change you find in the Jamaat’s work?
There was a time, say up to first forty years of the Jamaat’s formation that everyone was very sincere without any concern about personal amenities. Now the situation has changed. Even full time workers’ officialdom and personal concerns have increased at the cost of sincerity. Now it has a become a routine job beginning at, say, 9 A.M. and continuing up to, say, 5 P.M. Earlier the atmosphere was of total devotion to the object of the Jamaat. There are exceptions, no doubt, but my feeling is based on overall atmosphere.

What are your engagements these days?
After retirement from the Jamaat I have kept myself busy in translation work into the Hindi language. I have translated Bukhari in three volumes. A publisher provides me books for translation and I do the job. My pen has not retired.
Moulana Kausar Yazdani in conversation with Dr Waquar Anwar in Radiance weekly. Here


A towering personality among Muslims

Moulana Kausar Yazdani was not just a journalist or writer, but an active worker and a leader also. He became chief of J. I. H. (Delhi & Haryana State) in 1979 and remained so till 1995. At that time, he used to start his day before morning prayers (salat Fajr), read daily news paper and wrote editorial, etc. Later, he worked for the Kanti till about 1’o clock. After 3 or 5’o clock in the afternoon, to 11 in the night, he spent his time, visiting different places of Delhi & Haryana for Dawah and Islamic awekening. It was his daily routine. In 1995 he was called to central office of the Jamaat as its all India secretary to look after the Dawah work from which he just retired. Nadvi translated about 40 books in Hindi and wrote a dozen books.
Javed Ali in Milli Gazette. Here

Moulana Kausar Yazdani was laid to rest in New Delhi

Maulana Dr. Kausar Yazdani, a renowned Islamic scholar, author, journalist, activist and former Secretary for Dawah, Jamaat-e-Islami Hind (JIH), breathed his last on August 29 at his residence in New Delhi following a brief illness. He was 76.

His funeral prayer was led by Amir JIH Maulana Syed Jalaluddin Omari after Zuhr prayers on August 30. He was laid to rest in Batla House Graveyard. He left behind three sons and one daughter.
A report in Radiance Weekly. Here

Tuesday, June 14, 2011

வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று: அமீரே ஜமாஅத் பேட்டி - மூன்றாம் பாகம்


m தேர்தல் அரசியலில் பங்கேற்பது பற்றிய விவகாரத்தில் ஜமாஅத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் இது நம்முடைய கோட்பாட்டுக்கும் சிந்தனைக்கும் நேர்மாறானது என்றும் இப்போதையச் சூழலில் தேர்தல் அரசியலில் பங்கேற்பது என்றும் மற்றவர்கள் எதிர்ப்பதாகவும் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் ஒரு கருத்து காணப்படுகின்றது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் ?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: தற்போது உள்ள ஸிஸ்டம் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது, அசத்தியமானது என்பதிலும் இந்த ஸிஸ்டத்தை மாற்றுவதற்காக ஜமாஅத் பாடுபட வேண்டும் என்பதில் எந்தவிதமான கருத்துவேறுபாடும் இல்லை.

ஆனால் இப்போது நம்முடைய விவாதத்தில் இருக்கின்ற விவகாரம் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்னைகளுடன் தொடர்புடையதாகும். அவர்கள் சிறுபான்மையினராக இருப்பதால் இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகமாகக் கூர்மையடைந்துவிட்டுள்ளன.

தேர்தல் அரசியலில் பங்கேற்பது மூலமாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா  என்பதுதான் இங்கு எழுகின்ற கேள்வி.

இதற்குத் தீர்வுகாண்பதில் இருவேறு கருத்துகள் காணப்படுகின்றன என்பது உண்மையே. அதனைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள். தேர்தல் அரசியலில் பங்கேற்க வேண்டும்; அது ஒட்டுமொத்தமாக நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் நன்மை அளிப்பதாக அமையும் என்பதுதான் பெரும்பாலோரின் கருத்து. இது தொடர்பாக என்னுடைய கருத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பது பொருத்தமாக இராது. என்னுடைய சொந்தக் கருத்து இதற்குச் சாதகமாகவும் இருக்கலாம்; எதிராகவும் இருக்கலாம். ஒரு பொறுப்பாளர் என்கிற முறையில் நான் இந்த விவாதத்தில் விழக்கூடாது.

அண்மையில் நடந்த ஜமாஅத்தின் மத்திய பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் பேசியபோது ‘நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செக்குலரிஸம், சோஷலிஸம், டெமாக்ரஸி ஆகிய சொற்கள் ஒரு தனிப் பொருளில்தான் ஆளப்பட்டிருக்கின்றன. சோஷலிஸம் குறித்து நாட்டின் உச்ச நீதிமன்றம் ‘சோஷலிஸம் என்கிற சொல்  தொடக்கக்காலத்தில் எந்தப் பொருளில் ஆளப்பட்டதோ அந்தப் பொருளில் நாம் அதனை ஆள்வதில்லை. அதற்கு மாறாக சமூக நீதி என்கிற பொருளில்தான் தற்போது ஆளப்படுகின்றது’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி
செக்குலரிஸத்தைப் பொருத்தவரை ரொம்பக் காலத்திற்கு முன்பே அப்போதைய அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி மிகத் தெளிவாக எடுத்துரைத்துவிட்டார். அந்தக் காலத்தில் டாக்டர் சையத் மஹ்மூத் ‘செக்குலரிஸம் குறித்து உங்களுடைய கருத்து என்ன?’ என வினவிய போது மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் ‘செக்குலரிஸம் என்பதற்கு இந்த நாட்டில் எந்தவொரு மதத்தின் ஆட்சியும் இருக்காது; அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள்; அனைவருக்கும் தத்தமது மதத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு முழுமையான சுதந்திரம் உண்டு’ என்பதுதான் பொருள் எனில் நாங்கள் அந்த செக்குலரிஸத்திற்கு எதிரானவர்கள் அல்லர். ஆனால் செக்குலரிஸம் என்பதற்கு இறைவனின் ஆட்சியையும் இறையாண்மையையும் இறைவனின் அதிகாரத்தையும் மறுப்பதுதான் பொருள் எனில் நாங்கள் அதனை எதிர்ப்போம்’ என்று நறுக்குத்தெறித்தாற்போல் பதிலளித்தார். பிற்பாடு மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு மௌலானாவின் விளக்கம் உறுதி செய்யப்பட்டது.

ஜனநாயகம் தொடர்பாகவும் இதே நிலைப்பாடுதான். நான் இதனைக் குறித்து எத்தனையோ தடவை எழுதியிருக்கின்றேன். இறைவனின் அதிகாரத்திற்குப் பதிலாக மனிதர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகம். இதனை நாங்கள் தவறான சிந்தனை என்றே சொல்கின்றோம். ஆனால் ஜனநாயகத்திற்கு இருக்கின்ற சிறப்பு என்னவெனில் அது கருத்து சுதந்திரத்தையும் விருப்பம் போல் செயல்படுகின்ற சுதந்திரத்தையும் வழங்குவதுதான். இந்தச் சுதந்திரமான சூழல் அழைப்புப் பணிக்கும் பரப்புரை செய்வதற்கும் சமூக சீர்திருத்தப் பணிகளுக்கும் களம் அமைத்துத் தருகின்றது. இதனால் தான் இத்தகைய சுதந்திரத்தையும் உரிமைகளையும் மறுக்கின்ற, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நாட்டு மக்கள் அனைவர் மீதும் திணிக்க நாடுகின்ற மற்ற ஸிஸ்டங்களோடு ஒப்பிடும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டத்தை நாங்கள் விரும்புகின்றோம்.

நமது நாட்டில் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது. இதிலிருந்து பயனீட்டுவதற்கு நாம் முயல வேண்டும். இஸ்லாத்தை நல்ல முறையில் அறிமுகம் செய்வதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தைக் குறித்து இங்குக் காணப்படுகின்ற தவறான கருத்துகள், எண்ணங்களைக் களைவதற்கும் முயல வேண்டும். இஸ்லாத்தை மேற்கொள்வதில் நாட்டின் வெற்றியும் உலகத்தின் நன்மையும் அடங்கியிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு மதமோ அல்லது மார்க்கமோ அரசாங்க மதமாக அறிவிக்கப்படுவதற்கு ஜனநாயகம் தடையாக இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள். ஜனநாயக வழியில் செயல்பட்டு இந்தத் தடையை அகற்றுவதற்கான பொருத்தமான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். 

m வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவைக் குறித்து விதவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தால் நிறுவப்பட்ட கட்சி என்றும் இது ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் அணி என்றும் அதனுடைய கடிவாளம் ஜமாஅத்தின் கையில்தான் இருக்கும் என்றும் சிலர் சொல்கின்றார்கள்.  இந்தக் கட்சியை நிறுவியன் மூலமாக ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், கோட்பாடு, செயல்முறை ஆகியவற்றிலிருந்து வழிபிறழ்ந்து சென்று விட்டது என்றும் பொதுவான அரசியல் கட்சியைப் போன்று ஜமாஅத் செயல்படத் தொடங்கிவிட்டது என்றும் சிலர் நினைக்கின்றார்கள். இவற்றைக் குறித்து உங்களுடைய விளக்கம் தேவைப்படுவதாக உணர்கின்றேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: நம் நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் இங்கு நிலைபெற்றுள்ள ஜனநாயக சிஸ்டத்தின் துணையுடன் பிரச்னைகளைத் தீர்க்க விரும்புகின்ற கட்சிதான் வெல்ஃபேல் பார்ட்டி ஆஃப் இந்தியா.

இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளையும், பிற சிறுபான்மை மக்களின் பிரச்னைகளையும், பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளையும் இவ்வாறு அது தீர்க்க விரும்புகின்றது.

இந்த நாட்டில் சற்றொப்ப இருபது கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் எண்ணற்ற பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகளைக் குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய உறுப்பினர்கள் மாநாட்டில் நான் ஆற்றிய தொடக்கவுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன். இது தனி நூலாகவும் வெளியாகியுள்ளது.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் சந்திக்கின்ற பிரச்னைகளில் தலையாயது தமது இருப்பையும் தனித்தன்மையையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொள்கின்ற பிரச்னை ஆகும். மானம், மரியாதையுடன் வாழ வேண்டும் என்பதும் ஒரு சவால்தான். உடல், உயிர், உடைமைகளைப் பாதுகாத்தலும் ஒரு பிரச்னையே. கலவரங்களைத் தடுத்து நிறுத்தலும் அவற்றிலிருந்து மீண்டு எழுதலும் கூட மிகப்பெரும் பிரச்னையே. வறுமை, இல்லாமை, கல்லாமை ஆகியவற்றை ஒழித்துக் கட்டி முன்னேறுவதும் மிகப்பெரும் சவால்தான். மார்க்கக் கல்வியுடன் உலகக்கல்வியில் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்வதும் மதரஸாக்களை நிறுவி வெற்றிகரமாக நடத்துதலும், பள்ளிவாசல்களை நிறுவுதலும் முஸ்லிம்களின் முக்கிய பிரச்னைகளே. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையீட்டைத் தடுத்துநிறுத்துதலும், வக்ஃப் சொத்துகளை மீட்டெடுத்தலும் பாதுகாத்தலும் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தலும் அவர்களின் பிரச்னைகளில் அடங்கும். இதே போன்று நீதியையும் நியாயத்தையும் வென்றெடுத்தலும், அக்கிரமம், கொடுமை ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தலும் தக்க இழப்பீடுகளை ஈட்டலும் உட்பட எண்ணற்ற பிரச்னைகளை இன்றைய இந்திய முஸ்லிம்கள் சந்தித்து நிற்கின்றார்கள். இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் ஜமாஅத் தொடக்கத்திலிருந்தே கையிலெடுத்துக்கொண்டு தீர்ப்பதற்காக முயன்று வந்துள்ளது. இவற்றைத் தீர்ப்பதற்காக அரசியல் அரங்கிலும் அது தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

நம் நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையிலான சிஸ்டமும் அது வழங்கியிருக்கின்ற மனித உரிமைகளும்  நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் ஜமாஅத் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பரிணாமமாக இருந்துள்ளது. நெருக்கடி நிலையின்போது நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை அகற்றிவிட்டு ஒரு தனி மனிதனின் விருப்பங்களின்படி நாட்டை ஆட்டுவிக்க முயற்சிகள் நடந்தன. ஒரு வகையில் சர்வாதிகாரம் தலையெடுக்கத் தொடங்கியது. ஜமாஅத் இந்தப் போக்கை முழுமையாக எதிர்ப்பதெனத் தீர்மானித்தது. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கும் பாடுபட்ட அரசியல் கட்சிகளுக்கு முழு ஆதரவை அளித்தது. ஏனெனில் அதில்தான் நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை இருந்தது. ஜமாஅத் மீண்டும் தன்னுடைய பணிகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் மலர்வதற்கும் அது அவசியமாக இருந்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது. முஸ்லிம்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் அணுகுகின்ற கட்சிகளுக்கும், முஸ்லிம்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்த கட்சிகளுக்கும், நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை நடைமுறைப்படுத்துதல் அவசியம் என்று கருதியும் இந்த விஷயத்தில் பல்வேறு மனிதர்கள், மனிதக் குழுக்களிடையே காட்டப்படுகின்ற பாரபட்சம் சரியன்று என்று கருதியும் வந்த கட்சிகளுக்கும் ஜமாஅத்தும் ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு கட்சியும் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதே கிடையாது. அதற்கு மாறாக தமது நலன்களை மையமாகக் கொண்டே இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் இயங்கி வந்துள்ளன. இதுதான் இன்று வரை நடந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஜமாஅத்துக்கு இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று சமுதாயத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஜமாஅத்தே நேரடியாகக் களத்தில் இறங்கி விடுவது. அல்லது இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பது. பிற சிறுபான்மை சமூகத்தினரும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து நிற்கின்றார்கள். அவர்களையும் அதில் சேர்த்துக் கொண்டு செயலாற்றுவது.

இந்த இரண்டு வழிகளில் இரண்டாவதை ஜமாஅத் எடுத்துக்கொண்டது. ஜமாஅத் தன்னுடைய குறிக்கோள், செயல்திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டிருக்கும். அதே சமயம் சமுதாயத்தின் பிரச்னைகளையும் பிற சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்னைகளையும் தீர்ப்பதற்காகவும் அவற்றை அரசியல் அரங்கில் கொண்டு செல்வதற்காகயும் ஒரு சுதந்திரமான அரசியல் கட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே ஜமாஅத்தே இஸ்லாமி தீர்மானித்தது. இதன் விளைவாகத்தான் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா உதயமானது. இதனை நீங்கள் வெளிப்படையாகப் பார்க்கலாம். அந்தக் கட்சியின் பொறுப்பாளர்களில் ஜமாஅத்தைச் சேர்ந்த தோழர்களுடன் சமுதாயத்தின் முக்கியமான ஆர்வலர்களும் இருக்கின்றார்கள். இதே போன்று முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவமும் அதற்குக் கிடைத்திருக்கின்றது.‘
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாத் தலைவர்கள்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா குறித்து சில விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடுவது அவசியம் என்றே நினைக்கின்றேன். முதலாவதாக இது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி அன்று. ஜமாஅத்தின் முன்முயற்சிகளால் உருவான கட்சிதான் அது. இரண்டாவதாக, இந்தக் கட்சி தீர்க்கமான, வரையறுக்கப்பட்ட நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டதாகும். அந்த நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்பது குறித்தும், ஜமாஅத்துடன் அதன் தொடர்பும் உறவும் எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும் ஜமாஅத்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்தே எல்லாமே வரையறுக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. “இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் முக்கியமான நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், மாண்புகளின் அடிப்படையிலான அரசியலைச் செழித்தோங்கச் செய்வதற்காகவும், பொதுமக்களின் நலன்களுக்காகவும், அவர்களின் வளவாழ்வுக்காகவும், நீதி, நியாயத்தை நிறுவுவதற்காகவும் அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். அந்த அரசியல் கட்சி உருவாவதற்காக ஜமாஅத் முன்முயற்சிகளை மேற்கொள்ளும். இந்தக் கட்சியின் நோக்கங்களை ஏற்றுக்கொள்கின்ற முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் இந்தக் கட்சியில் பங்கேற்பார்கள். இவர்களில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினர்களும் அடங்குவர். இந்தக் கட்சி சுதந்திரமாகச் செயல்படும். இந்தக் கட்சி மேற்கொள்கின்ற பாராட்டத்தக்க நற்பணிகளுக்கு ஜமாஅத் ஆதரவளிக்கும். அதே சமயம் அவற்றுக்குப் பொறுப்பேற்காது” என ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஆலோசனைக் குழுவின் தீர்மானத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அரசியல் கட்சி சொல்வதும், அதற்கும் மேலாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய நோக்கத்திலிருந்தும் செயல்திட்டத்திலிருந்தும் வழிபிறழ்ந்துவிட்டது என்று தெரிந்தோ தெரியாமலோ அல்லது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதும் முழுக்க முழுக்க தவறு ஆகும். இன்ஷா அல்லாஹ், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தன்னுடைய குறிக்கோளிலும் நோக்கத்திலும் நிலைத்து நிற்கும்; நாட்டு மக்களுக்கு இஸ்லாத்தை ஓர் மாற்று வாழ்க்கைத்திட்டமாக அறிமுகப்படுத்துகின்ற போராட்டத்தை முழுவீச்சுடன் தொடர்ந்து மேற்கொள்ளும் என நான் அழுத்தம்திருத்தமாகவும் ஆணித்தரமாகவும் அறிவிக்க விரும்புகின்றேன். இதற்காக வேண்டி வழக்கம்போல இந்த மீக்காத்திலும் விரைவில் கொள்கை மற்றும் செயல் திட்டத்தை வகுக்கும் என்றும் அறிவிக்கின்றேன்.

m கடந்த மீக்காத்தில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தது. இதற்கு முன்பும் சில நாடுகளுக்கு நீங்கள் சென்று வந்துள்ளீர்கள். இந்தச் சுற்றுப்பயணங்களின்போது முஸ்லிம் சிந்தனையாளர்கள், உலகத் தலைவர்கள் பலருடனும் பேசியிருக்கின்றீர்கள்; கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். உலக அரங்கில் இந்தியாவைக் குறித்தும் குறிப்பாக இந்திய முஸ்லிம்கள் குறித்தும், இந்திய இஸ்லாமிய இயக்கம் பற்றியும் மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது குறித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: பரப்பளவிலும் சரி, இயற்கை வளங்களிலும் சரி, மக்கள் தொகையிலும் சரி, மனித வளத்திலும் சரி நமது நாட்டுக்குத் தனிச் சிறப்பும் இடமும் உலக அரங்கில் இருக்கின்றது. அண்மைக்காலமாக அறிவியல் தொழில்நுட்பக் களத்தில் நம் நாடு ஈட்டியிருக்கின்ற சாதனைகளும் நம் நாட்டின் மதிப்பைக் கூட்டியிருக்கின்றது. இந்தக் காரணங்களால் முஸ்லிம் நாடுகள் நம் நாட்டுக்குத் தனி முக்கியத்துவத்தை அளிக்கின்றன. வளர்ந்து வரும் நாடுகளிலும் நம் நாட்டுக்குத் தனி மரியாதை இருக்கின்றது. இது எல்லாராலும் உணரப்படுகின்றது. முஸ்லிம் நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளும் பல்வேறு களங்களில் நமது நாட்டின் திறமைகளையும் ஆற்றல்களையும் பயன்படுத்தி வருகின்றன. மறுபக்கம் இங்கு இருக்கின்ற வறுமை, கல்லாமை, மனித நேயமின்மை, சமத்துவமின்மை, சமநிலையற்ற பொருளாதார வளர்ச்சி ஆகியவை நமது நாட்டின் இந்த ஒளிமயமான சித்திரத்தைக் குலைத்து வருகின்றன. இதனை அவ்வளவு எளிதாகப் புறம்தள்ளி விட முடியாது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் என்னவோ சிறுபான்மை மக்களாகத்தான் இருக்கின்றார்கள். ஆனால் இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இங்குதான் அதிக அளவில் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இந்த அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இந்த நாட்டு முஸ்லிம்கள் ஒளிமயமான வரலாற்றுப் பாரம்பர்யத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒளிமயமான வரலாற்றுச் சுவடுகளையும் உலக  மக்கள் அறிந்தே இருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் இந்தியாவில் முஸ்லிம்கள் கல்வி, அரசியல், பொருளாதாரக் களங்களில் மிகவும் பின்தங்கியிருக்கின்றார்கள் என்பதையும் சில துறைகளில் நாட்டின் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களை விடவும் நலிந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதையும் பார்க்கும் போது அவர்கள் வருத்தப்படுகின்றார்கள். அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும் செய்கின்றார்கள். சில சமயம் முஸ்லிம்களிடையே புரையோடியிருக்கின்ற சில பலவீனங்கள் - குறிப்பாக இஸ்லாமிய போதனைகளைத் தெளிவாக அறியாத நிலை, அறியாமை, ஒற்றுமையின்மை - குறித்தும் பேச்சில் அடிபடுவதுண்டு. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற, முஸ்லிம்கள் ஆட்சி செலுத்துகின்ற நாடுகளிலும் இந்தப் பலவீனங்கள் காணப்படத்தான் செய்கின்றன. என்றாலும் பலவீனங்கள் எந்நிலையிலும் பலவீனங்கள்தாம். அவை எந்த சமூகக் குழுக்கள் மத்தியில் காணப்பட்டாலும் சரியே.

இந்தியாவில் செயல்படுகின்ற மிகப்பெரும் முஸ்லிம் அமைப்பு என்கிற வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கு முஸ்லிம் உலக நாடுகளில் தனி மரியாதையும் சிறப்பும் இருக்கின்றன. ஜமாஅத்துக்குத் தனி முக்கியத்துவம் தரப்படுகின்றது. அழைப்பியல், கல்வி ஆகியக் களங்களில் ஜமாஅத் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் சமூக சீர்திருத்தப் பணிகள் பற்றியும் மக்கள் சேவைக் களத்தில் ஜமாஅத் மிகப்பெரும் அளவில் ஆற்றி வருகின்ற சேவைகள் குறித்தும் ஏதாவதொரு வகையில் அவர்கள் அறிந்தே இருக்கின்றார்கள். இந்த அளவுக்கு பல்வேறு களங்களில் விரிவாகவும் திட்டமிட்ட முறையிலும் செயலாற்றுகின்ற அமைப்பு வேறு எதுவும்  கிடையாது என்றும் அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். குறிப்பாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் அருளால் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாட்டின் பல்வேறு மொழிகளில் திருக்குர்ஆனின் மொழிபெயர்ப்பபைப் பதிப்பித்து வெளியிட்டு ஆற்றியிருக்கின்ற சேவையை முஸ்லிம் உலகம் பெரிதும் மதிக்கின்றது.  

m ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் செயற்களம் இந்திய நாடுதான் என்பது என்னவோ உண்மையே. இருந்தாலும் இஸ்லாம் வழங்கும் தூது உலகளாவிய  தூதாக இருப்பதால் ஜமாஅத் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களைக் கவனித்து வந்திருக்கக்கூடும் அல்லவா? அருள்கூர்ந்து அந்த இஸ்லாமிய இயக்கங்களுடன் ஜமாஅத்துக்கு இருக்கின்ற தொடர்பையும் உறவையும் குறித்து ஒரிரு வார்த்தைகள் சொல்லுங்களேன்.

மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: உலகின் பல்வேறு நாடுகளிலும் இஸ்லாத்தை மேலோங்கச் செய்வதற்காக இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது உண்மையே. இந்த அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்துக்கும் உலகின் பிற பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் இடையில் ஒரு விதமான சித்தாந்தத் தொடர்பு இருக்கின்றது. அதே சமயம் இங்கு ஓர் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. ஜமாஅத்தே இஸ்லாமிக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்ற இஸ்லாமிய இயக்கங்களுக்கும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒற்றுமை இருந்தாலும் செயல்முறைகளில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் நிறைய இருக்கின்றன. இந்த இயக்கங்கள் வெவ்வேறு செயல்முறைகளுடன் களத்தில் இருக்கின்றன. நாம் இங்கு ஒவ்வொரு நான்கு ஆண்டுகளிலும் நாட்டின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு செயல்முறையை வரையறுக்கின்றோம். உலகின் பிற பகுதிகளில் இயங்குகின்ற இயக்கங்களும் தத்தமது நாட்டு நிலைமைகளுக்கேற்ப சிந்தித்துச் செயலாற்றுகின்றன. இதனால்தான் ஒருமித்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த போதிலும் முற்றிலும் மாறுபட்ட செயல்முறைகளைக் கொண்டு இந்த இயக்கங்கள் இயங்கிவருகின்றன. 

m மத்தியக் கிழக்கிலும் வட ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளிலும் மக்கள் எழுச்சிஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக, இஸ்லாமிய எழுச்சியாகச் சொல்லலாமா? இஸ்லாத்தின் பக்கம் மீள்வதை உணர்த்துகின்ற அறிகுறிகளாக இந்த மக்கள் எழுச்சிகளைச் சொல்லலாமா?


மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி: எகிப்து, சிரியா, துனிஸீயா, ஏமன், லிபியா போன்ற நாடுகளில் மிகப் பெரும் மாற்றங்களும் மக்கள் எழுச்சியும் மலர்ந்துள்ளன. ஆனால், அங்கு இன்னும் இஸ்லாத்தைக் குறித்து வெளிப்படையான விவாதம் நடக்கவில்லை; அதற்கு மாறாக, அந்த நாடுகளில் பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள்தாம் மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன என்றே நான் கருதுகின்றேன்.
இந்த நாடுகளில் நடந்து வந்த அரசியல் கொடுமைகள், அவற்றின் பொருளாதார வீழ்ச்சி, நாட்டு வளங்களின் மீது ஒரு குறிப்பிட்ட சமூகக்குழுவினரின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த இழிநிலை, பொதுமக்களுக்கு அந்த வளங்-களில் எத்தகைய பங்கும் கிடைக்காமல் போன அவலம், இந்தக் கொடுமைகளுக்கும் அவலங்களுக்கும் இழிநிலைகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டச் சூழல் ஆகிய அனைத்துமே அப்பட்டமான அக்கிரமங்களாக, உரிமைமீறல்களாக இருந்தன. அக்கிரமங்களும் கொடுமைகளும் எல்லை மீறிப் போகும்போது அவற்றுக்கு எதிராகக் கலகம் வெடிக்கின்றது. இந்த நாடுகளில் இதுதான் நடந்திருக்கின்றது.
அத்துடன் இந்த நாடுகளில் ஒருபக்கம் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதாக உரக்க முழங்கப்பட்டு வந்தது. மறுபக்கம் சமூக வாழ்விலும் பிற கூட்டு விவகாரங்களிலும் இஸ்லாமிய போதனைகள் கருத்தில் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தன. அதற்குப் பதிலாக மேற்கத்திய சித்தாந்தங்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டு வந்தன. இஸ்லாத்திற்குப் பதிலாக மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. இதனை இந்நாடுகளின் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் கண்கூடாகப் பார்த்து வந்திருக்கின்றார்கள். இந்த அவலத்தைப் பார்த்து கவலைப்பட்டு வந்தவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்களில் அதிகமாக இருந்தார்கள்.

எகிப்தில் அதிபர் நாஸர் காலத்திலிருந்து இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது பற்பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இக்வான் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; தூக்கிலிடப்பட்டனர்.  இக்வான்கள் சிறையிலடைக்கப்பட்டனர். இக்வான் இயக்கம் தடை செய்யப்பட்டது. இக்வான்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் கொடூரங்களுக்கும் ஈடிணை இல்லை. கம்யூனிஸ்ட் நாடுகளில் நடந்த அக்கிரமங்களை வேண்டுமானால் அதற்கு இணையாகச் சொல்லலாம். இந்த வரலாற்றை நம்மில் அனைவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம்.

பல பத்தாண்டுகளாக இக்வான் இயக்கம் மீது பலவிதமான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டிருந்தன. இப்போது அந்த இயக்கத்திற்கு சுதந்திரம் கிடைத்திருக்கின்றது; ஒரு வலுவான சக்தியாக அது மிக வேகமாக பேருருவம் எடுத்து வருகின்றது. அதன் சக்தியை உலக நாடுகள் உணரத்தொடங்கியிருக்கின்றன.  எகிப்தில் கட்டுப்பாட்டுடன் செயல்படுகின்ற வலுவான இயக்கம் ஒன்று இருக்கின்றதெனில் அது இக்வானுல் முஸ்லிமீன் இயக்கம்தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஹுஸைன் ஒபாமா ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார்.

ஆனால், இந்த வேளையில் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி பணியாற்றினால் நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் ஆதரவு கிடைக்காது. இன்று வரை ஆட்சியில் இருந்த சக்திகள் - இஸ்லாத்திற்கு எதிராகச் செயலாற்றி வந்த சக்திகள் - மீண்டும் இக்வானின் இஸ்லாமிய அழைப்புக்கு எதிராக வீறு கொண்டு எழுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என்றே இக்வானிகள் நினைக்கின்றார்கள். எனவே முதற்கட்டமாக நாட்டில் ஜனநாயகம் நிலைபெறுவதற்காகப் பாடுபடுவது; அதற்காக உரத்துக் குரல் கொடுப்பது என்கிற வியூகத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கின்றார்கள். ஜனநாயகச் சூழல் தழைத்தோங்கினால் எகிப்தியர்கள் அனைவருக்கும் கருத்து சுதந்திரம் கிடைத்துவிட்டால் எகிப்து மக்களுக்கு இஸ்லாத்தைத் தவிர வேறு எந்தவொரு சிஸ்டத்தை ஏற்றுக் கொள்கின்ற வாய்ப்பே இருக்காது என்று அவர்கள் கணித்திருக்கின்றார்கள்.

உண்மை என்னவெனில் இன்று லிபியாவிலும் சரி, பஹ்ரைனிலும் சரி, சிரியாவிலும் சரி, ஏமனிலும் சரி எங்குமே இஸ்லாம் விவாதப்பொருளாக ஆகவே இல்லை. இந்த நாடுகளில் அடக்குமுறை, கொடுமை, பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராகத்தான் மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். அதே சமயம் இந்த நாடுகளில் ஜனநாயகம் மலர்ந்து மக்களுக்கு சுதந்திரமாகச் செயல்படுகின்ற உரிமையும் சுதந்திரமும் கிடைக்கின்ற போது அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் இஸ்லாத்தையே விரும்புவார்கள் ; இஸ்லாத்தின்படி கூட்டுவாழ்வைக் கட்டமைக்க நாடுவார்கள் என்றே உறுதியாக நம்பலாம்; எதிர்பார்க்கலாம்.
தமிழில் : T.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் 

Parvaz Rahmani, Editor, Dawat interviews Moulana Syed Jalaludeen Umari, Ameer-e-Jamaat. Translated by T Azeez Luthfullah. 
To be continued... 

Saturday, April 9, 2011

மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் மறைவு



முதுபெரும் இஸ்லாமிய இயக்கத் தலைவரும் ஜமாஅத்தே இஸ்லபாமி ஹிந்த் பேரியக்கத்தின் முன்னாள் அகில இந்தியத் துணைத் தலைவருமான மௌலானா முஹம்மத் ஷஃபி மூனிஸ் சாஹிப் 6 ஏப்ரல் 2011 அன்று காலமானார். (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

அவருக்கு வயது 94. மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி காலத்தில் இயக்கத்தில் இணைத்துக் கொண்ட மூத்த இயக்கத் தலைவர் அவர். அவருடைய மறைவுடன் ஒரு யுகம் நிறைவு பெற்றுவிட்டது எனலாம். இயக்கத்தின் தொடக்கக்காலத்திலிருந்து அதன் ஏற்றஇறக்கங்களுடனும் வெற்றி தோல்விகளுடனும் பின்னிப் பிணைந்திருந்தவர் மௌலானா ஷஃபி மூனிஸ்.

அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினமே என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தம்முடைய இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.


உத்திரப் பிரதேசத்தில் ஒரு  கிராமத்தில் பிறந்தவர் அவர். தொடக்கத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்திருந்தார். அதிலும் சோஷலிஸ கொள்கைகளைப் பேசி வந்த காங்கிரஸ் குழுவினருடன் தொடர்பு வைத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஒரு ஸலஃபி ஆலிமுடன் பழக்கம் ஏற்பட்டது. இவருடைய அறிவுக்கூர்மையையும் சமுதாயச் சிந்தனையையும் உளத்தூய்மையையும் பார்த்த அந்த ஸலஃபி அறிஞர் இந்த இளைஞரை எப்படியாவது கவர வேண்டும் என்கிற எண்ணத்துடன் நெருங்கிப் பழகினார். ஆனாலும் ஷஃபி மூனிஸ் படிகின்ற மாதிரி தெரியாததால் நூல்களைக் கொடுக்கத் தொடங்கினார். அவ்வாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட நூல்களில் ஒன்றுதான் ‘இஸ்லாம் அவ்ர் மௌஜுதா ஸியாஸி கஷ்மகஷ் . இஸ்லாமும் தற்போதைய அரசியல் போராட்டமும்’ என்கிற நூல். மௌலானா சையத் அபுல் அஃலா மௌதூதி அவர்கள் எழுதிய நூல் அது. இளைஞர் ஷஃபி மூனிஸின் பார்வையையும் சிந்திக்கும் கோணத்தையும் முற்றாக மாற்றி அமைத்துவிட்டது அந்நூல்.

அந்நூல் படித்து இயக்கப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய ஷஃபி மூனிஸ் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை. காஜியாபாத் மாநகர ஜமாஅத் கிளைத்தலைவர், தில்லி மாநகர ஜமாஅத் தலைவர், தில்லி மாநிலத் தலைவர், அந்தக் காலத்து ஹைதராபாத் மாகாணத் தலைவர், மேற்கு உத்திரப்பிரதேச மாநிலத் தலைவர் என அடுத்தடுத்து பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தன.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் அவர் சில காலம் செயலாற்றியிருக்கின்றார். ஜமாஅத்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபை, மத்திய ஆலோசனைக் குழு ஆகியவற்றின் உறுப்பினராக பல்லாண்டுகளாக மீண்டும் மீண்டும் தேர்வாகி வந்துள்ளார். தற்போதைய மத்தியப் பிரதிநிதிகள் சபையிலும் அவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

மௌலானாவுக்கு வயது 94. இறுதி மூச்சு வரை இயக்கப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சத்தியப் போராளிதான் அவர். அவர் ஓர் அறப் போராளியாக, நிர்வாகியாக, இயக்கச் சிந்தனையாளராக, வழிகாட்டியாக தம்முடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்துவிட்டவர் அவர்.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸே முஷாவரத், ஃபாரம் ஃபார் டெமாக்ரஸி அண்டு கம்யூனல் அமிட்டி, தி ஸ்காலர் ஸ்கூல் உட்பட ஏராளமான அமைப்புகளின் உருவாக்கத்தில் அவரும் பெரும் பங்கு வகித்திருக்கின்றார். மௌலானா ஷஃபி மூனிஸ் அவர்களின் நேர்காணல்களை அபூர்வமாகத்தான் படித்திருப்பீர்கள். சமரசத்தில் ஃபாரம் தொடர்பாக நேர்காணல் ஒன்று வந்திருக்கின்றது. அவருடைய செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகளும் அதிகமாக வெளி உலகுக்குத் தெரிவதில்லை. அவருடைய புகைப்படமும் அதிகமாக பதிவாவதில்லை. என்றாலும் மௌன உழைப்பாளியாக இயக்கப் பணிகளில் இரண்டறக் கலந்துவிட்டிருந்தார் அவர். இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து அதனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர். ஷஃபி மூனிஸ் என்றால் ஜமாஅத்தே இஸ்லாமி என்கிற அளவுக்கு இயக்கத்தையும் தன்னையும் பின்னிப் பிணைத்துக் கொண்டவர்.
6 ஏப்ரல் அன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு தில்லியில் பட்லா ஹவுஸ் அடக்கத்தலத்தில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்தியப் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடந்துகொண்டிருந்ததால் ஜமாஅத்தின் முக்கியமான மனிதர்கள் அனைவரும் அங்கு திரண்டுவிட்டிருந்தனர். அகில இந்தியத் தலைவர், பொதுச் செயலாளர், அகில இந்தியச் செயலாளர்கள், மத்தியத் தலைமையகப் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்கள், மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சிந்தனையாளர்கள், ஊழியர்கள் என ஜமாஅத்தின் ஒட்டுமொத்த பட்டாளமே அங்குத் திரண்டுவிட்டிருந்தது. ஆக, மௌலானா ஷஃபி மூனிஸ் எந்த மனிதர்களை தனது அன்புக்குரியவர்களாக மதிப்புக்குரியவர்களாக நேசித்து வந்தாரோ, எவர்களுக்கு தன்னுடைய வாழ்வில் மற்றெல்லாரை விடவும்மிக அதிகமான முக்கியத்துவம் கொடுத்து வந்தாரோ அவர்கள் எல்லாருமே அங்கு குழுமி விட்டிருந்தனர்.

மௌலானாவுக்கு இயக்கம்தான் எல்லாமே. இயக்கம், இயக்கம், இயக்கம் என்று ஓயாமல் ஒழியாமல் பாடுபட்டார் அவர். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தபோது அந்த இயக்கமே - ஒட்டுமொத்த இயக்கமே- அவரை வழியனுப்பத் திரண்டுவிட்டது. அந்தக் காட்சி நெஞ்சை நெகிழச் செய்வதாக இருந்திருக்க வேண்டும்.

ஸஆதத்துல்லாஹ் ஹுஸைனி எழுதுகின்றார்:

கடந்த ஏப்ரல் 3 முதல் 7 வரை நடந்த மத்தியப் பிரதிநிதிகள் சபை கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். மௌலானா ஷஃபி மூனிஸ் தள்ளாத வயதிலும், உடல் நலம் குன்றிய நிலையிலும் மத்தியப் பிரதிநிதிகள் சபையின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடப்பதற்கு முன்பு ஏப்ரல் 2 அன்று நடந்த மத்திய ஆலோசனைக் குழுவின் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அவர் எனக்கு எதிரில்தான் அமர்ந்திருந்தார். புன்னகை ததும்ப அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்த காட்சி இன்றும் என்னுடைய மனத்திரையில் பதிந்திருக்கின்றது.
அவர் எங்களுடம் ஏப்ரல் 5 மாலை வரை இருந்தார். மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டில் தன்னுடைய வாக்குகளைப் பதிவு செய்து, கையெழுத்திட்டு, பொறுப்பாளர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் போனார். அவர் போகும் போது நண்பர்கள் பலரையும் சந்தித்து கைகுலுக்கிவிட்டே சென்றார். நானும் அவருடன் கூடவே பேசிக்கொண்டே நடந்து சென்று வழியனுப்பிவிட்டுத்தான் வந்தேன். அடுத்த நாள் அவர் வர மாட்டார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
அடுத்த நாள் காலை அமர்வில்தான் அந்தச் செய்தி வந்தது. மௌலானா அவர்கள் இரவு படுத்துக் கொண்டிருந்த நிலையில் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அந்தச் செய்தி. அன்று மதியமே அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்தது. நாங்கள் எல்லோருமே அவருடைய வீட்டுக்குப் போனோம். அவர் மிகவும் நிம்மதியாகப் படுத்துக் கொண்டிருந்தார். அவருடைய அதரங்களில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று கண் திறப்பார் :  “ஹதராபாதிலிருந்து ஏதாவது புதிய செய்தி இருக்கின்றதா? ஏதாவது நல்ல செய்தி உண்டா?” என விசாரிப்பாரோ என்றே தோன்றியது.

نشان  مرد   مومن   باتو   گویم 

  چوں مرگ آید تبسم بر لب اوست

“ஒரு நம்பிக்கையாளனின் அடையாளத்தைச் சொல்லட்டுமா? மரணம் வரும்போது அவருடைய முகத்தில் புன்னகை இருக்கும்” என்கிற பாரசீக கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்று மாலை அவருடைய உடலை ஜமாஅத் தலைமையகத்திற்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.  அன்று இரவு இஷாவுக்குப் பிறகு நடந்த ஜனாஸா தொழுகையிலும் தொடர்ந்து நல்லடக்கத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றார்கள்.
அவர் ஜமாஅத்துக்காகவே வாழ்ந்தார். ஜமாஅத்தின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கு சாட்சியானார். ஜமாஅத்தின் முக்கியமான அகில இந்திய அமர்வு ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அவர் இறந்து போனார்.  

Wednesday, April 6, 2011

Moulana Syed Jalaluddin Umri re-elected as Ameer-e-Jamaat


Moulana Syed Jalaluddin Umri has been re-elected as Ameer-e-Jamaat. Allah Hu Akbar. He has been re-elected for the term April 2011 to March 2015.

He is from Puttagaram village near Tirupattur town in Tamil Nadu. He graduated from Jamia Darussalam, Omerabad and straight away joined the Markaz Jamaat in his teen years. He was just 19 years old when he landed in North India coming all the way from southern most part of the country. It seems as though he was destined to serve for the cause of Islam in that way. Then he never turned back. He was fortunate enough to grow in the guidance and shadow of leading lumineries of  the Islamic Movement. At those times the Headquarters of the Jamaat was based in Rampur. Moulana made it his first home.

He served the cause of Deen-e-Huq in various capacities. He was Ameer-e-Muqami of Aligarh for ten years. He has been getting elected to the Markazi Majlis-e-Numaindgan and Central Advisory Council for many decades. He has served the mission as Naib Ameer-e-Jamaat since 1990. He edited the official organ of the Jamaat 'Zindgi-e-Nau' for five years. He assumed this onerous task after the demise of Moulana Syed Ahme Urooj Qadiri. Besides he has been editing the research journal 'Tahqeeqat-e-Islami' for the past thirty years.  

Moulana Syed Jalaluddin Umari was one of the founder members of All India Muslim Personal Law Board (AIMPLB) and he is attached with various prominent educational institutions too. He is currently serving as Chairman of Idara-e-Tahqeeq-o-Tasneef-e-Islami Aligarh, an unique research institution in this country. Besides he is the Chancellor of Jamiatul Falah, Bilarya Ganj, Azamgarh (U.P.) and Jamiatus Suffa, Warangal (A.P.). More Here

He is one of the great scholars living amidst us. He is a prolific writer. He has written more than 36 books on various subjects. Many of his books have been translated in various languages. He penned down a voluminous book on M'aruf-o-Munkar and it has been translated in Arabic, English, Turkish, Tamil, Bengali and Hindi. His another work on Islam aur wahdat-e-Bani Adam has been translated in English, Hindi, Telugu, Marathi, Gujarati, Kannada and Tamil. 

By Allah's grace I had the privilege of translating some of his books. Islam aur Wahdat-e-Bani Adam and Aurat aur Islam have been published as ஒன்றே குலம் ஒருவனே தேவன் and பெண்களும் இஸ்லாமும் Allah is Great.

Wednesday, May 12, 2010

What is annoying me more is the growing influence of western culture, says Ameer, Jamaat-e-Islami Hind


There is a saying that 'Out of sight, out of mind'. That is why visiting each other, meeting friends is necessary to sustain friendship and relations. 

You meet a lot of people with varied backgrounds and tastes. Years pass by and you forget them. But sometimes you maintain a sweet memory of a long lost friend without meeting him for years together. Then one fine morning when you get a pleasing news about a long lost friend, how would you feel? Elated? Excited? Jubilant? Delighted? 

I felt so when I received an email with an interview given by Moulana Syed Jalaluddin Umari. It was sent by Br N. Ataullah. I was elated when I read the name of the interviewer. The words 'by Sharfuddin B.S, Kuwait.' glittered in RED.

Memories of meeting this brother lingered in my mind. I met him in Chennai then Madras at IIFSO meet twenty three years ago. We visited the Chennai Book fair. He was searching a book titled 'A Caravan of dreams' written by Idhris Shah. We had tea and butter biscuits in a restaurent. When we were waiting for tea, he did a startling act. He pulled a cigarette from a pack and started smoking. The poise, sityle, and the confidence with which he smoked was cahrming. Nowadays nobody smokes in SIO circle. We talked of current affairs. I don't remember the details. 

I have never met him again. But I have been following him over the years. Br Abdus Salam puttege was one of his friends who used to visit Chennai for printing Kannada Translation of Quran. Once Moulana M. A. Jameel Ahmed narrated an incident involving Br Sharfuddin Banagal (B is for Banagal). It was of a magnificent lecture delivered by Br Sharfuddin on Seerah at a non-Muslim gathering. I remember the joy with which Moulana M. A. Jameel Ahmed mentioned this incident. Br Sharfuddin was attached with Sanmarga kannada weekly. He was the Sub-Editor there. I preserved his visiting card for many years. Years later when I became sub-Editor of Samarasam Tamil Fortnightly I made my visiting card in a similar design. 

I could not meet him again. Twenty three years have passed. Now when I saw his write-up and photo with the Ameer-e-Jamaat, I was.... Oh! leave it yaar. Over to the interview.

Moulana Syed Jalaluddin Umari, a prominent Islamic Scholar acclaimed for his great works in Urdu Islamic literature, also leads Jamat-e –Islami Hind, as its All India President. Besides being an Islamic scholar, Moulana Jalaluddin, a septuagenarian leader has thorough comprehension of national and international issues that differentiates him from traditional Moulavis. He is bestowed with knowledge of a scholar, charisma of a leader, vision of a visionary, deliberations of a thinker and above all thorough comprehension of current affairs.   He was in Kuwait as a guest of ministry of Awkaf and Islamic Affairs and participated in IMA Youth Wing’s one-day conference organized under the patronage of Ministry of Awkaf and Islamic Affairs.

Here are the excerpts from his of interview with him taken at Le Meridian Hotel, Kuwait.


While India’s GDP is growing through economic reforms, why is the Jamaat opposing globalization and liberalization? Are you against progress ?
We are not against progress or any kind of development activities in India. However, we are against two things. Firstly, influence of western and particularly American culture to Indian society, which is being imported along with globalization and liberalization. Secondly, we oppose the scenario where benefits of development are reaped by very minute percentage i.e. 5% urban elite in India and fruits of development are not reaching the entire population. Even among the cities, only some cities are benefiting from the developments. You cannot see the glitters of development in cities like Patna and Kolkata, what you may see in Delhi and Mumbai.  The so-called development may bring glitter to only some cities. However in villages, which constitute majority of Indian geography, no influence of progress is noticed. Even today, it is sad to state that, in spite of big claims about progress and development more than 30% of people in India are living below poverty line. When we claim about higher growth rate of GDP, we forget that we are counting the common man along with TATAs, Birlas and Ambanis, and calculating the average. We support progress, which is directed towards the steady development of entire population of India.

More annoying is, the growing influence of western culture in India. As a result, extra marital sex and premarital sex in no more a taboo in our country among younger generation and doctors are now advocating safe sex rather than advising to refrain from such practices. When we talk about economic progress, we should not forget that this progress has brought enormous contrasts in our society. Several people are deprived of two meals per day, where as many million rupees are spent on fast food by urban elite. In many of our villages, people are deprived of clothing where as millions of rupees are being spent for cosmetics. Some are living in big bungalows while many cannot afford humble huts for themselves.  We are against this kind of contrasts in our society but not against progress. While west is suffering from the drawbacks of their own culture, we are welcoming it in our society without knowing the consequences.  If food, shelter and clothing are guaranteed to majority of the populace, we will whole-heartedly support such progress.

Can you outline how central and state governments have responded to Sachar Committee report ?
Sachar committee report is a big eye-opener for all, which reveals the truth that despite the hue and cry about Muslim appeasement, Muslims are among the most deprived communities in India. The report confirms that they are more backward than OBCs in many areas.  The government was bound to accept this fact since ‘Sachar Committee’ is a government appointed body. If such a committee would have been appointed by any other independent organization or a Muslim organization, the government would have probably rejected the report. Sachar committee report enumerates detailed data and irrefutable proofs explaining the status of Muslims in various fields in different states.

There was another report called ‘Ranganath Mishra’ commission report, which unfortunately was not tabled by the government in the parliament. This report also reveals similar facts identified by Sachar Committee report.  Muslims are demanding that the recommendations of Sachar Committee and Mishra Commission report have to be implemented.  According to government’s official statistics, Muslims constitute 14% of the population. Though actual percentage of Muslims is obviously much higher than government statistics, Muslims need to secure minimum and appropriate share of 14% in all aspects of life such as education and representation in legislative assemblies.  According to Mishra Commission report minorities should get 15% reservations in employment and education, out of which 10% reservation should be given to Muslims owing to their pathetic condition in India. Furthermore, the commission also recommends that if there is any leftover quota from the remaining 5% unutilized by other minorities, it also needs to be given to Muslims.

All major Muslim organizations including Jamate Islami Hind, Jamiatul Ulema Hind and Majlis Mushawarat unanimously demand that the recommendations of  the Sachar Committee and Mishra commission  reports have to be implemented.  However, government is lending a deaf ear to the plea of Muslims. Ironically, central government and none of the state governments have taken any step forward to implement Sachar committee recommendations. The BJP led state governments have rejected these recommendations saying that these are attempts to appease Muslims. Meanwhile state governments led by so-called secular parties also has not done anything to implement it other than rendering some lip services. In West Bengal, a state where Muslims are severely deprived, the government has announced that it will give 10% reservations to Muslims. Since assembly elections of West Bengal are round the corner, it is difficult to judge if the government is sincere in its announcement or if it is just an election gimmick. In West Bengal, where Muslims constitute almost 27% population, the  government now accepts that they have committed a mistake by sidelining Muslims during the  long span of communist rule in the state. Other than announcement in the wake of upcoming assembly elections, no practical steps have been taken to implement the report.   However, Andhra Pradesh government has announced 4% reservation to Muslims and in Karnataka there is some kind of reservation existing from the beginning. In Kerala, government has formed a committee to study the implementation of recommendations of Sachar Committee report. Apart from this, practical steps towards implementation of the Sachar committee and Mishra commission reports are not being seen anywhere in India.

How did Muslims themselves respond to the Sachar Committee report to do something for the community at non-governmental level ?
As far as Muslim organizations are concerned, all Muslims organizations have welcomed sachar committee report and are pressurizing the government to implement its recommendations.  However, there are no collective efforts from the Muslim organization towards implementation of Sachar and Mishra commission report. Muslim organizations are expressing their views through their own separate platforms. Needless to say, the Muslim organizations had been striving for the betterment of Muslims even before the submission of Sachar Committee report. Jamate Islami Hind also has established many schools, colleges and hospitals in different parts of India. It has also served employment generation. Many other Muslim organizations have also contributed toward the upliftment of the community. In Hyderabad for example Salahudddin Owasi has established many schools, colleges and contributed towards social work. Jamiatul Ulema Hind has established many Arabic Madraras and colleges. Vision 2016 is also part of the Jamat’s activities towards upliftment of the society in general, and Muslims in particular. Sachar committee report has reconfirmed the importance of such activities. Muslim community in India is a huge community and all these efforts rendered by Muslims are just small efforts compared to the size of the community and magnitude of the challenges they are facing. Muslim organizations joined together cannot produce the same thing what a concerned and responsible government can produce.
  
From reports, we understand that recently many innocent Muslim youth are targeted in the name of war on terror. What you say about this situation ?
American policy of war on terror initiated by erstwhile US government has influenced many countries including our own country. Thus, it is true that Muslims particularly many innocent Muslim youth were targeted in the name of war on terror. An atmosphere is created through media stereotypes where if any terrorist activities is reported, Muslims are blamed at the outset, without finding out the real culprits.  However during the recent past there have been several instances in India where many activists from non-Muslim outfits have been arrested for terrorist activities, with cases registered against them, and some of them are even behind the bars.  This has brought a slight change in the trend of out rightly blaming Muslims for any untoward incidents without finding the real culprits.
 
Reports about attacks against churches, moral policing by anti social elements and atmosphere of hatred show that communal elements are growing in India. What you think about this situation ?

It is true that there are communal elements in India and there are continued efforts by anti social elements to spread communalism. However, it is not true that communalism has grown much higher than ever. There were no major communal riots in India after the Gurjart riots, which is still famed as the biggest communal riot in India post partition. Previously Bihar was considered as a communally sensitive area. Bihar now is a riot free state, though there is poverty, corruption and many other problems which can be capitalized by anti social elements. During the rule of Lalu Prasad Yadav and Nitish Kumar there were no communal riots in Bihar. Earlier during the rule of congress, communal riots were common in Bihar. In Uttar Pradesh as well, which is again considered as the most sensitive state, there was no major communal riots reported in the recent past even during the rule of BJP, which was followed by the rule of Mulayam Singh and Mayawati. Recently there were some communal riots in Hyderabad. However, it did not spread to other parts of the state, unlike Gujarat riots which soon spread to the entire state. This does not mean that you can have a sigh of relief that communalism has faded away from India. Efforts are needed to promote the atmosphere of understanding and tolerance and communal elements need to be defeated.  Peace is a basic need of human beings, which is also an inevitable need of progress. Jamat and other organizations can only wish and advocate peace. However, government has more power to ensure and establish peace.
 
You have mentioned about Gujart riots. Do you think Narendra Modi, who is termed as architect of Gujarat riots will be convicted by the court ?
As you know, there are several cases against Narendar Modi and justice will take its own course. We do not have any other sources to know about the status of his case other than media. The Supreme Court of India has given many impartial judgments in the past, which strengthen one’s belief in judiciary. In any democracy, the Court is the final door to knock for seeking justice. Hence, one has to wait and see what happens.

What you think about women’s reservation bill presented recently by the ruling party ?
Women reservation bill is not beneficial to minorities, particularly Muslims. Majority of the Muslim organizations opposed this bill including Jamaate Islami Hind. Moreover, all other small and big political parties are against this bill except the Congress and the Communist party. BJP is has adopted a middle path in this regard. If this bill is passed, it will be a gateway to the so-called upper cast elites to strengthen their political might. Their women folk will also reach the parliament alongside their men. Women folks of backward communities are already less in number in politics. This bill is in no way beneficial to any backward communities. Muslim organizations including Jamaat e Islami Hind feel that a separate quota for Muslims and other backward communities has to be fixed in the women’s reservation. Otherwise, women’s reservation bill in its current form only serves the interests of the upper cast elite. According to Lalu Prasad Yadav, a political strongman with proven track record, “even we cannot reach parliament if this bill is implemented”. Jamate Islami Hind has visited many national level political leaders to express its dissatisfaction regarding the bill and we feel that many parties think on similar lines.

Is there any preparation by JIH to launch a political Party ?
Jamat Islami Hindi is an organization with a mission and we have no intension to become a political party. The Jamaat has its own area of work and has a long way to go. However, in the current political scenario of our country, the Jamaat feels that there is a need of a political party, which pursues value-based politics and serves the interests of the weaker sections.   Hence, Jamaat will support any movement to establish such a political party, which particularly addresses common problems of weaker sections in India, including Muslims.  The Jamaat will support such a party and feels that time is ripe for its establishment. Educational upliftment, employment generation, eradication of communal riots, over all social development could be some of its agenda.
 
Can you brief about the Vision 2016 project initiated by JIH ?
Through Vision 2016,  Jamaat-e-Islami Hind has initiated so many social service activities towards the betterment of downtrodden people, Muslims in particular, in areas where they are living under pathetic conditions. Many schools have been established in many parts of India. In Delhi, we have undertaken a big project of hospital construction. Scholarship programs for talented poor children have also been initiated. Interest free loans and monetary support are being given to many people to generate their own means of income and to come out of the clutches of poverty.
Through Vision 2016 project, relief activities have been initiated at a larger scale compared to our customary relief activities, towards people affected from natural calamities and riots. We also support marriage needs of poor families.  However, the outcome of entire project cannot be anticipated soon. It is like giving education to a child. Outcome of the education is apparent when the boy grows up, secures his own job and social status. It is a long process and any social change cannot be anticipated within a short time. You may have to wait for 10-15 years to see at least some better consequences of the project.
We are doing social service activities from the beginning, much before the presentation of Sachar Committee report. However vision 2016 is much focused and a large-scale project compared to the previous social service activities of JIH.
Related Posts Plugin for WordPress, Blogger...