Pages

Tuesday, October 23, 2012

Parvaz Rahmani, K S Sudarsan and Islamic Dawah

Parvaz Rahmani


The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 20-22 September2012 issue. It is written in the true spirit of Islamic Dawah.
அந்தச் சாவை நினைத்து வருத்தம் ஏற்பட்டதேன்...?

கே. எஸ். சுதர்ஸனின் (மறைவு 15 செப்டம்பர், 2012) மரணம் குறித்து சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த அளவுக்கு வருத்தம் ஏற்பட்டதோ, தெரியவில்லை. ஆனால் கடந்த 20 ஆகஸ்ட் அன்று ஈகைப் பெருநாளின்போது ஆர். எஸ். எஸ் இயக்கத்தின்இந்த மூத்த தலைவர் போபால் நகரத்தின் புகழ் பெற்ற தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற விரும்பியதாகவும் அல்லது தன்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பியதாகவும் அதற்காக வேண்டி தாஜுல் மஸாஜீத் பள்ளிவாசலுக்குப் போக விரும்பியதாகவும், ஆனால் அவருடைய ஸ்டாஃப் - உதவியாளர் களும், காவல் துறை அதிகாரிகளும் ‘போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது’ என்று சொல்லியும், ‘பெருநாள் தொழுகை முடிந்துவிட்டது’ என்று எடுத்துரைத்தும் தொழுகையை நிறைவேற்றுகின்ற அவருடைய ஆசையை அணை போட்டு தடுத்துவிட்டதாகவும் அதன் பிறகு முன்னாள் முதல்வர் பாபுலால் கோடா அவரைத் தன்னுடைய முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அந்த வீட்டில் சுதர்ஸன் தன்னுடைய முஸ்லிம் ‘சகோதரர்களுக்கு’ பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததாகவும், சேமியா பாயசத்தை ரசித்து ருசித்து அருந்தி மகிழ்ந்ததாகவும், தன்னுடைய மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொண்டதாகவும் போபாலிலிருந்து வந்த செய்தியைப் படித்த, கேட்ட முஸ்லிம்களுக்கு அவருடைய மரணம் தவிப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். சுதர்ஸன் அவர்களின் இந்த ‘மாற்றம்’ குறித்து எந்தவோர் ஆங்கில நாளிதழிலிலும் விமர்சனமோ, கருத்துரையோ வரவில்லை; என்னுடைய பார்வைக்கு வரவில்லை. ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு பற்றி ஆங்கில இதழ்களில் வெளியான செய்தியில் அவருக்கு ‘ஞாபக மறதி’ நோய் தொற்றிவிட்டிருந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் உர்தூ பத்திரிகைகளில் அவருடைய இந்த திடீர் ஆர்வம் குறித்து பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. சுதர்ஸன் அவர்களுக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டதால் அவர் இவ்வாறு பெருநாள் தொழுகைக்காக விருப்பம் தெரிவித்திருக்க மாட்டார்; தொழுகை, பெருநாள், முஸ்லிம்கள் பற்றிய அவருடைய பார்வையிலும் கருத்திலும் நிச்சயமாக ஏதோவொரு அதிரடி மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்கிற சிந்தனைதான் இந்த பரபரப்பான விவாதத்திற்குப் பின்புலமாக அமைந்தது.

ஒரு நண்பர் அனுப்பிய குறுந்தகவல்...!
இந்த நிலையில் மகாராஷ்டிரத்திலிருந்து நண்பர் ஒருவர் அனுப்பிய குறுந்தகவல் குறிப்பிடத்தக்கது. 17 செப்டம்பர் அன்று 09313522885 என்கிற தொலைபேசி மூலமாக அவர் அனுப்பிய குறுந்தகவலின் விவரம் வருமாறு: ‘சுதர்ஸன் ஜி 20 ஆகஸ்ட் அன்று போபாலின் தாஜுல் மஸாஜித் மஸ்ஜிதில் தொழுகையை நிறைவேற்றி இஸ்லாம் தர்ஷன்மூலமாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தவே விரும்பினார். ஆனால் அவருடைய தோழர்கள் அவருடைய இந்தத் தனிப்பட்ட சுதந்தரத்தையும் அவருக்குத் தரவில்லை. அவரை பள்ளிவாசலுக்குச் செல்லவிடாமல் தடுத்துவிட்டார்கள். கடைசியில் சுதர்ஸன் அவர்கள் அதிருப்தியுற்ற நிலையிலேயே இந்த உலகை விட்டுப் போய்விட்டார். சுதர்ஸன் அவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சர்சலாங்- அகில இந்தியத் தலைவராக இருந்த காலத்தில் நம்முடைய தோழர் ஒருவர் இஸ்லாத்தின் அருள் மார்க்கச் செய்தியை விரிவாக விவரித்து கடிதம் எழுதினார். சுதர்ஸன் ஜி அவருக்குப் பதில் கடிதமும் எழுதினார். வண்டியை அனுப்பி தன்னிடம் வரவழைத்து நீண்ட நேரம் பேசவும் செய்தார். இறந்து போனவர் வெளிப்படையாக எதனைவும் அறிவிக்கவில்லை. ஆனால் தன்னுடைய செயலின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தினருக்கு கனமான செய்தியை பதிவு செய்திருக்கின்றார். எவராவது அவருடைய அந்தச் செய்தியைப் புரிந்துகொண்டால் எத்துணை நன்றாக இருக்கும்...! முஸ்லிம்களும் அழைப்புப் பணி தொடர்பான உணர்வைப் பெற்றால் எத்துணை நன்றாக  இருக்கும்..!” மகாராஷ்டிர நண்பரின் உணர்வுகளும் ஆதங்கமும் பொருத்தமானவையே. சிறப்பானவையே. ஒருவருக்கு ஞாபக மறதி நோய் தொற்றிவிட்டாலோ, முதுமையின் மூப்பால் பீடிக்கப்பட்டாலோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசத்தான் செய்வாரே தவிர, முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது உளறுவாரே தவிர, இப்படி தீர்க்கமாக தொழ வேண்டும் என்றோ வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றோ சொல்ல மாட்டார். இது போன்ற எண்ணங்களை உணர்வும் எண்ணமும் உறுதியாக இருக்கின்ற மனிதர்தான் வெளிப்படுத்துவார். எனவே மகாராஷ்டிர நண்பரின் கவலையில் அர்த்தம் இருக்கின்றது.

நிச்சயமாக இப்படி நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது...!
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னாள் சர்சந்சாலக் - அகில இந்தியத் தலைவராகன குப்பள்ளி சீதாராமையா சுதர்ஸன் அவர்கள் தீவிரமான கடுமையான இந்துத்துவக் கொள்கை மீது பற்று கொண்டவராக இருந்தார். 2000 முதல் 2009 வரை சர்சந்சாலக்காக - அகில இந்தியத் தலைவராக அவர் இருந்த காலத்தில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அவருடைய நிலைப்பாட்டைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம்தான் இருந்தன. முஸ்லிம்கள் தொடர்பான சங் பரிவாரத்தின் நிலைப்பாட்டை அவர் ஆணித்தரமாகவும் அழுத்தம்திருத்தமாகவும் எடுத்துரைத்து வந்துள்ளார். நாட்டுப் பிரச்னைகள் தொடர்பாகவும் அவர் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். சில நேரங்களில் பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் கருத்துகளை மறுத்துரைத்தும் அவர் பேசியிருக்கின்றார். எது வரை எனில் ‘இந்த நாட்டில் இது வரை ஆண்ட பிரதமர்களில் இந்திரா காந்திதான் வெற்றிகரமான பிரதமர்’ என்றும் மனம் விட்டுப்பேசி இருக்கின்றார். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? தன்னுடைய மனத்திற்குச் சரி எனப் பட்டதை வெளிப்படுத்துவதில் அவர் என்றைக்குமே தயங்கியதில்லை. நறுக்குத்தெறித்தாற்போல் ஆணித்தரமாகவே எதனையும் சொல்லி வந்துள்ளார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அவர் அதிகமாகப் பேசியதில்லை. மௌனம் சாதித்தே வந்துள்ளார். இந்தக் காலத்தில் அவர் வாழ்க்கை குறித்தும் வாழ்க்கை உணர்த்துகின்ற உண்மை குறித்தும் அதிகமாக ஆராய்ந்திருக்க வேண்டும். சத்தியத்தை அடைய வேண்டும் என்கிற உந்துதலில் நாள்களைக் கடத்தியிருக்க வேண்டும். இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் போதனைகளையும் மீள்பார்வை செய்திருக்க வேண்டும். இவ்வாறு நடந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. மகாராஷ்டிர நண்பர் அனுப்பிய குறுந்தகவல் இதனை மெய்ப்பிப்பதாக இருக்கின்றது. எனவே சங் பரிவாரத்துடன் நீண்ட காலம் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக இஸ்லாம், முஸ்லிம்கள் தொடர்பாக அவருக்குள் வேரூன்றி இருந்த நிலைப்பாட்டையும் எண்ணத்தையும் அவர் தம் கடைசி காலத்தில் மீள்பார்வை செய்து வந்திருக்க வேண்டும். அதற்கும் வாய்ப்பிருக்கின்றது.
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 20-22 செப்டம்பர் 2012 இதழ்

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...