Pages

Showing posts with label Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry. Show all posts
Showing posts with label Jamaat-e-Islami Hind Tamil Nadu and Puducherry. Show all posts

Thursday, September 13, 2012

இதயத் தூய்மை : எம். ஐ. அப்துல் அஜீஸ்



பயிற்சிக்கும் தர்பியத்துக்கும் இஸ்லாம் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றது. தகுதி படைத்த மனிதர்களை வார்த்தெடுப்பதுதான் தர்பியத்தின் முதன்மை நோக்கமாகும்.

நடப்பு மீக்காத்துக்காக (ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2015 வரையிலான காலக்கட்டம்) வகுக்கப்பட்டுள்ள நான்காண்டு செயல்திட்டத்தில் இதயத்தைத் தூய்மைப்படுத்துகின்ற பணிக்கு (தத்ஹீரே கல்ப்) முதன்மை முக்கியத்துவம் தரப்பட்டிருக்கின்றது.

நம்மை நாமே சுய மதிப்பீடு செய்யும்போது நாம் இதில் பின்தங்கி இருக்கின்றோம் என்கிற உணர்வு மேலிட வேண்டும். அதுதான் தர்பியத்துக்கான முதல் படி ஆகும். தனி மனிதர்களின் தர்பியத்துடன் ஒட்டுமொத்த ஜமாஅத்தின் தர்பியத்தின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.
தர்பியத் என்றால் என்ன? இதயத்தைச் செம்மைப்படுத்துவதற்குப் பெயர்தான் பயிற்சி, தஸ்கியா, தர்பியா!

இதயத்தின் பல்வேறு நிலைமைகளைக் குறித்து குர்ஆன் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. நல்ல இதயம் எப்படி இருக்கும் என்பதையும் குர்ஆன் விவரித்-துள்ளது. கெட்ட இதயம் எத்தகையதாக இருக்கும் என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டியுள்ளது.

தீய செயல்களின் காரணமாக இதயங்கள் கறை படிந்து போகும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது:
“மாறாக உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் இதயங்களில் படிந்துவிட்டிருக்கின்றது” (திருக்குர்ஆன் 83;14)
எவர்கள் வரம்புமீறுகின்றார்களோ அவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விடும்.  அவர்கள் வழிகாட்டுதல் பெற மாட்டார்கள்.
“இவ்வாறே வரம்பு மீறிச் செல்வோரின் உள்ளங்கள் மீது நாம் முத்திரையிட்டு விடுகின்றோம்” (திருக்குர்ஆன் 10;74)
இறுகிப்போன இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.


“படிப்பினை தருகின்ற சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுக்கள் பொங்கி எழுகின்றன. இன்னும் சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின் அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்-டிருக்கின்ற இழிசெயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை” (திருக்குர்ஆன் 2;74)
இதே போன்று குருடாகிப்போன இதயங்கள் என்றும் குர்ஆன் இவர்களைக் கண்டிக்கின்றது.
“பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா, என்ன? (அவ்வாறு பார்த்-திருந்தால்) உணர்ந்து கொள்ளக்கூடிய இதயங்களையும் கேட்கக் கூடிய செவிகளையும் இவர்கள் பெற்றிருப்பார்களே. உண்மை யாதெனில் கண்கள் குருடாவதில்லை. ஆனால், நெஞ்சங்களிலுள்ள இதயங்கள்தான் குருடாகின்றன” (திருக்குர்ஆன் 22;46)
நயவஞ்சக நடத்தைக்கு வித்திடுவதும் இதயம்தான். நோயுற்ற இதயம் என குர்ஆன் எச்சரிக்கின்றது.
“எனினும் (இதனை) அவர்கள் உணர்வதில்லை. அவர்களுடைய நெஞ்சங்களில் நோய் இருக்கின்றது.” (திருக்குர்ஆன் 2;10)
சிந்தித்துணராத இதயங்களைக் கொண்டவர்களை அலட்சியம் தொற்றிக் கொள்ளும் எனக் குர்ஆன் எச்சரிக்கின்றது.
“அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்-வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்-பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்-பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள். அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள்.” (திருக்குர்ஆன் 7;179)
வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்துகொள்வதால்தான் இதயத்தை நோய் தொற்றிக் கொள்கின்றது என்றும் குர்ஆன் எச்சரிக்கின்றது.


“எனவே, அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு அவர்கள் மாறு செய்த காரணத்தாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வஞ்சக எண்ணத்தை ஏற்படுத்தினான். அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அது அவர்களிடம் இருக்கும்” (திருக்குர்ஆன் 9;77)
இறைவனை நினைவு கூர்கின்ற இதயங்களை மென்மையான, மிருதுவான இதயங்கள் எனக் குர்ஆன் வர்ணிக்கின்றது.
“அதனைச் செவியுற்றவுடன் தம் இறைவனை அஞ்சுபவர்களின் மேனி சிலிர்க்கின்றது. பின்னர் அவர்களின் உடலும், உள்ளமும் மிருதுவாகி அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு ஆர்வம் கொள்கின்றன” (திருக்குர்ஆன் 39;23)
அல்லாஹ்வை நினைவுகூர்வதில்தான் மன நிம்மதி இருக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.

“மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதால் நிம்மதியடைகின்றன. அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன. பிறகு, எவர்கள் (சத்திய அழைப்பை) ஏற்றுக்கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மகிழ்வும் நல்ல முடிவும் இருக்கின்றன” (திருக்குர்ஆன் 13; 28, 29)
இறைவழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு பரிவும் கருணையும் நிறைந்த இதயம் கிடைக்கின்றது என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது .

“மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம்” (திருக்குர்ஆன் 57;27)
 தூய்மையான உள்ளங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகின்றது.




“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் எவ்விதப் பயனும் அளித்திட மாட்டா. ஆனால் எந்த மனிதர் தூய்மையான உள்ளத்தோடு அல்லாஹ்வின் சமூகத்திற்கு வருகை தருகின்றாரோ அவரைத் தவிர” (திருக்குர்ஆன் 26; 88, 89)
அல்லாஹ்வின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உருகிவிடுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.


“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா?” (திருக்குர்ஆன் 57;16)

இறைநினைவால் நடுநடுங்கிப்போகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் பேசுகிறது.



“மேலும், (நபியே) பணிவான நடத்தையை மேற்கொள்வோர்க்கு நீர் நற்செய்தி அறிவிப்பீராக. அவர்கள் எத்தகையவர்களெனில், அல்லாஹ்வைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் நடுநடுங்கி விடுகின்றன.” (திருக்குர்ஆன் 22; 34, 35)
 அல்லாஹ்வின் பக்கம் அதிகமாக மீளுகின்ற இதயங்கள் குறித்தும் குர்ஆன் குறிப்பிடுகின்றது.

“அவரோ பார்க்காமலேயே கருணைமிக்க இறைவனுக்கு அஞ்சிக் கொண்டிருந்தார். மேலும், அவன் பக்கம் திரும்பக்கூடிய உள்ளத்துடனும் வந்திருக்கின்றார்.” (திருக்குர்ஆன் 50;33)
இதயங்களைத் தூய்மைப்படுத்துகின்ற பணி இறைத்தூதர்கள் செய்த பணி ஆகும். இதயத் தூய்மை இரண்டு பரிமாணங்களைக் கொண்டது. இரண்டும் முக்கியமானவை. இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை ; (1) நோய்கள், பலவீனங்கள், குறைகள் ஆகியவற்றை நீக்குதல். (2) நன்மைகள், நலங்கள், நிறைகள் ஆகியவற்றை செழித்தோங்கச் செய்தல்.

எந்தவிதமான கசடோ, குப்பையோ, களங்கமோ இல்லாத இதயம்தான் தேவை.

எத்தகைய ஆபத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் இம்மிளவுகூட வளைந்து கொடுக்காத, தயங்காத, தடுமாறாத வீரஞ்செறிந்த இதயம்தான் தேவை.

எந்தவிதமான சந்தேகத்துக்கும் சஞ்சலத்திற்கும் உள்ளாகாத, தடுமாறாத உள்ளம்தான் தேவை.

பொய், பகட்டு, வஞ்சகம் போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை பெற்ற தூய்மையான இதயம்தான் தேவை.

இதயத்தூய்மைக்கு அடிப்படைகளாக இரண்டைச் சொல்லலாம். இந்த இரண்டையும் வளர்த்துக் கொள்வதில் நாம் எல்லோரும் கவனம் செலுத்த வேண்டும்.

முதலாவதாக, அல்லாஹ்வின் மீது அன்பு. அல்லாஹ்வின் மீது அதீத அன்பு செலுத்துகின்றவர்களாய், படைத்தவனின் மீது பேரன்பு கொண்டவர்களாய், கருணை மிக்க இறைவனின் மீது பற்று வைத்திருப்பவர்களாய் நாம் இருக்க வேண்டும். “அல்லாஹ் அவர்களைப் பற்றி திருப்தி கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி கொண்டார்கள்” என்கிற உன்னத நிலையை அடைய வேண்டும். அந்த அளவுக்கு ஆழமானதாகவும் வலுவானதாகவும் இறைத்தொடர்பு இருத்தல் வேண்டும்.

இரண்டாவதாக, நாம் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மறுமைக்கே முன்னுரிமை தருதல் வேண்டும். உலக இலாபங்களைவிட மறுமை இன்பங்களுக்கே முன் னுரிமை தருகின்ற மனப்பக்குவம் நமக்கு இருத்தல் வேண்டும். அற்பமான, குறுகிய கால உலக இன்பங்களை விட நீடித்த, நிலையான, முடிவே இல்லாத மறுமை நலன்களுக்கு முன்னுரிமை தருகின்றவர்களாய் நாம் மாற வேண்டும்.

உலகத்தை விட மறுமைக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தருகின்ற இந்தப் பண்பை நாம் வளர்த்துக்கொள்ளாவிட்டால் நாம் தாஃகூத்துக்கு அடிமையாகிப் போவோம்.

மறுமையைவிட இந்த உலக வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆபத்தில் முடியும். இத்தகைய மனிதர்கள் மீது இறைவனின் கோபம் உண்டாகும். அவர்களைப் பயங்கர வேதனை சூழ்ந்துகொள்ளும்.

எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக்கொள்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இத்தகையவர்களக்கு மாபெரும் வேதனையும் இருக்கின்றது. இதற்குக் காரணம் இவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை அதிகம் நேசித்தார்கள் என்பதுதான். (திருக்குர்ஆன் 16 ; 106)

இதயத்தைப் பாதிக்கின்ற நான்கு பலவீனங்கள்

நான்கு பலவீனங்கள் இதயத்தைப் பாதிக்கும். அவற்றைக் குறித்து விழிப்புடன் இருந்து அவற்றிலிருந்து விலகி இருத்தல் அவசியமாகும். இதயத்தூய்மை குறித்து கவலைப்படுகிற அனைவரும் இந்தப் பலவீனங்களைத் துறப்பது குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

1) டென்ஷன். இதுதான் முதல் பலவீனம். டென்ஷன் அடைதல் இதயத்தைப் பாதிக்கும். எப்போதும் எந்நேரமும் எதைக்குறித்தாவது டென்ஷன் அடைவது. பிரச்னைகளை நினைத்து நினைத்து பதற்றமடைவது. பணிகளை எண்ணிப் பார்த்தும் செய்ய வேண்டிய பணிகளை நினைத்துப் பார்த்தும் டென்ஷன் அடைதல். இவையெல்லாமே இதயத்தைத் தூய்மைப்படுத்துவதிலிருந்து நம்முடைய கவனத்தைச் சிதறச் செய்துவிடும்.

2) பிஸியாக இருப்பது. எப்போதும் பிஸியாக இருப்பதும் ஆபத்தானதே. எப்போதும் தொழில், வணிகம், பணி, பணம் என்று ஆலாய்ப் பறப்பது. எந்நேரமும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பது. அந்த ஒற்றை இலக்குடன் இருபத்தினான்கு மணி நேரமும் பிஸியாக இருப்பது. ஒருவர் காலையில் 6.30 மணிக்கு கடையைத் திறப்பார். இரவு 11.30 மணி வரை கடையே கதி எனக் கிடக்கின்றார் எனில், எப்போதும் பிஸியாக இருக்கின்றார் எனில் அதனால் என்ன நன்மை? காலையில் 6.30 மணிக்குத் தொடங்கி இரவு 11.30 வரை உழைத்தால்தான் வெற்றியா? வேறு எதற்கும் நேரம் இல்லாத வகையில் பிஸியாக இருப்பது இதயத்தூய்மையிலிருந்து கவனத்தைத் திருப்பி விடும்.

3) சுய பச்சாதாபம் கொண்டு வருந்துதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். ஒருவர் எந்நேரமும் தன்னைச் சூழ்ந்துள்ள தொல்லைகள் குறித்தும், தான் சந்தித்து நிற்கின்ற பிரச்னைகள் குறித்தும், தன்னுடைய கஷ்டங்கள் குறித்தும் நினைத்து நினைத்து வருந்துகின்றார் எனில் அவருடைய இதயம் தொல்லைகளாலும் பிரச்னைகளாலும் கஷ்டங்களாலும் நிறைந்துவிடும். பிறகு இதயத்தூய்மைக்கு ஏது வாய்ப்பும் நேரமும்?

4) ஆசை. ஆசை. ஆசை. அதிகமாக ஆசைப்படுதல். இதுவும் இதயத்தூய்மையைப் பாதிக்கும். நிறைவேறாத ஆசைகளாலும், கனியாத ஏக்கங்களாலும், மோசம் போன எதிர்பார்ப்புகளாலும் சின்ன சின்ன ஆசைகளாலும் பெரிய பெரிய ஆசைகளாலும் விருப்பங்களாலும் ஒருவருடைய இதயம் நிறைந்திருக்கின்றது எனில், இதயத்தூய்மைக்கு வழி ஏது?

இதயத்தூய்மைக்கான ஐந்து வழிமுறைகள்.

1) முதலாவதாக அல்லாஹ் ஏவியதைச் செய்ய வேண்டும். அல்லாஹ் தடுத்தவற்றிலி ருந்து முற்றாக விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமானவற்றிலிருந்து முற்றிலும் விலகி இருத்தல் வேண்டும்.

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘ஒருவர் பாவம் செய்கின்ற போது சின்னதாக கரும்புள்ளி ஒன்று பதிந்துவிடுகின்றது. அவர் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் பாவம் செய்து அதிலேயே திளைத்திருப்பாரெனில் அந்தக் கரும்புள்ளி அடர்த்தியாக அவருடைய இதயம் முழுவதையும் சூழ்ந்துகொள்கின்றது’.

எனவே அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஹராமான சம்பாதியத்திலிருந்து விலகி இருத்தல் வேண்டும். ஹராமான வருமானத்தாலும் ஹராமான உணவுப் பொருள்களை விழுங்குவதாலும் இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஹராமான வருமானமும் உணவும் மனிதனின் நிம்மதியைப் பறிக்கக் கூடியவையாகும்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் தந்திருக்கின்றது. ஜமாஅத்தின் அமைப்புச்சட்டத்தில் ஜமாஅத் உறுப்பினரின் பொறுப்புகளாக எட்டு பொறுப்புகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் மூன்று பொறுப்புகள் ஹராமான வருமானத்திலிருந்து விலகி இருப்பது தொடர்பானைவையாகும்.
(3)    ஷரீஅத்தில் ‘மாஸீயத்தே ஃபாஹிஷாஹ்’* எனும் பிரிவுக்குள் வரும் வரு-மான வழிகளில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை விட்டுவிட வேண்டும்; அதனால் எவ்வளவு இழப்பு ஏற்படினும் சரியே! மேலும் சம்பாத்தியத்-தில் இப்படிப்பட்ட வருமா-னத்தின் ஒரு பகுதி கலந்து விட்டது என்றால், அந்தப் பகுதியை விட்டும் சம்பாத்தியத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
(4)     ஹராமான (விலக்கப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பான) முறையில் ஈட்டப்-பட்ட பணம் அல்லது சொத்து அவருடைய கைவசமிருப்பின். அதனைக் கைகழுவி விட வேண்டும். ஆனால், அந்தச் சொத்தோ பணமோ பிரித்தறிய முடியாத அளவுக்கு மொத்த சம்பாத்தியத்தில் இரண்டறக் கலந்து விட்டிருந்-தால், இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
(5)    மற்றவருக்குச் சொந்தமான அல்லது மற்ற-வருக்குச் சேர வேண்டிய சொத்திலிருந்தோ பணத்-திலிருந்தோ ஒரு பகுதியையோ அல்லது பல பகுதி-களையோ பறித்து அவற்றை அவர் தம்முடைய சொத்திலோ பணத்திலோ சேர்த்துக் கொண்டிருந்-தால்  உடனடியாக அவர் அவற்றைத் தனியாகப் பிரித்-தெடுத்து அவற்றை அவற்றுக்கு உரியவரி-டம் திருப்பிக் கொடுத்து விட வேண்-டும்.  உரிமை-யாளர் யார் எனத் தெரியும்போதும் அவரிட-மிருந்து பறிக்கப்பட்ட சொத்து அல்லது பணம் இன்னதுதான் எனத் தெளிவாக அடையாளம்  காண முடிகிற போதும்தான் இவ்வாறு உரியதை உரியவரிடம் திருப்பிக் கொடுப்பது சாத்தியமா-கும். இல்லையெனில் இறைவனிடம் அதற்காக பாவமன்னிப்புக் கோருவதுடன் இயன்ற வழி-களில் அதற்கு ஈடு செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.  (ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்புச் சட்டம் பாகம் 2; பிரிவு 8 (3,4,5)

அண்ணல் நபிகளார்(ஸல்) ஹராமான சம்பாத்தியத்தின் பாதிப்பை நபிமொழி ஒன்றில் விவரித்துள்ளார். ‘ஒருவர் நீண்ட தொலைவு பயணம் செய்து வருகின்றார். இறைவனைத் தொழுகின்றார். இறைவனை நினைவுகூர்கின்றார். மனம் உருக அழுது அரற்றி இறைவனிடம் பிரார்த்திக்கின்றார். ஆனால் அவர் அணிந்திருக்கின்ற ஆடை ஹராமான சம்பாத்தியத்தி-லிருந்து பெறப்பட்டது. அவர் உண்ட உணவு ஹராமான சம்பாத்தியத்திலிருந்து பெறப்பட்-டது எனில் அவருடைய முறையீடு எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?.’

வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில் தஸ்கியத்துன் னஃப்ஸ் இதயத் தூய்மை என்பது இதயத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல. அது வாழ்வின் அனைத்து துறைகளையும் தழுவியதாகும்.

2) அடுத்ததாக, குர்ஆனுடன் தொடர்பு ஆழமானதாகவும் வலுவானதாகவும் அமைய வேண்டும். நாள்தோறும் குர்ஆன் ஓத வேண்டும். பொருள் புரிந்து வாசிக்க வேண்டும். குர்ஆன் தருகின்ற செய்தியை உள்வாங்கிக் கொள்வதற்காக முயல வேண்டும்.

குர்ஆனுக்கு அபாரமானதோர் சக்தி உண்டு. அதுதான் இதயத்தையே மாற்றிவிடுகின்ற, புரட்டிப்போட்டுவிடுகின்ற சக்தி. இதயத்தையே செம்மைப்படுத்திவிடுகின்ற ஆற்றல் குர்ஆனுக்கு உண்டு.

எனவே எப்பாடுபட்டாவது நாள்தோறும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனைப் புரிந்து கொள்வதற்கும் அதன் மொழிபெயர்ப்பையும் விளக்கவுரையையும் வாசிப்பதற்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். நேரத்தைப் பிழிந்தெடுத்து குர்ஆனை ஓதுவதில் செலவிட வேண்டும்.

3) அடுத்ததாக இஹ்திஸாப். இதயத்தூய்மைக்கு இஹ்திஸாபே நல்மருந்து. சுய மதிப்பீடும் சுய ஆய்வும் முக்கியமானவை. உளத்தூய்மையுடன் அன்றாடம் இரவு படுக்கப் போகு முன் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

உமர்(ரலி) கலீஃபாவாக ஆட்சி செலுத்துகின்ற காலம் அது.

கலீஃபா உமருக்கு ஒரு பழக்கம். தன்னுடைய இரவுப் பொழுதுகளை மூன்று பகுதிகளாய்ப் பிரித்து ஒன்றை மக்கள் குறை தீர்ப்பதற்கும் அடுத்ததை இறை வழிபாட்டுக்கும் மூன்றாவதை ஓய்வுக்கும் ஒதுக்கி வந்தார் உமர்(ரலி).

இரவில் மக்கள் குறைகளை நேரடியாக அறிந்துகொள்வதற்கும் குறைகளைத் தீர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நகர்வலம் போவதையும் வழக்கமாய் வைத்திருந்தார் கலீஃபா உமர்(ரலி).

இவ்வாறு ஒரு நாள் இரவு வேளையில் நகர்வலம் கிளம்பிய போது அஸ்லம்(ரலி) என்கிற நபித்தோழரையும் தம்முடன் அழைத்துச் சென்றார் உமர்(ரலி). இருவரும் மதீனத்து வீதிகளில் சுற்றித் திரிந்து விட்டு மஸ்ஜிதுன் னபவியை அடைந்தனர். ஒய்வு எடுத்துவிட்டு இரவின் கடைசிப் பகுதியை இறைவழிபாட்டில் கழிக்கத் திட்டமிட்டிருந்தனர்.

களைத்துப் போயிருந்த அஸ்லம் படுத்த மாத்திரத்தில் ஆழ்ந்து தூங்கிவிட்டார்.
ஆழ்ந்த நித்திரையில் இருந்த அஸ்லம் திடீரென்று ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
என யாரோ கடுமையான குரலில் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

விருட்டென்று எழுந்தார் அஸ்லம். அமீருல் முஃமினினை இந்த இரவு வேளையில் திட்டுபவர் யாரோ என அறிந்து கொள்ளவும் ஒரே வீச்சில் அவரைப் பிடித்துவிட வேண்டும் என்கிற ஆசையிலும் அஸ்லம் பாய்ந்தார்.

ஆனால்-

அவர் கண்ட காட்சி அவரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.

‘உமரே, நீர் அப்படி செய்திருக்கக் கூடாது’
‘உமரே, நீர் இறைவனுக்குப் பதில் அளித்தாக வேண்டும்’
‘உமரே நீர் செய்தது முற்றிலும் தவறு’
எனக் கடுமையான குரலில் விமர்சித்துக் கொண்டிருந்தது உமர்(ரலி) அவர்களே தாம்.

அந்த அகால வேளையில் மதீனத்து மாநகரமே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆட்சியாளர் உமர்(ரலி) தன்னைத்தானே சுயமதிப்பீடும் ஆய்வும் செய்து கொண்டிருந்த காட்சியைத்தான் அஸ்லம்(ரலி) கண்டார்.

இதே போன்று ரோம சாம்ராஜ்யம் வெற்றி கொள்ளப்பட்ட பிறகு பெரும் அளவில் பொற்குவியல்கள் மதீனாவுக்கு வந்து சேர்ந்தன.

அந்தப் பொற்குவியலைப் பார்த்து உமர்(ரலி) கர்ஜிப்பார்; “ஒருபோதும் உன்னால் என்னை ஏமாற்றிவிட முடியாது. என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை மாற்றிவிடுகின்ற ஆற்றல் உனக்குக் கிடையாது. என்னுடைய வாழ்வு போய்க் கொண்டிருக்கின்ற திசையை மாற்றிவிடுகின்ற சக்தி உனக்கு இல்லை. இந்தப் பொற் குவியலால் எனக்குள் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தி விட முடியாது.’
இந்த மாதிரியான இஹ்திஸாப் - சுய மதிப்பீடுதான் நமக்குத் தேவை.

4) வழிபாடுகளில் கவனம் வேண்டும். மூன்றாவதாக, வழிபாடுகளில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நாம் நிறைய பணிகளில் ஈடுபடுகின்றோம். தனிப்பட்ட அளவிலும் கூட்டு முறையிலும் நாம் நிறைய நற்செயல்களைச் செய்கிறோம். என்றால் நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. இறுதியில் மறுமை நாளில் நாம் இறைவனுக்கு முன்னால் தனித்தனியாகத் தான் நின்று கணக்கு காட்ட வேண்டியவர்களாய் இருக்கின்றோம்.

வழிபாடுகளில் கவனமும் அக்கறையும் செலுத்தும்போது வாழ்க்கை செம்மைப் படுத்தப் படும். வழிபாடுகள் சடங்குகள் ஆகிவிடக் கூடாது.

நம்முடைய தொழுகைகள் எப்படி இருக்கின்றன?

‘தொழும்போது இறைவன் நம்மைப் பார்க்கின்றான் என்கிற எண்ணத் தெளிவுடன் தொழ வேண்டும் என்று அண்ணல் நபிகளார்(ஸல்) அறிவுறுத்தி இருக்கின்றார். அல்லாஹ்-வுடன் நாம் செய்கின்ற உரையாடல்தான் தொழுகை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தொழுகைக்காக நிற்கின்ற போதும் அல்லாஹு அக்பர் எனச் சொல்லி கைகளைக் கட்டிக் கொள்கின்ற போதும் எல்லாவிதமான கவலைகளிலிருந்தும் சிந்தனைகளிலிருந்தும் மனத்தை விலக்கிவிட்டு மனம் ஒருமுகப்பட்ட நிலையில் தொழ வேண்டும்.

தொழுகை எப்படி அமைந்தன என்பதைக் குறித்து இரவில் இஹ்திஸாப் செய்ய வேண்டும்.

தொழுகையை மேம்படுத்துவதற்காக வேண்டி தொழுகைகளுக்கு ஏ, பி, ஸி என  படித்தரங்களைக் கொடுக்கின்ற வழக்கத்தை நாங்கள் எங்களுடைய பகுதியில் அறிமுகப் படுத்தினோம்.

ஒருமுறை இந்தப் படித்தரங்கள் பற்றி ஊழியர் கூட்டத்தில் விவாதித்தோம். அப்போது ஒரு ஊழியர் சொன்னார். ‘தொடக்கத்தில் இந்தத் திட்டம் நல்ல பலனைத் தந்தது. மனம் ஒன்றித் தொழுதேன். தரம் மேம்பட்டது. ஆனால் காலப்போக்கில் தொழுவதற்காக நிற்கின்ற போதே இந்தத் தொழுகை ஏ கிரேடு தொழுகை, பி கிரேடு தொழுகை என மனத்திற்குள் பற்பல சிந்தனைகள் வந்துவிடுகின்றன’ என்று புலம்பினார் அவர்.

எனவே தொழுகையை மேம்படுத்துவதற்கான முயற்சியில் தொழுகையில் நம்முடைய கவனம் சிதறிவிடக் கூடாது என்பதிலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நம்முடை இயக்கச் செயல்பாடுகளில் நமக்கு ஆர்வம் நிலைப்பதற்கும், ஊக்கத்துடனும் உற்சாகமாகவும் நாம் பணியாற்றுவதற்கும் தஸ்கியத்துன் னஃப்ஸ் பெரிதும் உதவும்.

5) இதயத்தூய்மைக்காக துஆ. இதயத்தூய்மைக்காக இறைவனிடம் அடிக்கடி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஒரு முறை அன்னை ஆயிஷா(ரலி) இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரோ அழுகின்ற சத்தம் கேட்டு எழுந்தார்.

யாரென்று பார்த்தால் அண்ணல் நபிகளாரே அழுது கொண்டிருந்தார். அப்போது ‘என் இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக’ எனத் திரும்பத் திரும்பச் சொல்லி பிரார்த்தித்துக கொண்டிருந்தார் அண்ணல் நபிகளார்(ஸல்)
இஸ்லாமிஸ்டுகளின் மிகப்பெரும் ஆயுதம் இறைத்தொடர்பும் பிரார்த்தனையும்தாம். இந்த இரண்டின் மூலம் நாம் இந்த வாழ்விலும் வெற்றி பெற முடியும் மறுமையிலும் நற்பேறுகளை ஈட்டிக் கொள்ள முடியும். அல்லாஹ் நல்லருள் செய்வானாக.
ஆமின்.

8 செப்டம்பர் 2012 அன்று சென்னையில் நடந்த மாநில உறுப்பினர் முகாமில்
எம். ஐ. அப்துல் அஜீஸ் ஆற்றிய உரை..!


தமிழில் :  சையத் சுல்தான்
தொகுப்பு :  அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Monday, January 9, 2012

A memorable camp of Jamaat-e-Islami Hind in Chennai


Hats off to Br A Shabbir Ahmed, Ameer-e-Halqa and Br Jan Muhammad Nazim-e-Ijtema for the succesful execution of the training camp for the state and central leaders and also making foolproof arrangements for the sessions of Markazi Majlis-e-Shura.

There may have been a few minor lapses, deficiencies and inadequacies. We are all humanbeings and to err is human. But the fact is that Allah blessed us all and both the events were successful, upto the mark and incident free.

The Markazi and Riyasati Qayideen returned to their homes with fond memories, smiling faces and rejuvenated spirits. I could not count the number of persons - every one of them tall leaders of the Tahreek - who congratulated and complimented for the arrangements made.

Alhumdulillah! All praise, glory, acclamation, honor, adoration, adulation and thanks to Allah.
Report of the camp Here and Here

Saturday, November 12, 2011

Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib


Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib: Muqeet Mujtaba Ali

Muqeet Mujtaba Ali, a long time associate, student and friend of Moulana A Khutbudeen Ahmed Baqawi Sahib writes the following:

Sitting in silence I recall my meeting with him at his house about four months ago. He compelled me to have tea with him. Neither he nor I knew that we were meeting for the last time.
Just a week ago, he had been to Singapore to meet his daughter there.
His wife and other children who wished him a happy journey never even dreamt that he will never come back.
Those who saw him off at the airport never knew that they were seeing him off forever.
The man, who is no more now, never knew that he is not going to meet his near and dear ones again. That his flight to Singapore was the last flight of his life!
His daughter in Singapore never knew that her father has come all along from Chennai to Singapore with an invisible ‘kafan’ wrapped over his body.
None realised that Allah was preparing for his burial in Singapore.
The deceased was a great scholar of Islam. He was the author and translator of many books in Tamil. His great contribution was the translation of Qur’an in Tamil language.
I pray to Allah to forgive all his sins and grant him the highest place in Jannah. Aameen.

Some Points to Think and Act Upon:
1. Death is certain. None can escape death. So I and you must be wise enough to prepare for the life after death.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [٥٩:١٨
O Believers! fear Allah and let every person look and consider what he sends forward for the morrow. Fear Allah; Allah is well aware of all that you do. (Al-Hashr 59: 18)
2. The time of death is destined by Allah, the Giver of life, and the Taker of life. Neither the time of death can be advanced, nor can it be postponed.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ [١٦:٦١
Were Allah to take people to task for their wrong-doing, He would not have spared even a single living creature on the face of the earth. But He grants them respite until an appointed term. And when that term arrives, they have no power to delay it by a single moment, nor to hasten it.(Al-Nahl 16: 61)
3. The Place where one will die is decided already by Allah. None except Allah knows the place of every man’s death.

…وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ …[٣١:٣٤
No soul knows in which land he will die!(Luqman 31: 34)
Kuthbudeen Sahib spent his entire life in Tamilnadu, India. His death was destined in Singapore. So Allah took him there in the evening of his life.
We must realise and understand very well that Allah drives a person out of his house and takes him to a place where he is destined to die, and he dies there.

… قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ ….[٣:١٥٤
Say: ‘Even if you had been in your houses, those for whom slaying had been appointed would have gone forth to the places where they were to be slain.’ (Al Imran 3 : 154)
4. Most important thing for a Muslim is to die in the state of Imaan.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ [٣:١٠٢
Believers! Fear Allah as He should be feared, and see that you do not die save in the state of submission to Allah.(Al 'Imran 3: 102)
This ayah, along with other verses, is recited during Nikkah, marriage sermon. Brides and bridegrooms are reminded of death even during the happiest occasion of their life: Your happiness is not permanent. Nor is your life! Prefer that which is permanent over that which is transitory.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [٨٧:١٦
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [٨٧:١٧
Nay! but you prefer the present life, whereas the Hereafter is better and longer lasting. (Al-A'la 87: 16-17)
More Here 

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைவு : சில சிந்தனைகள் - முகீத் முஜ்தபா அலீ

6. நவம்பர், 2011. ஞாயிற்றுக்கிழமை.

தியாகத்திருநாள் நன்றாகக் கழிந்தது.

படுக்கப்போவதற்கு முன்பு வழக்கம்போல மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நண்பர் அனுப்பியிருந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

பெருநாள் அன்று மட்டுமே இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மனநிறைவும் அந்தக் கணத்திலேயே அகன்றன.

இதயத்துக்கினியவர் எவராவது இறந்துபோகும் போது சோகம் மனத்தைக் கவ்வத்தானே செய்யும்.

மடியில் இருந்த கணிணித் திரையைப் பார்த்தவாறு உறைந்துபோனேன்.
அறையும் வீடும் நிசப்தத்தில் உறைந்திருக்க மௌலானாவைச் சந்தித்த அந்த நிமிடங்கள் மீண்டும் மனத்திரையில் ஓடின.

நான்கு மாதங்கள் கூட ஆகியிருக்காது.

வழக்கம்போல ஜமாஅத் அலுவலகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விசாரித்த பிறகு மௌலானாவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போனேன். வற்புறுத்தி தேநீர் குடிக்க வைத்தார். அவரும் சரி, நானும் சரி தேநீருடன் அளவளாவிய அந்த மாலை வேளை தான் நாம் ஒருவரையொருவர் சந்திக்கின்ற கடைசி வேளை என்று இம்மியளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

மீண்டும் கணிணித் திரையில் தெரிந்த அந்த வலைப்பூ வாசகங்களை வாசித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் போய் இருக்கின்றார். கடல் கடந்து நெடும்பயணம் கிளம்பிய அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த அவருடைய குடும்பத்தார் அதுதான் அவருடைய கடைசி பயணம் என்கிற விவரம் தெரிந்திருக்கவில்லை.
விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தவர்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி இயக்கத் தோழர்களையும் குடும்பத்தாரையும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என விமானம் ஏறிய அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த விமானப் பயணம் தான் தனது வாழ்வின் கடைசிப் பயணம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் இருக்கின்ற அவருடைய மகளுக்கும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பறந்து வந்திருக்கின்ற தனது தந்தையார் எவருடைய கண்களுக்கும் புலப்படாத கஃபன் துணியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரியாமலே போயிற்று. 

சிங்கப்பூரில் அவருடைய நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்துகொண்டிருந்தது எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நாடறிந்த எழுத்தாளர்; பன்னூலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற பணியில் அவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் மகத்தானது. அல்லாஹ் அவருடைய நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக! அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
அவருடை மரணம் எழுப்பிய சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!
 1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்-வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்-வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.                     
(அத்தியாயம் 59 அல்ஹஷர் : 18)

2. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப-தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்-களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.                              (அத்தியாயம் 16: அந்நஹ்ல் : 61)

3. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
 இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.
தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது.                                 (அத்தியாயம் 31 : 34)
மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி சாகிப் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாட்டில் தான் கழித்தார். ஆனால் சிங்கப்பூர்தான் அவரது மரணக்களம் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் அல்லாஹ் அவரை சிங்கப்பூருக்கு எடுத்துக் கொண்டு போனான்.
ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர் கூறும்: ‘நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!‘                        
(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான் : 154)
4. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.                                 (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் : 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.
அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?
உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று. அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.
ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.                              (அத்தியாயம் 87 அல் அஃலா : 16, 17)
5. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப்-படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!
எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!                                  
(அத்தியாயம் 12 : யூசுப் : 101)

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!

Sunday, November 6, 2011

Moulana Khudbudeen Ahmed Baqawi is no more!


Moulana A Khudbudeen Ahmed Baqawi at Kumbakonam Ulema meet
Moulana Khudbudeen Ahmed Baqawi, former Muawin Ameer-e-Halqa of Jamaat-e-Islami Hind Tamil Nadu is no more. Inna lillahi wa inna ilaihi rajiwoon. He breathed his last in faraway Singapore today evening. He had gone there to be with his daughter there. It is said that he suffered a massive heart attack which proved to be fatal. He was admitted at UYISN,KOON TECK PUAT HOSPITAL in Singapore for treatment. Eventually he breathed his last there.

Moulana Khudbudeen Ahmed Baqawi is a legend here. He was involved with the translation of The Holy Quran. It was his magnum opus.Moulana undertook this noble task under the active encouragement of Moulana M A Jameel Ahmed Sahib when there was no translation available in Tamil. Now we have dozens of translations available in the market.

Moulana Khudbudeen Sahib's contribution in the Tamil literary field is enormous. He has translated many books in Tamil. He is from Aravakurichi and got attracted to the Islamic movement when he was serving as a Imam in Villivakkam, Chennai. Moulana S M Malik of Hyderabad who was residing in Chennai then introduced him the revolutionery message of the tahreek. Moulana M. A. Jameel Ahmed Sahib identified and nurtured his talent in translating books.
Besides Moulana has trained, groomed and evolved many activists to the Iyakkam. Br T. E. Naser. Br Sheikh Dawood, Br Ashraf Ali and scores of youngsters were groomed by him. One of his star product is our own Br S. N. Sikkander, the present chief of Welfare Party of India. It could be said that an entire generation of youngsters got inspired by him. There was a time when not a single tarbiyati ijtema would be held without his speech or dars. His room in the IFT complex served as the training centre for all of those who had got attached with the Iyakkam. Moulana is very soft spoken. He had his own way of giving lectures. He was very amiable. He was very humble and polite and as they say in Tamil he would never அதிர்ந்து பேச மாட்டார். He would argue for his point of view. But, he would never fight. He used to lead the salat in Jamaat Office. He had this unique voice. His Qirat was exceptionally good and mellowing.
He was also proved to be Qutb of deen in the sense that he was steadfast in the way of Allah. He was a model for Azeemath. Being a alim he could have easily charted his own way and reaped much more and more benefits. But the tahreeki chap (Iyakka muthirai) was imbibed him such a way that he prefered Azeemath over Ruksath. He never cared about his family, sons, daughters. His only care was of the tahreek and its mission.  He was of the 'old generation' who prefered mission over everything else.
It is very difficult to think that he is no more. Two or three weeks back he came to see me. We had tea. We discussed a lot. Moulana shared some of his personal thoughts and plans. He declared that he had resigned from the post of Principal of Jamia Kulliatus Salam with his charecteristic smile and shining eyes. He said in the same breath that he had not resigned from the Jamaat and would continue to strive for the Nasbul ayn of the Jamaat till the last breath.
May Allah grant him Jannat ul Firdaus. Ameen.  
UPDATES:

Moulana was laid to rest in Singapore.
Moulana Khudbudeen Ahmed Baqawi in Trichy library

Moulana A Khudbudeen Ahmed Baqawi who passed away yesterday was laid to rest in  CHOU CHU KANG, MUSLIM CEMETERY in Singapore after Zuhr prayer around 2.00pm. Moulvi A Zafarullah Rahmani lead the Janaza prayer. Zafarullah Rahmani has been closely associated with the late Moulana for the past three decades. In an email Zafar Sahib said:
Just returned from qabrasthan after Tadfeen was over.
A group of young ulama helped me in performing the ghusl and takfeen of marhoom Mawlana Qutub Sahib.
I did lead the Janazah prayer. And then a brief condolence meeting was also held there. The late leader's service to the Islam and his zeal for grooming the younger generation was recalled.
No one thought to take a snap of the face of deceased Mawlana . Everybody had I phones and mobile with them. But nobody thought of taking a snap. Perhaps it was the will of Allah. Manshiyat e ilah? 
Every one in the Jamaat were unanimous in one point: ie Qutb sb looked like in a deep sleep in peace. Just like a "Nafs  e mutmayinnah"
Moulana Ejaz Ahmed Aslam Sahib led Qaibana Janaza prayer was held in Chennai.

A Qaibana Janaza prayer for the departed soul was organised in Chennai. It was the day of Eid-ul-Azha and a large number of the members, karkunan, muthafeeqeen converged in the Masjid-e-Ikhlas, Perambur High Road, Jamalia at Asr. It was a sheer coincidence that Moulana Ejaz Ahmed Aslam Sahib was in the city. He was here on his way to Benares to attend an interfaith conference organised by Budhists there.

Moulana delivered a short, concise and moving speech before the Janaza Prayer. He recalled his forty years of companionship with the Moulana. "He was soft spoken, humble and totally devoted to the cause of Islam. He devoted his entire life in the cause of Islam. We have to emulate this trait and totally dedicate ourselves to the cause of Islam", he said.

மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், IFT வெளியிட்டுள்ள  திருக்குர்ஆன்  தமிழ் மொழிப்பெயர்ப்பாளருமான மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் 6.11.2011 அன்று மாலை சிங்கப்பூரில் இறையடி சேர்ந்தார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜீவூன்.
தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கத்தை அனைத்து பகுதிகளில் வேரூன்ற செய்ததில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்கள். 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்கள்.  மேலும் இறைமார்க்கத்தை மேலோங்க செய்கின்ற பணிகளில் தனது இறுதி காலம் வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  தனது 76 வயதிலும் இஸ்லாமிக் சென்டர் வேலூரில் நடைபெற்றுவரும் குல்லியத்துஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார்கள்.
 A news report in JIH website. Here

Moulana Ejaz Ahmed Aslam

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி குறித்து மௌலானா இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம்
அன்புக்கினிய நண்பர் மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களுடன் எனக்கு நாற்பது ஆண்டுகளாக பழக்கம். திருச்சியைச் சேர்ந்தவர் அவர். சென்னையில் வில்லிவாக்கத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றி வந்தபோது ஜமாஅத்துடன் நெருக்கமானார். அதன் பிறகு தனது இறுதி மூச்சு வரை அவர் ஜமாஅத்துடன் இணைந்து இருந்தார்; இஸ்லாத்திற்காக சேவையாற்றுவதிலும், குர்ஆனின் செய்தியைப் பரப்புவதிலும், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதிலும் முழுமூச்சாக ஈடுபட்டார்.

 
அவர்  மிகவும் இனியவர்; கண்ணியமான மனிதர்; அதிகம் பேச மாட்டார்; அறிவும் தெளிவும் நிறைந்த அறிஞர். குர்ஆனைவும் நபிமொழியையும் நபிவழியையும் நன்றாக விளங்கிக் கொள்கின்ற ஆற்றலை அல்லாஹ் அவருக்கு நிறையவே அளித்திருந்தான். எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் அடி முதல் நுனி வரை மிக எளிதாக கணித்துக்கொள்கின்ற ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்.

 
குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற சேவையில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். தமிழில் எளிய நடையில் இனிய மொழியில் மொழிபெயர்ப்பு கிடைப்பதற்கு அவர் பெரும் பங்காற்றினார். 

 
வாய்மையுடனும் உளத்தூய்மையுடனும் அவர் ஆற்றிய சேவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக; அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக; அவருக்கு தன்னுடைய கருணையையும் கிருபையையும் அருள்வானாக; பாவங்களை மன்னித்தருள்வானாக; மறுமையில் முடிவே இல்லாத நிலையான வாழ்வின் மிக உயர்வான படித்தரங்களை வழங்குவானாக; அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை மேற்கொள்கின்ற நற்பேற்றை அருள்வானாக என நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். 

 
அவருடைய ஆளுமையை ஹபீஸ் மீரட்டி என்கிற கவிஞரின் கவிதை வரிகளில் சொல்லி விடலாம்:

ஹயாத் ஜிஸ் கி அமானத் தீஹ் உஸ் கூ லோடா தீ 
மை ஆஜ் செய்ன் சே ஸோதா ஹூன் பாவுன் பெஹ்லாயே
வாழ்க்கை என்கிற இந்த அமானத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன். 
இன்றைக்கு நிம்மதியாக உறங்குகின்றேன் கால்களை நீட்டிக்கொண்டு
மௌலானா  இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம் அவர்கள் வாணியம்பாடியைச் சார்ந்தவர். 1977 முதல் 1990 வரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 21 ஆண்டுகளாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய செயலாளராகச் சேவையாற்றி வருகின்றார்.
He was sobre, serious and soft spoken gentleman : Moulana Ejaz Ahmed Aslam

Moulana Qutbudeen Ahmed Baqawi has been my friend and comrade for the past four decades. He was from Trichy and got attached with the Islamic Movement when he was serving as an Imam in Villlivakkam, Chennai. He served for the cause of Islam, Quran and Islamic Education whole heartedly till his last breath.

He was a serious, sobre and soft spoken gentleman. He was a man of knowledge and God has provided him with the special gift of understanding the inner dimensions of Quran and Hadith.

He dedicated himself with the noble task of translating the word of God into Tamil. And with his major contribution the translation of the Holy Quran in Tamil was published. It is the simple, lucid and immensely captivating translation available in the market now.

May Allah accept his sincere services. May Allah forgive his shortcomings. May Allah bestow him with His rahmat and maqfirat and grant him higher rankings in the eternal abode of Jannah. May Allah bestow Sabr-e-Jameel to his family members. Aameen.

In the end one could personify the departed with the following lines from Hafeez Meerati :
Hayat jis ki amanat thee us ku lotaadee
main aaj chain se sotha hoon paaun pehlaye

I have returned the amanah of life to its owner
Today I stretch my legs and sleep merrily

Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib: Muqeet Mujtaba Ali

Muqeet Mujtaba Ali, a long time associate, student and friend of Moulana A Khutbudeen Ahmed Baqawi Sahib writes the following:

Sitting in silence I recall my meeting with him at his house about four months ago. He compelled me to have tea with him. Neither he nor I knew that we were meeting for the last time.
Just a week ago, he had been to Singapore to meet his daughter there.
His wife and other children who wished him a happy journey never even dreamt that he will never come back.
Those who saw him off at the airport never knew that they were seeing him off forever.
The man, who is no more now, never knew that he is not going to meet his near and dear ones again. That his flight to Singapore was the last flight of his life!
His daughter in Singapore never knew that her father has come all along from Chennai to Singapore with an invisible ‘kafan’ wrapped over his body.
None realised that Allah was preparing for his burial in Singapore.
The deceased was a great scholar of Islam. He was the author and translator of many books in Tamil. His great contribution was the translation of Qur’an in Tamil language.
I pray to Allah to forgive all his sins and grant him the highest place in Jannah. Aameen.

Some Points to Think and Act Upon:
1. Death is certain. None can escape death. So I and you must be wise enough to prepare for the life after death.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [٥٩:١٨
O Believers! fear Allah and let every person look and consider what he sends forward for the morrow. Fear Allah; Allah is well aware of all that you do. (Al-Hashr 59: 18)
2. The time of death is destined by Allah, the Giver of life, and the Taker of life. Neither the time of death can be advanced, nor can it be postponed.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ [١٦:٦١
Were Allah to take people to task for their wrong-doing, He would not have spared even a single living creature on the face of the earth. But He grants them respite until an appointed term. And when that term arrives, they have no power to delay it by a single moment, nor to hasten it.(Al-Nahl 16: 61)
3. The Place where one will die is decided already by Allah. None except Allah knows the place of every man’s death.

…وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ …[٣١:٣٤
No soul knows in which land he will die!(Luqman 31: 34)
Kuthbudeen Sahib spent his entire life in Tamilnadu, India. His death was destined in Singapore. So Allah took him there in the evening of his life.
We must realise and understand very well that Allah drives a person out of his house and takes him to a place where he is destined to die, and he dies there.

… قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ ….[٣:١٥٤
Say: ‘Even if you had been in your houses, those for whom slaying had been appointed would have gone forth to the places where they were to be slain.’ (Al Imran 3 : 154)
4. Most important thing for a Muslim is to die in the state of Imaan.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ [٣:١٠٢
Believers! Fear Allah as He should be feared, and see that you do not die save in the state of submission to Allah.(Al 'Imran 3: 102)
This ayah, along with other verses, is recited during Nikkah, marriage sermon. Brides and bridegrooms are reminded of death even during the happiest occasion of their life: Your happiness is not permanent. Nor is your life! Prefer that which is permanent over that which is transitory.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [٨٧:١٦
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [٨٧:١٧
Nay! but you prefer the present life, whereas the Hereafter is better and longer lasting. (Al-A'la 87: 16-17)
More Here 

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைவு : சில சிந்தனைகள் - முகீத் முஜ்தபா அலீ

6. நவம்பர், 2011. ஞாயிற்றுக்கிழமை.

தியாகத்திருநாள் நன்றாகக் கழிந்தது.

படுக்கப்போவதற்கு முன்பு வழக்கம்போல மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நண்பர் அனுப்பியிருந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

பெருநாள் அன்று மட்டுமே இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மனநிறைவும் அந்தக் கணத்திலேயே அகன்றன.

இதயத்துக்கினியவர் எவராவது இறந்துபோகும் போது சோகம் மனத்தைக் கவ்வத்தானே செய்யும்.

மடியில் இருந்த கணிணித் திரையைப் பார்த்தவாறு உறைந்துபோனேன்.
அறையும் வீடும் நிசப்தத்தில் உறைந்திருக்க மௌலானாவைச் சந்தித்த அந்த நிமிடங்கள் மீண்டும் மனத்திரையில் ஓடின.

நான்கு மாதங்கள் கூட ஆகியிருக்காது.

வழக்கம்போல ஜமாஅத் அலுவலகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விசாரித்த பிறகு மௌலானாவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போனேன். வற்புறுத்தி தேநீர் குடிக்க வைத்தார். அவரும் சரி, நானும் சரி தேநீருடன் அளவளாவிய அந்த மாலை வேளை தான் நாம் ஒருவரையொருவர் சந்திக்கின்ற கடைசி வேளை என்று இம்மியளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

மீண்டும் கணிணித் திரையில் தெரிந்த அந்த வலைப்பூ வாசகங்களை வாசித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் போய் இருக்கின்றார். கடல் கடந்து நெடும்பயணம் கிளம்பிய அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த அவருடைய குடும்பத்தார் அதுதான் அவருடைய கடைசி பயணம் என்கிற விவரம் தெரிந்திருக்கவில்லை.
விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தவர்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி இயக்கத் தோழர்களையும் குடும்பத்தாரையும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என விமானம் ஏறிய அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த விமானப் பயணம் தான் தனது வாழ்வின் கடைசிப் பயணம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் இருக்கின்ற அவருடைய மகளுக்கும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பறந்து வந்திருக்கின்ற தனது தந்தையார் எவருடைய கண்களுக்கும் புலப்படாத கஃபன் துணியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரியாமலே போயிற்று. 

சிங்கப்பூரில் அவருடைய நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்துகொண்டிருந்தது எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நாடறிந்த எழுத்தாளர்; பன்னூலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற பணியில் அவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் மகத்தானது. அல்லாஹ் அவருடைய நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக! அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
அவருடை மரணம் எழுப்பிய சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!
 1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்-வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்-வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.                     
(அத்தியாயம் 59 அல்ஹஷர் : 18)

2. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப-தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்-களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.                              (அத்தியாயம் 16: அந்நஹ்ல் : 61)

3. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
 இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.
தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது.                                 (அத்தியாயம் 31 : 34)
மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி சாகிப் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாட்டில் தான் கழித்தார். ஆனால் சிங்கப்பூர்தான் அவரது மரணக்களம் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் அல்லாஹ் அவரை சிங்கப்பூருக்கு எடுத்துக் கொண்டு போனான்.
ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர் கூறும்: ‘நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!‘                        
(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான் : 154)
4. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.                                 (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் : 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.
அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?
உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று. அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.
ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.                              (அத்தியாயம் 87 அல் அஃலா : 16, 17)
5. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப்-படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!
எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!                                  
(அத்தியாயம் 12 : யூசுப் : 101)

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!




Saturday, October 22, 2011

இந்தத் தோல்வி ஏன்


வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் நல்லாதரவுடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் நல்லாசியுடன் உள்ளாட்சித் தேர்தலில் நின்ற இயக்க சகோதரர்களும் சகோதரி ஒருவரும் தோற்றுப் போய் இருக்கின்றார்கள்.
களத்தில் நின்ற வேட்பாளர்களில் ஒரே ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. ஓரளவுக்கு எதிர்பார்க்கப்பட்ட வாணியம்பாடி இஸ்மாயில் சாகிபும் தோற்றுவிட்டார்.
 

ஒருபக்கம் இது வருத்தத்தை அளித்தாலும் மறு பக்கம் இந்தக் கன்னி முயற்சிக்குக் கிடைத்திருக்கின்ற ஆதரவு மகிழ்ச்சி அளிக்கின்றது. நம்முடைய வேட்பாளர்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஒவ்வொரு வாக்கும் மதிப்பு மிக்க வாக்குகளாகும்.
 

கட்சியின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக விழுந்த வாக்குகள் அல்ல அவை. புதியதொரு விடியலுக்காக மக்கள் அளித்துள்ள விசா பத்திரங்கள் அவை.
 

மதத்தின் அடிப்படையிலோ சாதிச் சார்பு நிலையால் உந்தப்பட்டடோ பதிவான வாக்குகள் அல்ல அவை. மக்கள் பணம் மக்களுக்கே என்கிற சிந்தனைக்கு ஆதரவாக எழுச்சியுடன் வாக்குச் சாவடிகளுக்கு வந்த நல்லவர்களின் ஆதரவு பத்திரங்கள் அவை.
 

பணத்துக்காக விழுந்த பருக்கைகள் அல்ல அவை. நல்லவர்களின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்கிற நல்லெண்ணத்திற்குக் கிடைத்த ஆதரவுத் தூண்கள் அவை.
 

வோட்டு வீணாகக் கூடாது; நான் போடுகின்ற ஆள் ஜெயிக்க வேண்டும் என்கிற குழந்தைத்தனமான சிந்தனையுடன் பதிவான வாக்குகள் அல்ல அவை. மக்கள் நல அரசாங்கம், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்கின்ற மக்களாட்சி, சமூக நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கொள்கைகளுக்கு ஆதரவான நல்லவர்களின் முத்திரை முழக்கங்கள் அவை.
 

ஆக, நமக்கு ஆதரவாக வாக்களித்த இந்த நல்லிதயங்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். நம் மீது அவர்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையைத் தக்க வைத்துக்கொள்ள அனைத்தையும் செய்ய வேண்டும். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். இன்னும் அதிகமாகப் பாடுபட வேண்டும்.
 

அதே சமயம் இந்தத் தோல்வி ஏன் என்பதைக் குறித்து நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய, ஆய்வு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
 

முதலில் இந்தத் தேர்தல் களத்தில் கன்னி முயற்சியாகக் களத்தில் நின்ற சகோதரர்களும் சகோதரிகளும் பாராட்டுக்குரியவர்கள். இறைவன் அவர்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பைக் கொடுத்தான். அதனை அவர்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அல்லாஹ்விடம் அவர்களுக்கு அவர்களுடைய உழைப்புக்காக, முயற்சிகளுக்காக, செலவிட்ட நேரத்திற்காக, பொருளுக்காக திண்ணமாக நற்கூலியும் நல்லருளும் உண்டு.
 

மக்களைச் சந்திப்பதற்கும் மக்களின் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்கும் மக்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்வதற்கும் இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. நம்முடைய வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்தார்கள். அவர்கள் அனைவருமே 

இப்போது மக்கள் மனங்களில் ஒரளவுக்கு அறிமுகமானவர்களாக ஆகிவிட்டார்கள். இந்த அறிமுகமும் பெயரும்தான் இனி வருங்காலத்தில் பெருவெற்றி பெறுவதற்கும் முத்திரை பதிப்பதற்கும் மூலதனமாகும். இதனை வைத்து நாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய தேவையையும் அவசியத்தையும் யாருமே மறுக்க முடியாது.
Read Moulana Moududi on electoral victory

The debacle in local bodies election in Tamil Nadu and some thoughts

Cross posted in luthfispace 

The debacle in local bodies election in Tamil Nadu and some thoughts



More than eleven brothers and sisters affiliated with the Islamic Movement contested in the just held local bodies eletion in Tamil Nadu. They were supported by the newly launched Welfare Party of India. Infact the state President of the welfare party Mr S. N. Sikkander toured, campaigned and strived for the victory of the canditates in fray. While the majority of them contested for the post of Corporator or Councillor one brother (Br A Syed Nazeer) contested for the Municipal Chairmanship. All of them have been defeated badly. Even the much hyped Janab T Ismail Sahib (the first member of Jamaat to get elected as councillor in the whole of country) too bited the dust.


The outcome is indeed sad and shocking. Ofcourse winning and losing a election is part of the game. But, it is sad that not a single soul managed to win. 


But, at the same time it is pleasing to note that thousands of voters across the state prefered to vote for these brothers and sisters. The fact that these canditates in their maiden attempt have succeeded in striking the chord with vast multitudes of people is itself reassuring. 


It should be noted that each and every single vote procured by these men and women is much more, more and more valuable than others. 


Because these are not the votes which were casted driven by the communal zeal or caste affiliation. These are the visa documents given by the noble for a dawn of new era.


These votes are not the one which are casted driven by the devotion to one's own party. These votes were casted by those noble souls who marched towards the polling booth attracted by the slogan மக்கள் பணம் மக்களுக்கே public money should be spent for the public alone.  


These votes were not bought for a few hundred rupees. Rather these are the votes of those illustrious sons and daughters of this great nation who believe in probity in public life. 


These are not the votes which were casted induced by the childish wish that "My vote should not go waste. I will vote only the winning canditate". Rather these are the votes casted by the responsible citizens of this country who believe in the concept of Welfare State, Communal Harmony, Inclusive Democracy etc.


Therefore we should thank all of these noble souls who prefered us and voted us. We should do everything to consolidate them and save their good-will. We have to work harder and harder. We have to work  indefatiguably. 


Besides we have to analyse the reasons for this debacle. What went wrong? Why did we fail? What to be done? How to rectify, reform and reach out? 


At the same time all those brothers and sisters who worked tirelessly deserve praise and acclaim. They have spent their time. They have spared their money. They have done everything. May Allah accept their endeavours and reward in excess. 


Another point is that these brothers and sisters have become known figures in their respective areas. In a way this is capital to us. And this capital if invested properly would give rich dividends in near future. Insha Allah. The urgency and the need of contiuous work and struggle is undisputable. Allah-o-Akbar.
Crossposted in Luthfispace.

Moulana Moududi on electoral victory


ஆகுமான அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு தோற்றுப் போவதை 'வெற்றி' என்றே நாங்கள் கருதுகின்றோம். ஹராமான தடுக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டு வெற்றிப் பெறுவதை 'தோல்வி' என்றே நாங்கள் நினைக்கின்றோம். 
சர்வாதிகாரத்தால் இந்த நாட்டுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கும் நஷ்டத்துக்கும்  இணையானது தான் வோட்டை பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதாலும் போலி வோட் கள்ள வோட் போடுவதால் ஏற்படுகின்ற இழப்பும நஷ்டமும்.
கள்ள வோட் போட்டும் பணம் கொடுத்து வோட்டை விலைக்கு வாங்கியும் ஜெயிப்பவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது.
- மௌலானா அபுல் அலா மௌதூதி
Related Posts Plugin for WordPress, Blogger...