Pages

Thursday, June 23, 2011

இருப்பதோ ஒரு மனம்..!


ஒருவரால் ஒரே சமயத்தில் இறைநம்பிக்கையாளராகவும் நயவஞ்சகராகவும் இருக்க முடியாது.

அவரால் ஒரே சமயத்தில் வாய்மையாளராகவும் பொய்யராகவும் இருக்க முடியாது.

அவர் நல்லவராகவும் கெட்டவராகவும் ஒரே சமயத்தில் திகழ முடியாது.

அவருடைய நெஞ்சுக்குள் இரண்டு இதயங்களா இருக்கின்றன - ஒன்றை உளத்தூய்மை மிக்க இதயம் என்றும் இன்னொன்றை இறைவனை அஞ்சாத இதயம் என்றும் சொல்வதற்கு? கிடையாது.

எனவே எந்தவொரு தருணத்திலும் மனிதன் ஒன்று நல்லவனாக இருப்பான். அல்லது கெட்டவனாக இருப்பான்.

இறைநம்பிக்கையாளனாக இருப்பான். அல்லது நயவஞ்சகனாக இருப்பான்.

இறைவனை மறுப்பவனாக இருப்பான். அல்லது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து வாழ்பவனாக இருப்பான்.

எனவே ஒரு நம்பிக்கையாளரைப் பார்த்து நயவஞ்சகர் என்று சொல்வதாலோ அல்லது நயவஞ்சகரைப் பார்த்து நம்பிக்கையாளர் என்று சொல்லி விடுவதாலோ உண்மையான நிலை மாறிவிடப் போவதில்லை.

அந்த நபரின் உண்மைநிலை ஒற்றை நிலையாகத்தான் இருக்கும்.

- மௌலானா மௌதூதி(ரஹ்)

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...