Pages

Showing posts with label Maryam Jameelah. Show all posts
Showing posts with label Maryam Jameelah. Show all posts

Saturday, November 10, 2012

மேற்கில் உதித்த சூரியன்...



மர்யம் ஜமீலா (1934-2012) எண்ணற்ற இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை விதைத்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய எழுத்துகளைப் போலவே அவருடைய வாழ்வும் வசீகரமானது. மலைக்க வைக்கும். சிந்திக்க வைக்கும். இறையருளை நினைவு கூர வைக்கும்.

மேற்கில் உதித்த சூரியனாய் உலகெங்கும் எண்ணற்ற இதயங்களை தனது எழுத்துக்களால் ஈர்த்த மர்யம் ஜமீலா அக்டோபர் 31, 2012 அன்று லாகூரில் அவருடைய இல்லத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இறக்கின்ற வரை அவருடைய பேனா ஓயவேயில்லை. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி வர்ல்ட் முஸ்லிம் புக் ரிவியூ காலண்டிதழில் அவர் தொடர்ந்து பல்வேறு நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்தார்.


ஒரு ஆசை

என்னை ஷஃபீக்கா ஆபாவின் பக்கத்தில்...

‘ஒரு பெண் உலகை விட்டுப் போகும்போது கணவன் கண்ணீர் விட்டு அழுகின்றார் எனில் அந்தப் பெண் எத்துணை நற்பேறு பெற்றவளாக இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்:  ‘ஒரு பெண் வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்து, பெரும் பாவங்களை விட்டு முற்றிலும் விலகி இருந்து, அவள் இறக்கின்ற வரை கணவனின் மகிழ்வையும் திருப்தியை யும் பெற்றிருந்தாள் எனில் அவள் சுவனவாசி என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்’

இந்த நபிமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தாம் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலா அவர்களின் கணவர் யூசுப் கானின் நண்பர் ஒரியா மக்பூல் ஜான் சொல்வதைக் கேளுங்கள்:

‘ஆண்கள் எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதுவும் யூசுப் கான் போன்ற மிடுக்கான, கம்பீரமான ஆண் மகனைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? எல்லா வேளைகளிலும் அவர் பட்டான்களுக்கே உரிய மிடுக்குடனும் கண்டிப்பான தோரணையுடனும்தான் பார்த்திருக்கின்றேன். அவரை உணர்ச்சிவசப்பட்டு எந்த நாளும் பார்த்ததில்லை. ஆனால் அவர் அந்த மகத்தான பெண்மணியின் மரணத்தின்போது குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.

நியூ யார்க் நகரத்தின் ஒரு செக்குலர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யூசுப் கானின் இரண்டாவது மனைவி ஆவார். எத்தகைய உணர்வும் உந்துதலும் அவரை நியூ யார்க்கிலிருந்து லாகூர் கொண்டு வந்து சேர்த்தது என்பதை யாரால் தான் உணர முடியும்? ஆனால் லாகூரில் அந்த இரண்டு மாடி வீட்டில் அவர் யூசுப் கானின் இரண்டாவது மனைவியாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து அந்த வீட்டில் நிலவிய இணக்கமும், அன்பும், பாசமும் இருக்கின்றதே... அதனை இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குள்ளும் அப்படியொரு இணக்கமும் அன்பும் இழையோடியது. இருவரின் குழந்தைகளும் சகோதர வாஞ்சையுடன் ஒன்றாய்க் கலந்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் கூட அந்நிய உணர்வு அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

குழந்தைகள் முதல் மனைவியை அம்மி (அம்மா) என்றும் இந்தப் பெண்மணியை ஆபா(அக்கா) என்றும் அழைத்து வந்தார்கள். குழந்தைகள் முதல் மனைவியின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வளர, இந்தப் பெண்மணி உலகம் முழுவதற்கும் மேற்கத்திய சிந்தனைகளின் வெற்றுத்தனத்தையும் இஸ்லாத்தின் சத்தியச் செய்தியையும் உணர்த்துவதற்காக எழுத்துப் பணி ஆற்றி வந்தார். அதிலேயே ஓயாமல் ஒழியாமல் ஈடுபட்டு வந்தார்.

- இவ்வாறு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரியா மக்பூல் ஜான் எழுதியிருக்கின்றார்.

அவர் குறிப்பிட்டுள்ள இன்னொரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். மக்பூல் ஜான் எழுதுகின்றார்: “மர்யம் ஜமீலா அவர்கள் மறைந்த நாள் அன்று நான் அவருடைய வீட்டில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தேன். மறைந்த மர்யம் ஜமீலா அவர்களின் கணவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பட்டான் சாகிப் கண்களில் கண்ணீர் மல்க துக்கம் தோய்ந்த குரலில் என்னிடம் சொன்ன வாக்கியம் என்னை உருகச் செய்துவிட்டது. தன்னையும் ஷஃபீக்கா ஆப்பாவுக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன்பு மர்யம் ஜமீலா வசிய்யத் செய்திருந்தாராம். ஆஹா...! என்னே அன்பு.. என்னே பாசம்...! இது போன்ற அன்பும் பாசமும் இஸ்லாத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்ட தூய்மையான உள்ளத்தில்தான் உதிக்கும்.”

ஒரு சான்று

திருப்பத்தைத் தந்த சென்னைவாசி

மர்யம் ஜமீலா இஸ்லாத்தை ஏற்றதில் சென்னைவாசி ஒருவருக்கும் சிறு பங்கு இருந்தது.

அந்த சென்னைவாசியின் பெயர் சி அப்துல் ஜலீல்.

சென்னை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்-ஏ-முகாமியாக இருந்துள்ளார். வணிகராக, பழ வியாபாரியாக, பத்திரிகையாளராக இருந்துள்ளார். உர்துவிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்து வந்துள்ளார்.

அவர் இவ்வாறு மௌலானா மௌதூதி அவர்களின் ஜிந்தகி பாத் மௌத் என்கிற கட்டுரையை (தமிழில் ’மரணத்திக்குப் பின்’ என்கிற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது IFT வெளியீடு. ) ஆங்கிலத்தில் Life after death என்கிற பெயரில் மொழிப்பெயர்க்க அதனை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து அந்தக் காலத்தில் வெளி வந்த முஸ்லிம் டைஜஸ்ட் என்கிற மாத இதழ் வெளியிட, நியு யார்க் நகரில் வாழ்ந்து வந்த மார்கரட் என்கிற யூதப் பெண்மணிக்கு அந்தக் கட்டுரை வெகுவாக கவர, அவர் மௌலானா மௌதூதியுடன் தொடர்புக் கொள்வதற்காக கேப்டவுன் முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகையை தொடர்புக் கொள்ள, அவர்கள் சி அப்துல் ஜலீலைத் தொடர்புக் கொள்ள, மெட்ராசிலிருந்து ஜலீல் சாகிப் முகவரியை அனுப்ப, மார்கரெட் அம்மையார் மௌலானாவைத் தொடர்புக் கொள்ள... அதன் பிறகு நடந்தது வரலாறு ஆயிற்று.

சி. அப்துல் ஜலீல் அவர்களின் அந்த Life after death  என்கிற ஆங்கிலக் கட்டுரை வெளியான அந்த முஸ்லிம் டைஜஸ்ட் நான் மாநில அலுவலகத்தில் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். அப்போது அந்தக் கட்டுரைக்குப் பின்னால் இது போன்ற சரித்திரம் இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இன்று அல்கோபாரிலிருந்து அப்துல் அஸீம் என்கிற பெரியவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இந்த சரித்திர நிகழ்வின் இன்னொரு செய்தியைத் தாங்கியிருந்தது. மேற்படி முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகை, லைஃப் ஆஃப்டர் டெத் கட்டுரை போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த அப்துல் அஜீம் இன்னொன்றையும் சொன்னார்:

“1969-இல் நான் சி. அப்துல் ஜலீல் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னிடம் மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டீஸ் என்கிற நூலைக் காட்டினார்.

அதில் ‘ I am glad to present to you my book , as your translation " LIFE AFTER DEATH" inspired me to discover Islam"  (உங்களுக்கு என்னுடைய நூலை அன்பளிப்பாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் லைஃப் ஆஃப்டர் டெத் என்கிற உம்முடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைதான் என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது) என மர்யம்ஜமீலா அவர்களே கைப்பட எழுதியிருந்தார்.”

மர்யம் ஜமீலாவின் வரலாற்றின் இந்த அம்சம் உண்மையிலேயே மலைக்க வைப்பதாகும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார். அதனை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றார். அது தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகின்றது.
அந்தக் கட்டுரையை நியூயார்க்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி வாசிக்கின்றார். பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
சத்தியத்தைத் தேடியடைகின்ற ஆர்வம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு வழிகாட்டுதல் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதற்காக இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்; எவரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபடுத்திக் கொள்வான் என்பதற்கு மர்யம் ஜமீலாவின் வரலாறு சான்று.

ஒரு கருத்து

காலமெல்லாம் பேசப்படும்

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமும் இன்றைய அழைப்பாளர்களுக்கும் சத்தியப் போராளிகளுக்கும் பெரிதும் ஊக்கமும் உந்துதலும் தருவதாகும். இதனை அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அமீரே ஜமாஅத் குறிப்பிட்டிருப்பதாவது:

“நியூ யார்க்கில் வாழ்ந்து வந்த தீவிரமான, கட்டுக்கோப்பான மதப்பற்று மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்த மர்யம் ஜமீலா குர்ஆனை வாசித்ததன் மூலமாக இஸ்லாத்தின் உண்மைநிலையையும் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதையும் உணர்ந்ததும் சற்றும் தயங்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

எதற்கும் பயப்படவில்லை.

எத்தகைய பேராசைக்கு ஆளாகவில்லை.

உறவினர்களின் அன்புக்குப் பணிந்து விடவில்லை.

எத்தகைய முட்டுக்கட்டைக்கும் குனிந்துபோக-வில்லை.

சத்தியத்தை ஏற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியும் ஊக்கமும் இருந்ததெனில் தன்னுடைய உற்றார் உறவினøயும் பிறந்த நாட்டையும் எல்லாவற்றையும் துறந்து அந்நியமான நாடு ஒன்றுக்கு புலம் பெயர்ந்தார். ஹிஜ்ரத் செய்துவிட்டார். அதன் பிறகு திரும்பிப் போகவே இல்லை.

மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இந்தப் பரிமாணம் ஒளிமயமானதாகும். காலமெல்லாம் பேசப்-படக்கூடியதாகும். சத்தியத்தைத் தேடியடைய விரும்பு-கின்ற அனைவருக்கும்ஊக்கம் அளிப்பதாகும்’

ஒரு ஏக்கம்

தமிழில் மொழிபெயர்ப்பது எப்போது?

மேற்கில் உதித்த சூரியனாக அறிவுலகில் ஜொலித்த மர்யம் ஜமீலா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். மாக்கியவல்லியின் உலகாயதச் சிந்தனைகளை நார் நாராய்க் கிழித்திருக்கின்றார். அய்ரோப்பியர்கள் பெரிதும் தூக்கிவைத்துக்கொண்-டாடுகின்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார். வால்டேரின் செக்குலரிசத்தை-யும் சிக்மண்டு ஃபிராடின் பாலியல் சார்ந்த உளவியலையும் ப்பூவென ஊதித் தள்ளியிருக்கின்றார். பிரிட்டிஷ் அறிஞர் தாமஸ் ராபர்ட் மால்தஸின் மக்கள்தொகை அபாய அறிவிப்பையும் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சிந்தனையையும் எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாக, ஆழமாக விமர்சித்திருக்கின்றார் எனில் படிப்பவரின் புருவங்கள் வில்லாய் வளைந்துவிடும்.

மேற்கத்திய சிந்தனைகள் மீதான அவருடைய விமர்சனங்கள் கூர்மையானவை. கனமானவை. காலத்தை வென்று நிற்பவை. அதே சமயம் ஆழமான தத்துவங்-களையும் எளிமையாக, தீர்க்கமாக எழுதுகின்ற வல்லமை அவருக்கு இருந்தது. மர்யம் ஜமீலா அத்துடன் நிற்கவில்லை. இந்த மேற்கத்திய பாடாவதி சிந்தனைகளுக்கு மாற்றாக ஒளிமயமான இஸ்லாமிய அறவுரைகளை அழகாக, தீர்க்கமாக எடுத்துரைத்திருக்கின்றார்.

குறிப்பாக வெஸ்டர்ன் சிவிலிசேஷன் அண்டு தி டிஹியூமனைசேஷன் ஆஃப் மேன்கைண்டு என்கிற நூலையும் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ன்ட் பை இட்செல்ஃப் என்கிற நூலையும் இஸ்லாம் அண்டு தி வெஸ்ட் என்கிற நூலையும் சொல்லலாம்.

எளிமையான ஆங்கிலத்தில் ஓட்டமும் துள்ளலும் நிறைந்த நட்பு மணம் கமழ்கின்ற சரளமான நடையில் ஆழமான கருத்துகளை மிகவும் சாதாரணமாக எழுதி முடித்திருக்கின்றார் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலாவின் நூல்கள் தமிழில் வெளியாகாமல் இருப்பது ஒரு குறையே. இனி வருங்காலத்திலாவது அவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.

மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல்:

1. ISLAM VERSUS THE WEST (இஸ்லாம் வர்சஸ் தி வெஸ்ட்)
2. ISLAM AND MODERNISM  (இஸ்லாம் அண்டு மாடர்னிஸம்)
3. ISLAM IN THEORY AND PRACTICE (இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டிஸ்)
4. ISLAM VERSUS AHL AL KITAB PAST AND PRESENT (இஸ்லாம் வெர்சஸ் அஹ்லே கிதாப் பாஸ்ட் அண்டு பிரசன்ட்)
5. AHMAD KHALIL (அஹ்மத் கலீல் - வரலாற்று நாவல்)
6. ISLAM AND ORIENTALISM  (இஸ்லாம் அண்டு ஒரியன்டிலிஸம்)
7. WESTERN CIVILIZATION CONDEMNED BY ITSELF  (வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ட் மை இட்செல்ஃப்)
8.  CORRESPONDENCE BETWEEN MAULANA MAUDOODI AND MARYUM JAMEELAH  (கரஸ்பான்டன்ஸ் பெட்வீன் மர்யம் ஜமீலா அண்டு மௌலானா மௌதூதி)
9. ISLAM AND WESTERN SOCIETY (இஸ்லாம் அண்டு வெஸ்டர்ன் சொசைட்டி)
10. A MANIFESTO OF THE ISLAMIC MOVEMENT (ஏ மானிஃபெஸ்டே ஆஃப் தி இஸ்லாமிக் மூவ்மெண்ட்)
11. IS WESTERN CIVILIZATION UNIVERSAL (இஸ் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் யூனிவர்சல்)
12 WHO IS MAUDOODI ? (ஹு இஸ் மௌதூதி?)
13 WHY I EMBRACED ISLAM  (வை ஐ எம்ப்ரேஸ்ட் இஸ்லாம்)
14 ISLAM AND THE MUSLIM WOMAN TODAY (இஸ்லாம் அண்டு தி முஸ்லிம் வுமன் டுடே)
15 ISLAM AND SOCIAL HABITS  (இஸ்லாம் அண்டு சோஷியல் ஹாபிட்ஸ்)
16 ISLAMIC CULTURE IN THEORY AND PRACTICE (இஸ்லாமிக் கல்ச்சர் இன் தியரி அண்டு பிராக்டீஸ்)
17 THREE GREAT ISLAMIC MOVEMENTS IN THE ARAB WORLD OF THE RECENT PAST (த்ரீ கிரேட் இஸ்லாமிக் மூவ்மென்ட்ஸ் இன் தி அரப் வர்ல்ட் ஆஃப் தி ரிசென்ட் பாஸ்ட்)
18 SHAIKH HASAN AL BANNA AND IKHWAN AL MUSLIMUN (ஷேக் ஹஸன் அல்பன்னா அண்டு இக்வான் அல் முஸ்லிமீன்)
19 A GREAT ISLAMIC MOVEMENT IN TURKEY (ஏ கிரேட் இஸ்லாமிக்மூவ்மெண்ட் இன் துர்க்கி)
20 TWO MUJAHIDIN OF THE RECENT PAST AND THEIR STRUGGLE FOR FREEDOM AGAINST FOREIGN RULE  (டூ முஜாஹிதீன்ஸ் ஆஃப் தி ரீசன்ட் பாஸ்ட் அண்டு தேயர் ஸ்டிரக்கல் ஃபார் ஃப்ரீடம் அகைன்ஸ்ட் ஃபாரின் ரூல்)
21 THE GENERATION GAP ITS CAUSES AND CONSEQUENCES  (தி ஜெனேரேஷன் கேப் இட்ஸ் காசஸ் அண்டு கான்ஸ்க்யூசன்சஸ்)
22 WESTERNIZATION VERSUS MUSLIMS  (வெஸ் டர்னைசேஷன் வர்சஸ் முஸ்லிம்ஸ்)
23 WESTERNIZATION AND HUMAN WELFARE (வெஸ்டர்னைசேஷன் அண்டு ஹியூமன் வெல்ஃபேர்)
24 MODERN TECHNOLOGY AND THE DEHUMANIZATION OF MAN (மாடர்ன் டெக்னாலஜி அண்டு தி டீஹியூமனைசேஷன் ஆஃப் மேன்)
25 ISLAM AND MODERN MAN (இஸ்லாம் அண்டு மாடர்ன் மேன்)‘

டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

Thursday, May 20, 2010

Dr Abdullah (Periyar Dasan) in Dubai

 
Dr Abdullah reading அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.. a book published by IFT
Photo courtesy : The New Indian Express

The following is the preface to a thought provoking interview of Professor Periyar Abdullah (former Periyar Dasan). It was published in Sathya margam website. Br Jameel the UAE representative of Sathymargam and Br Ashraf have done a commendable job. The intervies is good, pleasing and thought provoking. Still, there is a feeling that yearns for something more. yeh dil mange more! The personality of Dr Abdullah is like that. You could not get satisfied. you yearn for more. Read the interview here

“என்ன … இப்புடி திடீர்னு …?”
தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை – முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.
இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.
அதில், “இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது” என்று பழைய பெரியார்தாசனை ‘உன்னிப்பாக’க் கவனித்து வந்த, ‘பெரியாரிஸ்ட்’ ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள்,
  1. ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, ‘பெரியார்தாசன்’ ஆக மாறியது.
  2. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, ‘பெரியார் சமதர்ம இயக்கம்’ எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது.
  3. புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, ‘சித்தார்த்தன்’ ஆக மாறியது.
  4. ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து ‘நந்தன்’ இதழில் எழுதியது.
  5. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் ‘கல்ராசி’ பற்றிப் பரப்புரை செய்தது.
  6. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, ‘தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி’யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது.
  7. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது.
ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.
கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற ‘பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக’த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் ‘பெரியார்தாசன்’ என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, “சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?” என்று கேட்டபோது, “இன்ஷா அல்லாஹ்” என்றார்.

Monday, March 22, 2010

Periyar Dasan, Moosa Kaka and Maryam Jameelah!

Kavi Yogi Thannan Moosa
Professor Abdullah, former Periyar Dasan, mentions him as the man who provided திருப்பம் - turning point in his life.

He is Kavi Yogi Kavinjar Thannan Moosa. Affectionately called by all as Moosa Kaka. He has authored many books.  சௌந்தர்ய முத்திரை - Soundharya Muthirai and வெற்றிச் சூடி - Vetric choodi were the famous ones. He used to prefix சௌந்தர்ய முத்திரை - Soundharya Muthirai with his name for some time. He was very passionate about Tamil, literature, books etc.

He has served Islamic Foundation Trust and Jamaat-e-Islami Hind's cause in various ways. He was never an office bearer. But, he was one of those workers who remain in the back ground and work silently. He was involved in the production of books and advised in literary matters. He was a close confidant, friend and colleague of Moulana M. A. Jameel Ahmed.

He has left Chennai and has made Thondi his home. It is his ancestrol village. Besides it is far more better than the callous Chennai and its selfish people.

I called him over phone and talked with him. He was very happy to hear me. He talked about Periyar Dasan, about the trips he used to make to Thiruverkadu to meet the Professor. 'His criticisms were very blunt, aggressive; and I used hear him patiently. I allowed him to pour out fully. Then I would say my version in a humble way', he said in a feeble voice. I could visualise the scene. Moosa Kaka with his typical half smile and twinkling eyes countering the polemics of the professor in his own style!

He was one of the notable absentees in the recently held First State Conference of Jamaat-e-Islami Hind in Trichy.
He could not make it because of ill health. But, a lot of people remembered him and fondly recalled pleasant memories. Ofcourse, if he had been there in Trichy he would have added colour to the event. When I mentioned this fact he concurred with it and mumbled something.
 He is yet to receive the Manattu Malar! - the conference souvenir!! He then hastily added, 'What am I to do with the souvenir? I cannot read now. I need a reader. Nowadays it is difficult to talk more than ten minutes.' Suddenly it dawned to me that I got him engaged in the phone for more than twenty minutes! I wished him and hung up.

Moosa Kaka is not the first Chennaiite who has provided திருப்பம் - turning point in some one's life. There are many more. I have read about one such Chennaiite or Madrasi. And this Madrasi had provided திருப்பம் - turning point in Maryam Jameelah's life. It is very fascinating and interesting.

His name is Janab C. Abdul Jaleel Sahib. He was a journalist, social activist, writer, translator and fruit vendor. He was Ameer-e-Muqami of Jamaat-e-Islami Hind Madras in the 1950s.

He was a prolific writer and spirited reader. At those days he used contribute regularly to a monthly magazine 'Muslim Digest' published from Cape Town, South Africa. He used to translate the articles of Moulana Syed Abul A'la Moududi. 

He had translated Moulana Moududi's article 'Zindgi bath mout' - 'Life after death' - மரணத்திற்குப் பின்!. It was published in Muslim Digest monthly. (I have seen this copy in Halqa Office.) Margaret Marcus of New York read this article and wanted to contact and corespond with Moulana Moududi. She wrote to Muslim Digest people. They contacted C Abdul Jaleel. Jaleel Sahib and he provided the address of Moulana Moududi. Then Margaret Marcus contacted Moulana Moududi. Margaret Marcus became Maryam Jameelah.
And the rest is history.

Read : Periyar EVR's views on Islam! 

Read : Seshachalam to Periyar Dasan to Abdullah!
Read : Periyar Dasan Abdullah's journey towards Islam! 
Read : Periyar Dasan's wife to embrace Islam!
Read : Am I ready to face my Lord? 
Read : Periyar Dasan, Valampuri John and Islam!
Related Posts Plugin for WordPress, Blogger...