Pages

Friday, September 9, 2011

இந்தியனே நீ யோசி!புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
பாசிஸ இருள் அகல்வது எப்போது?
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
ஏழை மகிழ்வது எப்போது?
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
அமெரிக்க மயக்கம் கலைவது எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்படி? எப்படி?
சமூக நீதி கிடைப்பது எப்படி? எப்படி?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
இலவச மருத்துவம் எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
குழந்தைகள் சிரிப்பது எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
நீதி மலர்வது எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
அமைதி நிலைப்பது எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

காட்சி மாறுவது எப்போது?
எல்லோருக்கும் கல்வி எப்போது?   
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!
செயற்கை வளர்ச்சி ஜொலிக்குது!
நகரங்கள் எல்லாம் மின்னுது!
    ஏழையின் வயிறோ கலங்குது!
    பசியும் பட்டினியும் வாட்டுது!
இந்த இடைவெளி நாட்டை அழித்துவிடுமே!
இந்த முரண்பாடு மனிதத்தைச் சிதைத்துவிடுமே!
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!


படிப்பறிவு அற்றவர்கள் எத்தனை...! எத்தனை...!
மருத்துவ உதவி கிட்டாதவர்கள் எத்தனை..! எத்தனை...!
            ஆதரவாளர்கள் எங்கே போனார்கள்?
            துயர் துடைப்பவர்கள் எங்கே தொலைந்தார்கள்?

உரிமை மறுக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை..! எத்தனை..!
கருவிலே கொல்லப்பட்டவர்கள் எத்தனை..! எத்தனை..!
            ஆதரவாளர்கள் எங்கே போனார்கள்?
            துயர் துடைப்பவர்கள் எங்கே தொலைந்தார்கள்?

நல்ல கல்வி! மலிவான கல்வி!
எல்லோருக்கும் கிடைக்க வேண்டாமா?
                        இந்தியனே நீ யோசி!
                        புதிய அத்தியாயத்தை நீ வாசி!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...