Pages

Sunday, April 4, 2010

Moulana Mujahidul Islam Qasimi..!

மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி
  
அவர்கள் காத்திருந்தார்கள்..! 

ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது.
அந்த நடைமேடையில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருந்தனர். அவர்களில் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். திரும்பும் திசையெல்லாம் வெள்ளை தொப்பிகளும், கருந்தாடிகளுமாக சூழலே வித்தியாசமாக இருந்தது.
ரயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது போல தோன்றியது.
....  ....
Your attention please.... பயணிகளின் அன்பான கவனத்திற்கு.... என அறிவிப்பாளரின் குரல் ஒலித்ததும் ரயில் நிலையமே சிலிர்த்தெழுந்தது..!
போர்ட்டர்கள் முண்டாசு கட்டிக் கொண்டு, துண்டு பீடியை தூர எறிந்தவாறு ரயிலை எதிர்கொள்ள ஆயத்தமாகினர்.
ரயில் வந்தது.
முஸ்லிம்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பெட்டியை நோக்கி படையெடுத்தனர்.
அந்தப் பெட்டியிலிருந்து இறங்கினார், மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி.
....  .... ....
மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!மௌலானாவுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது. சிரித்த முகத்துடன் மௌலானா கை குலுக்கினார். நலம் விசாரித்தார்.

பச்சை விளக்கு எரிந்து விட மீண்டும் வண்டியில் ஏறி விட்டார்.

நடை மேடையில் நின்ற மக்கள் அன்போடு கேட்டார்கள் : Moulana kuch nasihat keejiye..! மௌலானா ஏதாவது சொல்லுங்கள்..அறிவுரை கூறுங்கள்..!

வண்டி மெல்ல நகரத் தொடங்கியது..!

மௌலானா சொன்னார்: Muthahid rahiye..! muththahrik rahiye..! முத்தஹித் ரஹியே..! முத்தஹ்ரிக் ரஹியே..! ஒன்றுபட்டு இருங்கள்..! சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருங்கள்..!
....  .... ....
இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!
அவர் தான் மௌலானா முஜாஹிதுல் இஸ்லாம் காசிமி. கடுகு சிறுத்தாலும் காரம் சிருக்கது என்பதைப் போல எத்துணை அழகாக இரண்டே வார்த்தைகளில் சொல்லி விட்டார்!
மௌலானா மிகப் பெரும் பேச்சாளர். மணிக்கணக்கில் சலிப்புத் தட்டாமல் பேசுவதில் வல்லவர்.

2002 இல் இதே ஏப்ரல் மாதத்தில் 4 ஆம் நாள் அன்று காலமானார். (இன்னா லில்லாஹி..)

ICU இல் மரணப் படுக்கையில் இருந்த நேரத்திலும் நினைவு திரும்பும் போதெல்லாம் குஜராத் நிலவரம் குறித்து தான் விசாரித்துக் கொண்டிருந்தார்.

அவரைப் போன்ற ஆலிம்கள் தான் இன்றும் நமக்குத் தேவைப் படுகிறார்கள்..!
அல்லாஹ் கிருபை செய்வானாக..!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...