Pages

Sunday, November 13, 2011

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரியின் ஆதங்கம்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தொடங்கி அறுப-தாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அறிவு, சிந்தனை, செயல் என பல்வேறு களங்களில் அது நீண்ட தூரத்தைக் கடந்து வந்துள்ளது. இந்த நீண்ட பயணம் தொடர்பாக உங்களுடைய கருத்து என்ன?

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி: சித்தாந்தக் களத்தில் ஜமாஅத் ஊழியர்கள் அடைய வேண்டிய படித்தரத்தை இன்று வரை எட்டவேயில்லை.

ஜமாஅத் ஊழியர்களில் யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். சகோதர சமுதாயங்களைச் சேர்ந்த சகோதரர்கள் மத்தியில் அழைப்புப் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஊழியர்களும் சரி, முஸ்லிம் சமுதாயத்தின் சீர்திருத்தத்திலும் வளர்ச்சியிலும் ஈடுபாடு கொண்டிருக்கின்ற ஊழியர்களும் சரி,  சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயலாற்றுகின்ற ஊழியர்களும் சரி, நாட்டு நடப்பு, தேசப் பிரச்னைகள் தொடர்பான விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கின்ற ஊழியர்களும் சரி - எல்லாருமே அறிவுக்களத்தில் பின்தங்கியவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

நாட்டுநடப்பிலும் அன்றாட பிரச்னைகளிலும் நல்ல விஷய ஞானத்தைக் கொண்டிருக்கின்றவருக்கு இந்திய மதங்கள் பற்றிய ஞானம் இல்லை. ஏதாவதொரு துறையில் நல்ல தேர்ச்சி பெற்றவருக்கோ மார்க்கப் புலமை இல்லை.

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பணியாற்றுகின்றவர்களுக்குத் தொடர்ந்து பல்வேறு விதங்களில் பயிற்சி தரப்படுவதால் சித்தாந்த பயிற்சி முகாம், சிந்தனைப் பட்டறை என பல்வேறு நிலைகளை அவர்கள் கடந்து வந்திருப்பதால் அவர்களுக்கு இந்திய மதங்களில் சிலவற்றைக் குறித்து சுருக்கமான அறிமுகம் கிடைத்துவிடுகின்றது. ஆனால் அவர்களில் எவருக்குமே எந்தவொரு மதத்தைக் குறித்தும் விரிவான, ஆழமான ஞானம் இல்லை.

இன்ன மதத்தைக் குறித்து இன்னாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதனைக் குறித்து வேறு எவரிடமும் விசாரிக்க வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்கின்ற அளவுக்கு நம்மில் எத்தனை வல்லுநர்கள் உருவாகி இருக்கின்றார்கள்?

உண்மையென்னவெனில் சிந்தனைப் பட்டறைகளிலும் பயிற்சி முகாம்களிலும் பங்கேற்றதால் இவர்களுக்கு இந்திய மதங்களைக் குறித்து ஒரளவுக்கு அறிமுகம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், இந்த மதங்களின் நூல்களை வாசிப்பதற்கும், வரலாற்றை அறிந்துக் கொள்வதற்கும் இவர்கள் மெனக்கெடுவதில்லை. அந்தச் சுருக்கமான அறிமுகத்தை வைத்துக் கொண்டே காலத்தை ஓட்டிவிடுகின்றார்கள். அவற்றைக் குறித்து அறிவதற்கும் நூல்களை வாசிப்பதற்கும் நேரமும் ஒதுக்குவதில்லை; அவகாசமும் கிடைப்பதில்லை.

நாம் வாழ்கின்ற நாடு எந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாடு. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் வல்லுநர்களும்  தேர்ச்சி பெற்ற திறமையாளர்களும் கொட்டிக் கிடக்கின்ற நாடு இது.
எல்லாத் துறைகளிலும் பெரும் பெரும் படிப்பாளிகளும் சூரப்புலிகளும் நிறைந்துள்ள நாடு இது. 

இந்தப் பின்னணியில் நம்முடைய இயக்கத்திலும் வல்லுநர்களும் ஆற்றல்வாய்ந்தவர்களும் நிறைந்திருக்க வேண்டாமா என்கிற கவலை எனக்குள் அவ்வப்போது எட்டிப் பார்ப்பதுண்டு. சிலசமயம் பேருருவம் எடுத்து என்னுடைய தூக்கத்தைப் பறிப்பதுமுண்டு.

நம்மில் சிலராவது வேதங்களையும் புராணங்களையும் கரைத்துக் குடித்த வல்லுநர்களாக மலர வேண்டாமா?

நம்மில் சிலராவது புத்த மதத்திற்கு அத்தாரிட்டி இவர் எனச் சொல்கின்ற அளவுக்கு புத்த மதத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டாமா?

நம்மில் சிலராவது சமஸ்கிருதத்தில் புலமை பெற்றிருக்க வேண்டாமா?

பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், பெரிய புராணம், உபநிஷத்துகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றார்கள்?

இவ்வாறு இந்த மதங்களில் ஆழ்ந்த புலமை பெற்று குர்ஆன், நபிமொழி ஆகியவற்றின் ஒளியில் அவற்றை விமர்சனமும் ஆய்வும் செய்கின்ற அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள் நம்மில் உருவாக வேண்டாமா?

இஸ்லாமிய இயக்கத்தின் தற்போதைய நூல்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நூல்களில் மேற்கத்திய சிந்தனைகள், சித்தாந்தங்கள் மீதான விமர்சனத்தைப் பார்க்க முடியும். நாத்திகம், கம்யூனிஸம், முதலாளித்துவம் போன்றவை பற்றிய விவாதங்களைப் பார்க்க முடியும். ஜனநாயகம், மதச்சார்பின்மை குறித்தும் இந்த நூல்கள் பேசுகின்றன.
ஆனால் இந்தியாவில் இருக்கின்ற மதங்கள், இந்தியப் பாரம்பர்யங்கள், பழக்கவழக்கங்கள், மாண்புகள் பற்றி இந்த நூல்களில் விவாதிக்கப்பட்டுள்ளதா?

எங்காவது ஏதாவதொரு பொருளில் இவற்றைப் பற்றிய மேலோட்டமான விவாதத்தை மட்டுமே பார்க்க முடியும். மௌலானா அவர்களின் ‘இஸ்லாமிய பண்பாட்டின் அடிப்படைக் கொள்கைகளும் உட்கூறுகளும்’ என்கிற நூலில் இந்து மதத்தின் சில நம்பிக்கைகள் குறித்து மேலோட்டமாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. ‘அல்ஜிஹாத் ஃபில் இஸ்லாம்’ நூலில் போர் தொடர்பாக இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள நடைமுறைகள், நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவில் பணியாற்றுவதுதான் நம்முடைய நோக்கமெனில் இந்து மதம் குறித்து நல்ல முறையிலும் ஆழமாகவும் வாசித்து விளங்கியிருப்பது இன்றியமையாத-தாகும். இந்து மதம் மட்டுமல்லாமல் சீக்கிய மதம், புத்த மதம், ஜைன மதம் போன்றவற்றையும் நல்ல முறையில் ஆய்வு செய்திருப்பது அவசியமாகும்.

‘தஃப்ஹீமுல் குர்ஆன்’ விரிவுரையில் கிறிஸ்துவ மதம் குறித்து எழுதப்பட்டிருக்கின்ற குறிப்புகள் அனைத்துமே மத்தியக் காலத்திலும், நவீனக் காலத்திலும் எழுதப்பட்ட நூல்கள், என்ஸைக்ளோபிடியா பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவையே.

சென்ற நூற்றாண்டில் கிறிஸ்துவ அறிஞர்களும் யூத அறிஞர்களும் பைபிள் மீது செய்துள்ள விமர்சனங்களிலிருந்தும் ஆய்வுகளிலிருந்தும் கிறிஸ்துவ, யூத வரலாற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்தும் பயனீட்டப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு அறிஞர் என்னதான் மிகப்பெரும் மார்க்க மறுமலர்ச்சியாளராக, சிந்தனையாளராக, சீர்திருத்தவாதியாக முத்திரை பதித்து தனித்து நின்றாலும் எல்லாக் கலைகளிலும் தனித்-தேர்ச்சியையும் நுணுக்கமான விவரங்களையும் கவனித்து ஆய்கின்ற செயல்திறனையும் அவரிடம் எதிர்பார்க்க முடியாது அல்லவா?

இப்போது நமக்கு இருக்கின்ற மிகப் பெரும் தேவை என்னவெனில்  அறிவாற்றலும் ஆராய்ச்சித்திறனும் கொண்ட, இஸ்லாத்தின் கோட்பாடுகளிலும் ஆழமான புலமை கொண்ட சில இளவல்கள் இந்திய மதங்கள், அவற்-றின் வரலாறு, பாரம்பர்யங்கள், தற்போதைய சமூக விழைவுகள், சமூகச் செயல்பாடுகள் போன்றவற்றை ஆழ-மாக ஆராய வேண்டும்; இஸ்லாத்தை இந்தியப் பின்னணியில் அறிமுகப்படுத்த வேண்டும். இந்தப் பணி கனமான பணி. என்றாலும் மிகவும் அவசியமான பணி என்றே நான் கருதுகின்றேன்.

சில ஆண்டுகளுக்கு முன் அலிகரில் சென்டர் ஃபார் ரிலிஜியஸ் ஸ்டடீஸ் என்கிற பெயரில் கல்வி நிறுவனத்தை நான் தொடங்கியதற்குப் பின்புலமாக இருந்தது இந்தச் சிந்தனைதான்.

தில்லி திரும்பிய பிறகு பல்வேறு பணிகளில் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். அவற்றில் ஒன்றுதான் இந்த சென்டரும். 2005 ஆகஸ்டு மாதத்தில் இதனைத் தொடங்கினேன்.

இதிலிருந்து சில இளைஞர்கள் சொக்கத்தங்கங்களாக வெளியாகி இருக்கின்றார்கள். அவர்களிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

உங்களுடைய கேள்விக்கு ஒரு கோணத்தில் இதுவரை பதிலளித்துவிட்டேன். இப்போது உங்களுடைய கேள்வி-யின் இன்னொரு பரிமாணத்திற்கு வருகின்றேன். அதாவது என்னுடைய பங்கு என்ன? நான் என்ன செய்திருக்கின்றேன்?

ஒரு மூன்று துறைகளில் எனக்குத் தனி ஈடுபாடு உண்டு. அதில் தொடக்கத்திலிருந்தே கவனம் செலுத்தி வருகின்றேன். முதலாவதாக மதங்களுக்கிடையே ஒப்பாய்வு, இரண்டாவதாக, சூஃபிஸம், மூன்றாவதாக ஒழுக்கக் கல்வி.

ஒழுக்கக் கல்வி தொடர்பாக நான் சில நூல்களை எழுதியிருக்கின்றேன். ஒழுக்க மாண்புகள் தொடர்பான கல்வியில் தனி முத்திரை பதித்த ஒழுக்கவியலாளரும் புகழ் பெற்ற அறிஞருமான முஸ்கவியா குறித்து நான் மேற்கொண்ட ஆய்வை (முனைவர் பட்டத்திற்காக நான் மேற்கொண்ட ஆய்வு அது) அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் நூலாகப் பதிப்பித்து வெளியிட்டது.
ஒழுக்கவியல் குறித்து புகழ்பெற்ற தத்துவ அறிஞர் அபுன் னஸர் ஃபாராபி அவர்களின் சிந்தனைகள் என்கிற தலைப்பில் ஒரு நூல் எழுதி இருக்கின்றேன். இப்னு சீனா, முக்ஸில்லா போன்றோரின் ஒழுக்கவியல் போதனைகள் குறித்தும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியிருக்கின்றேன்.

சூஃபிஸம் குறித்து Sufism and Shariah என்கிற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் முஜத்தித் அல்ஃபெ ஸானி ஷேக் அஹ்மத் சர்ஹிந்தி அவர்களின் சிந்தனைகள், கொள்கைகள் தொடர்பான ஓர் ஆய்வு நூல் ஆகும். என்றாலும் அதில் இஸ்லாமிய சூஃபிஸத்தின் உட்கூறுகளை வரையறுப்பதற்கு முயன்றிருக்கின்றேன். உர்தூ மொழியிலும் இதன் மொழிபெயர்ப்பு வெளியாகி அறிவுக்களங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிறுவப்பட்டு 67 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்தியாவில் இஸ்லாமிய இயக்கத்தின் நிலைமை குறித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர்  டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி  அளித்த பேட்டியிலிருந்து

Saturday, November 12, 2011

Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib


Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib: Muqeet Mujtaba Ali

Muqeet Mujtaba Ali, a long time associate, student and friend of Moulana A Khutbudeen Ahmed Baqawi Sahib writes the following:

Sitting in silence I recall my meeting with him at his house about four months ago. He compelled me to have tea with him. Neither he nor I knew that we were meeting for the last time.
Just a week ago, he had been to Singapore to meet his daughter there.
His wife and other children who wished him a happy journey never even dreamt that he will never come back.
Those who saw him off at the airport never knew that they were seeing him off forever.
The man, who is no more now, never knew that he is not going to meet his near and dear ones again. That his flight to Singapore was the last flight of his life!
His daughter in Singapore never knew that her father has come all along from Chennai to Singapore with an invisible ‘kafan’ wrapped over his body.
None realised that Allah was preparing for his burial in Singapore.
The deceased was a great scholar of Islam. He was the author and translator of many books in Tamil. His great contribution was the translation of Qur’an in Tamil language.
I pray to Allah to forgive all his sins and grant him the highest place in Jannah. Aameen.

Some Points to Think and Act Upon:
1. Death is certain. None can escape death. So I and you must be wise enough to prepare for the life after death.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [٥٩:١٨
O Believers! fear Allah and let every person look and consider what he sends forward for the morrow. Fear Allah; Allah is well aware of all that you do. (Al-Hashr 59: 18)
2. The time of death is destined by Allah, the Giver of life, and the Taker of life. Neither the time of death can be advanced, nor can it be postponed.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ [١٦:٦١
Were Allah to take people to task for their wrong-doing, He would not have spared even a single living creature on the face of the earth. But He grants them respite until an appointed term. And when that term arrives, they have no power to delay it by a single moment, nor to hasten it.(Al-Nahl 16: 61)
3. The Place where one will die is decided already by Allah. None except Allah knows the place of every man’s death.

…وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ …[٣١:٣٤
No soul knows in which land he will die!(Luqman 31: 34)
Kuthbudeen Sahib spent his entire life in Tamilnadu, India. His death was destined in Singapore. So Allah took him there in the evening of his life.
We must realise and understand very well that Allah drives a person out of his house and takes him to a place where he is destined to die, and he dies there.

… قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ ….[٣:١٥٤
Say: ‘Even if you had been in your houses, those for whom slaying had been appointed would have gone forth to the places where they were to be slain.’ (Al Imran 3 : 154)
4. Most important thing for a Muslim is to die in the state of Imaan.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ [٣:١٠٢
Believers! Fear Allah as He should be feared, and see that you do not die save in the state of submission to Allah.(Al 'Imran 3: 102)
This ayah, along with other verses, is recited during Nikkah, marriage sermon. Brides and bridegrooms are reminded of death even during the happiest occasion of their life: Your happiness is not permanent. Nor is your life! Prefer that which is permanent over that which is transitory.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [٨٧:١٦
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [٨٧:١٧
Nay! but you prefer the present life, whereas the Hereafter is better and longer lasting. (Al-A'la 87: 16-17)
More Here 

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைவு : சில சிந்தனைகள் - முகீத் முஜ்தபா அலீ

6. நவம்பர், 2011. ஞாயிற்றுக்கிழமை.

தியாகத்திருநாள் நன்றாகக் கழிந்தது.

படுக்கப்போவதற்கு முன்பு வழக்கம்போல மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நண்பர் அனுப்பியிருந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

பெருநாள் அன்று மட்டுமே இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மனநிறைவும் அந்தக் கணத்திலேயே அகன்றன.

இதயத்துக்கினியவர் எவராவது இறந்துபோகும் போது சோகம் மனத்தைக் கவ்வத்தானே செய்யும்.

மடியில் இருந்த கணிணித் திரையைப் பார்த்தவாறு உறைந்துபோனேன்.
அறையும் வீடும் நிசப்தத்தில் உறைந்திருக்க மௌலானாவைச் சந்தித்த அந்த நிமிடங்கள் மீண்டும் மனத்திரையில் ஓடின.

நான்கு மாதங்கள் கூட ஆகியிருக்காது.

வழக்கம்போல ஜமாஅத் அலுவலகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விசாரித்த பிறகு மௌலானாவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போனேன். வற்புறுத்தி தேநீர் குடிக்க வைத்தார். அவரும் சரி, நானும் சரி தேநீருடன் அளவளாவிய அந்த மாலை வேளை தான் நாம் ஒருவரையொருவர் சந்திக்கின்ற கடைசி வேளை என்று இம்மியளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

மீண்டும் கணிணித் திரையில் தெரிந்த அந்த வலைப்பூ வாசகங்களை வாசித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் போய் இருக்கின்றார். கடல் கடந்து நெடும்பயணம் கிளம்பிய அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த அவருடைய குடும்பத்தார் அதுதான் அவருடைய கடைசி பயணம் என்கிற விவரம் தெரிந்திருக்கவில்லை.
விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தவர்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி இயக்கத் தோழர்களையும் குடும்பத்தாரையும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என விமானம் ஏறிய அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த விமானப் பயணம் தான் தனது வாழ்வின் கடைசிப் பயணம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் இருக்கின்ற அவருடைய மகளுக்கும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பறந்து வந்திருக்கின்ற தனது தந்தையார் எவருடைய கண்களுக்கும் புலப்படாத கஃபன் துணியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரியாமலே போயிற்று. 

சிங்கப்பூரில் அவருடைய நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்துகொண்டிருந்தது எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நாடறிந்த எழுத்தாளர்; பன்னூலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற பணியில் அவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் மகத்தானது. அல்லாஹ் அவருடைய நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக! அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
அவருடை மரணம் எழுப்பிய சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!
 1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்-வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்-வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.                     
(அத்தியாயம் 59 அல்ஹஷர் : 18)

2. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப-தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்-களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.                              (அத்தியாயம் 16: அந்நஹ்ல் : 61)

3. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
 இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.
தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது.                                 (அத்தியாயம் 31 : 34)
மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி சாகிப் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாட்டில் தான் கழித்தார். ஆனால் சிங்கப்பூர்தான் அவரது மரணக்களம் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் அல்லாஹ் அவரை சிங்கப்பூருக்கு எடுத்துக் கொண்டு போனான்.
ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர் கூறும்: ‘நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!‘                        
(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான் : 154)
4. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.                                 (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் : 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.
அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?
உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று. அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.
ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.                              (அத்தியாயம் 87 அல் அஃலா : 16, 17)
5. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப்-படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!
எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!                                  
(அத்தியாயம் 12 : யூசுப் : 101)

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!

Sunday, November 6, 2011

Moulana Khudbudeen Ahmed Baqawi is no more!


Moulana A Khudbudeen Ahmed Baqawi at Kumbakonam Ulema meet
Moulana Khudbudeen Ahmed Baqawi, former Muawin Ameer-e-Halqa of Jamaat-e-Islami Hind Tamil Nadu is no more. Inna lillahi wa inna ilaihi rajiwoon. He breathed his last in faraway Singapore today evening. He had gone there to be with his daughter there. It is said that he suffered a massive heart attack which proved to be fatal. He was admitted at UYISN,KOON TECK PUAT HOSPITAL in Singapore for treatment. Eventually he breathed his last there.

Moulana Khudbudeen Ahmed Baqawi is a legend here. He was involved with the translation of The Holy Quran. It was his magnum opus.Moulana undertook this noble task under the active encouragement of Moulana M A Jameel Ahmed Sahib when there was no translation available in Tamil. Now we have dozens of translations available in the market.

Moulana Khudbudeen Sahib's contribution in the Tamil literary field is enormous. He has translated many books in Tamil. He is from Aravakurichi and got attracted to the Islamic movement when he was serving as a Imam in Villivakkam, Chennai. Moulana S M Malik of Hyderabad who was residing in Chennai then introduced him the revolutionery message of the tahreek. Moulana M. A. Jameel Ahmed Sahib identified and nurtured his talent in translating books.
Besides Moulana has trained, groomed and evolved many activists to the Iyakkam. Br T. E. Naser. Br Sheikh Dawood, Br Ashraf Ali and scores of youngsters were groomed by him. One of his star product is our own Br S. N. Sikkander, the present chief of Welfare Party of India. It could be said that an entire generation of youngsters got inspired by him. There was a time when not a single tarbiyati ijtema would be held without his speech or dars. His room in the IFT complex served as the training centre for all of those who had got attached with the Iyakkam. Moulana is very soft spoken. He had his own way of giving lectures. He was very amiable. He was very humble and polite and as they say in Tamil he would never அதிர்ந்து பேச மாட்டார். He would argue for his point of view. But, he would never fight. He used to lead the salat in Jamaat Office. He had this unique voice. His Qirat was exceptionally good and mellowing.
He was also proved to be Qutb of deen in the sense that he was steadfast in the way of Allah. He was a model for Azeemath. Being a alim he could have easily charted his own way and reaped much more and more benefits. But the tahreeki chap (Iyakka muthirai) was imbibed him such a way that he prefered Azeemath over Ruksath. He never cared about his family, sons, daughters. His only care was of the tahreek and its mission.  He was of the 'old generation' who prefered mission over everything else.
It is very difficult to think that he is no more. Two or three weeks back he came to see me. We had tea. We discussed a lot. Moulana shared some of his personal thoughts and plans. He declared that he had resigned from the post of Principal of Jamia Kulliatus Salam with his charecteristic smile and shining eyes. He said in the same breath that he had not resigned from the Jamaat and would continue to strive for the Nasbul ayn of the Jamaat till the last breath.
May Allah grant him Jannat ul Firdaus. Ameen.  
UPDATES:

Moulana was laid to rest in Singapore.
Moulana Khudbudeen Ahmed Baqawi in Trichy library

Moulana A Khudbudeen Ahmed Baqawi who passed away yesterday was laid to rest in  CHOU CHU KANG, MUSLIM CEMETERY in Singapore after Zuhr prayer around 2.00pm. Moulvi A Zafarullah Rahmani lead the Janaza prayer. Zafarullah Rahmani has been closely associated with the late Moulana for the past three decades. In an email Zafar Sahib said:
Just returned from qabrasthan after Tadfeen was over.
A group of young ulama helped me in performing the ghusl and takfeen of marhoom Mawlana Qutub Sahib.
I did lead the Janazah prayer. And then a brief condolence meeting was also held there. The late leader's service to the Islam and his zeal for grooming the younger generation was recalled.
No one thought to take a snap of the face of deceased Mawlana . Everybody had I phones and mobile with them. But nobody thought of taking a snap. Perhaps it was the will of Allah. Manshiyat e ilah? 
Every one in the Jamaat were unanimous in one point: ie Qutb sb looked like in a deep sleep in peace. Just like a "Nafs  e mutmayinnah"
Moulana Ejaz Ahmed Aslam Sahib led Qaibana Janaza prayer was held in Chennai.

A Qaibana Janaza prayer for the departed soul was organised in Chennai. It was the day of Eid-ul-Azha and a large number of the members, karkunan, muthafeeqeen converged in the Masjid-e-Ikhlas, Perambur High Road, Jamalia at Asr. It was a sheer coincidence that Moulana Ejaz Ahmed Aslam Sahib was in the city. He was here on his way to Benares to attend an interfaith conference organised by Budhists there.

Moulana delivered a short, concise and moving speech before the Janaza Prayer. He recalled his forty years of companionship with the Moulana. "He was soft spoken, humble and totally devoted to the cause of Islam. He devoted his entire life in the cause of Islam. We have to emulate this trait and totally dedicate ourselves to the cause of Islam", he said.

மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், IFT வெளியிட்டுள்ள  திருக்குர்ஆன்  தமிழ் மொழிப்பெயர்ப்பாளருமான மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் 6.11.2011 அன்று மாலை சிங்கப்பூரில் இறையடி சேர்ந்தார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜீவூன்.
தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கத்தை அனைத்து பகுதிகளில் வேரூன்ற செய்ததில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்கள். 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்கள்.  மேலும் இறைமார்க்கத்தை மேலோங்க செய்கின்ற பணிகளில் தனது இறுதி காலம் வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  தனது 76 வயதிலும் இஸ்லாமிக் சென்டர் வேலூரில் நடைபெற்றுவரும் குல்லியத்துஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார்கள்.
 A news report in JIH website. Here

Moulana Ejaz Ahmed Aslam

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி குறித்து மௌலானா இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம்
அன்புக்கினிய நண்பர் மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி அவர்களுடன் எனக்கு நாற்பது ஆண்டுகளாக பழக்கம். திருச்சியைச் சேர்ந்தவர் அவர். சென்னையில் வில்லிவாக்கத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இமாமாகப் பணியாற்றி வந்தபோது ஜமாஅத்துடன் நெருக்கமானார். அதன் பிறகு தனது இறுதி மூச்சு வரை அவர் ஜமாஅத்துடன் இணைந்து இருந்தார்; இஸ்லாத்திற்காக சேவையாற்றுவதிலும், குர்ஆனின் செய்தியைப் பரப்புவதிலும், இஸ்லாமியக் கல்வியைப் போதிப்பதிலும் முழுமூச்சாக ஈடுபட்டார்.

 
அவர்  மிகவும் இனியவர்; கண்ணியமான மனிதர்; அதிகம் பேச மாட்டார்; அறிவும் தெளிவும் நிறைந்த அறிஞர். குர்ஆனைவும் நபிமொழியையும் நபிவழியையும் நன்றாக விளங்கிக் கொள்கின்ற ஆற்றலை அல்லாஹ் அவருக்கு நிறையவே அளித்திருந்தான். எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் அடி முதல் நுனி வரை மிக எளிதாக கணித்துக்கொள்கின்ற ஆற்றலையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான்.

 
குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற சேவையில் அவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். தமிழில் எளிய நடையில் இனிய மொழியில் மொழிபெயர்ப்பு கிடைப்பதற்கு அவர் பெரும் பங்காற்றினார். 

 
வாய்மையுடனும் உளத்தூய்மையுடனும் அவர் ஆற்றிய சேவைகள் அனைத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக; அவருடைய பிழைகளைப் பொறுத்தருள்வானாக; அவருக்கு தன்னுடைய கருணையையும் கிருபையையும் அருள்வானாக; பாவங்களை மன்னித்தருள்வானாக; மறுமையில் முடிவே இல்லாத நிலையான வாழ்வின் மிக உயர்வான படித்தரங்களை வழங்குவானாக; அவருடைய குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை மேற்கொள்கின்ற நற்பேற்றை அருள்வானாக என நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன். 

 
அவருடைய ஆளுமையை ஹபீஸ் மீரட்டி என்கிற கவிஞரின் கவிதை வரிகளில் சொல்லி விடலாம்:

ஹயாத் ஜிஸ் கி அமானத் தீஹ் உஸ் கூ லோடா தீ 
மை ஆஜ் செய்ன் சே ஸோதா ஹூன் பாவுன் பெஹ்லாயே
வாழ்க்கை என்கிற இந்த அமானத்தை அதற்கு உரியவரிடம் ஒப்படைத்துவிட்டேன். 
இன்றைக்கு நிம்மதியாக உறங்குகின்றேன் கால்களை நீட்டிக்கொண்டு
மௌலானா  இஃஜாஸ் அஹ்மத் அஸ்லம் அவர்கள் வாணியம்பாடியைச் சார்ந்தவர். 1977 முதல் 1990 வரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவராகப் பணியாற்றியவர். கடந்த 21 ஆண்டுகளாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய செயலாளராகச் சேவையாற்றி வருகின்றார்.
He was sobre, serious and soft spoken gentleman : Moulana Ejaz Ahmed Aslam

Moulana Qutbudeen Ahmed Baqawi has been my friend and comrade for the past four decades. He was from Trichy and got attached with the Islamic Movement when he was serving as an Imam in Villlivakkam, Chennai. He served for the cause of Islam, Quran and Islamic Education whole heartedly till his last breath.

He was a serious, sobre and soft spoken gentleman. He was a man of knowledge and God has provided him with the special gift of understanding the inner dimensions of Quran and Hadith.

He dedicated himself with the noble task of translating the word of God into Tamil. And with his major contribution the translation of the Holy Quran in Tamil was published. It is the simple, lucid and immensely captivating translation available in the market now.

May Allah accept his sincere services. May Allah forgive his shortcomings. May Allah bestow him with His rahmat and maqfirat and grant him higher rankings in the eternal abode of Jannah. May Allah bestow Sabr-e-Jameel to his family members. Aameen.

In the end one could personify the departed with the following lines from Hafeez Meerati :
Hayat jis ki amanat thee us ku lotaadee
main aaj chain se sotha hoon paaun pehlaye

I have returned the amanah of life to its owner
Today I stretch my legs and sleep merrily

Some reflections on the death of Moulana A Khutbudeen Ahmed Sahib: Muqeet Mujtaba Ali

Muqeet Mujtaba Ali, a long time associate, student and friend of Moulana A Khutbudeen Ahmed Baqawi Sahib writes the following:

Sitting in silence I recall my meeting with him at his house about four months ago. He compelled me to have tea with him. Neither he nor I knew that we were meeting for the last time.
Just a week ago, he had been to Singapore to meet his daughter there.
His wife and other children who wished him a happy journey never even dreamt that he will never come back.
Those who saw him off at the airport never knew that they were seeing him off forever.
The man, who is no more now, never knew that he is not going to meet his near and dear ones again. That his flight to Singapore was the last flight of his life!
His daughter in Singapore never knew that her father has come all along from Chennai to Singapore with an invisible ‘kafan’ wrapped over his body.
None realised that Allah was preparing for his burial in Singapore.
The deceased was a great scholar of Islam. He was the author and translator of many books in Tamil. His great contribution was the translation of Qur’an in Tamil language.
I pray to Allah to forgive all his sins and grant him the highest place in Jannah. Aameen.

Some Points to Think and Act Upon:
1. Death is certain. None can escape death. So I and you must be wise enough to prepare for the life after death.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ [٥٩:١٨
O Believers! fear Allah and let every person look and consider what he sends forward for the morrow. Fear Allah; Allah is well aware of all that you do. (Al-Hashr 59: 18)
2. The time of death is destined by Allah, the Giver of life, and the Taker of life. Neither the time of death can be advanced, nor can it be postponed.

وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِظُلْمِهِمْ مَا تَرَكَ عَلَيْهَا مِنْ دَابَّةٍ وَلَٰكِنْ يُؤَخِّرُهُمْ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۖ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً ۖ وَلَا يَسْتَقْدِمُونَ [١٦:٦١
Were Allah to take people to task for their wrong-doing, He would not have spared even a single living creature on the face of the earth. But He grants them respite until an appointed term. And when that term arrives, they have no power to delay it by a single moment, nor to hasten it.(Al-Nahl 16: 61)
3. The Place where one will die is decided already by Allah. None except Allah knows the place of every man’s death.

…وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ …[٣١:٣٤
No soul knows in which land he will die!(Luqman 31: 34)
Kuthbudeen Sahib spent his entire life in Tamilnadu, India. His death was destined in Singapore. So Allah took him there in the evening of his life.
We must realise and understand very well that Allah drives a person out of his house and takes him to a place where he is destined to die, and he dies there.

… قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَىٰ مَضَاجِعِهِمْ ۖ ….[٣:١٥٤
Say: ‘Even if you had been in your houses, those for whom slaying had been appointed would have gone forth to the places where they were to be slain.’ (Al Imran 3 : 154)
4. Most important thing for a Muslim is to die in the state of Imaan.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ [٣:١٠٢
Believers! Fear Allah as He should be feared, and see that you do not die save in the state of submission to Allah.(Al 'Imran 3: 102)
This ayah, along with other verses, is recited during Nikkah, marriage sermon. Brides and bridegrooms are reminded of death even during the happiest occasion of their life: Your happiness is not permanent. Nor is your life! Prefer that which is permanent over that which is transitory.

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا [٨٧:١٦
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ [٨٧:١٧
Nay! but you prefer the present life, whereas the Hereafter is better and longer lasting. (Al-A'la 87: 16-17)
More Here 

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைவு : சில சிந்தனைகள் - முகீத் முஜ்தபா அலீ

6. நவம்பர், 2011. ஞாயிற்றுக்கிழமை.

தியாகத்திருநாள் நன்றாகக் கழிந்தது.

படுக்கப்போவதற்கு முன்பு வழக்கம்போல மின்னஞ்சல் பெட்டியைத் திறந்தபோதுதான் அந்தச் செய்தியைப் படித்தேன்.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி மறைந்துவிட்டார் என்கிற செய்தியை நண்பர் அனுப்பியிருந்தார்.

இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்

பெருநாள் அன்று மட்டுமே இருக்கக்கூடிய மகிழ்ச்சியும் மனநிறைவும் அந்தக் கணத்திலேயே அகன்றன.

இதயத்துக்கினியவர் எவராவது இறந்துபோகும் போது சோகம் மனத்தைக் கவ்வத்தானே செய்யும்.

மடியில் இருந்த கணிணித் திரையைப் பார்த்தவாறு உறைந்துபோனேன்.
அறையும் வீடும் நிசப்தத்தில் உறைந்திருக்க மௌலானாவைச் சந்தித்த அந்த நிமிடங்கள் மீண்டும் மனத்திரையில் ஓடின.

நான்கு மாதங்கள் கூட ஆகியிருக்காது.

வழக்கம்போல ஜமாஅத் அலுவலகத்திற்குச் சென்று எல்லோரையும் பார்த்து விசாரித்த பிறகு மௌலானாவைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்குப் போனேன். வற்புறுத்தி தேநீர் குடிக்க வைத்தார். அவரும் சரி, நானும் சரி தேநீருடன் அளவளாவிய அந்த மாலை வேளை தான் நாம் ஒருவரையொருவர் சந்திக்கின்ற கடைசி வேளை என்று இம்மியளவுகூட எண்ணிப் பார்க்கவில்லை.

மீண்டும் கணிணித் திரையில் தெரிந்த அந்த வலைப்பூ வாசகங்களை வாசித்தேன்.

ஒரு வாரத்திற்கு முன்பு தான் அவர் தனது மகளைப் பார்ப்பதற்காக சிங்கப்பூர் போய் இருக்கின்றார். கடல் கடந்து நெடும்பயணம் கிளம்பிய அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்த அவருடைய குடும்பத்தார் அதுதான் அவருடைய கடைசி பயணம் என்கிற விவரம் தெரிந்திருக்கவில்லை.
விமான நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வைத்தவர்கள் அவரை நிரந்தரமாக வழியனுப்பிக் கொண்டிருக்கின்றோம் என நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள்.

இனி இயக்கத் தோழர்களையும் குடும்பத்தாரையும் மீண்டும் சந்திக்கின்ற வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என விமானம் ஏறிய அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்த விமானப் பயணம் தான் தனது வாழ்வின் கடைசிப் பயணம் என்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் இருக்கின்ற அவருடைய மகளுக்கும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை பறந்து வந்திருக்கின்ற தனது தந்தையார் எவருடைய கண்களுக்கும் புலப்படாத கஃபன் துணியைக் கட்டிக் கொண்டு வந்திருக்கின்றார் என்பது தெரியாமலே போயிற்று. 

சிங்கப்பூரில் அவருடைய நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளை அல்லாஹ் செய்துகொண்டிருந்தது எவருக்குமே தெரிந்திருக்கவில்லை.

மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி நாடறிந்த எழுத்தாளர்; பன்னூலாசிரியர்; மொழிபெயர்ப்பாளர். திருக்குர்ஆனை தமிழில் மொழிபெயர்க்கின்ற பணியில் அவருடைய பங்களிப்பும் பங்கேற்பும் மகத்தானது. அல்லாஹ் அவருடைய நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக! அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! ஆமீன்.
அவருடை மரணம் எழுப்பிய சில சிந்தனைகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!
 1. மரணத்தைத் தவிர்க்க முடியாது.
மரணம் நிச்சயமான ஒன்று. எனவே, அந்த மரணத்திற்காகவும் அதன் பிறகு வரவிருக்கின்ற மறுமை வாழ்வுக்காகவும் நீங்களும் நானும் தக்க ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்-வுக்கு அஞ்சுங்கள். மேலும், ஒவ்வொரு மனிதனும், நாளைய தினத்திற்காக எதனைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்-வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் திண்ணமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான்.                     
(அத்தியாயம் 59 அல்ஹஷர் : 18)

2. உயிரைக் கொடுப்பவனும் இறைவன்தான். உயிரைப் பறிப்பவனும் அவனே. அவனே மரணத்திற்கான தேதியையும் நேரத்தையும் குறிக்கின்றான். அதனைத் தவிர்க்கவோ, தாமதப்படுத்தவோ, தள்ளிப்போடவோ, முடியாது.
மனிதர்கள் இழைக்கும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடிப்ப-தாயிருந்தால், பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான்! ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவன் அவகாசம் அளிக்கின்றான். பிறகு அந்த நேரம் வந்துவிடுமாயின் ஒரு வினாடிகூட அவர்-களால் பிந்தவும் முடியாது; முந்தவும் முடியாது.                              (அத்தியாயம் 16: அந்நஹ்ல் : 61)

3. ஒருவர் எங்கே எப்படி மரணமடைவார் என்பதை இறைவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டான்.
 இறைவனைத் தவிர வேறு எவருக்கும் அது பற்றிய தகவல் தெரியாது.
தான் எந்தப் பூமியில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது.                                 (அத்தியாயம் 31 : 34)
மௌலானா குத்புத்தீன் அஹ்மத் பாகவி சாகிப் தம்முடைய வாழ்நாள் முழுவதையும் தமிழ்நாட்டில் தான் கழித்தார். ஆனால் சிங்கப்பூர்தான் அவரது மரணக்களம் என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் அவருடைய வாழ்வின் கடைசி நாட்களில் அல்லாஹ் அவரை சிங்கப்பூருக்கு எடுத்துக் கொண்டு போனான்.
ஒருவர் எந்த இடத்தில் மரணமடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்த இடத்திற்கு அல்லாஹ் அவரை அவருடைய இடத்திலிருந்து கிளப்பிக் கொண்டு போகின்றான் என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர் கூறும்: ‘நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!‘                        
(அத்தியாயம் 3: ஆலுஇம்ரான் : 154)
4. மரணிக்கும்போது இறைநம்பிக்கை இருக்கின்ற நிலையில் மரணிக்க வேண்டும். இதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானதாகும்.
‘இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.                                 (அத்தியாயம் 3 ஆலுஇம்ரான் : 102)
இந்த வசனம் நிகாஹ் குத்பாவில் திருமணச் சொற்பொழிவில் ஓதப்படுகின்றது.
அதாவது மணமக்களுக்கு மரணம் குறித்து நினைவூட்டப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வின் மிக மிக சந்தோஷமான வேளையில் மகிழ்ச்சி பொங்குகின்ற தருணத்தில் அவர்களுக்கு மரணத்தைக் குறித்து நினைவூட்டப்படுகின்றது.
இதற்கு என்ன பொருள்?
உங்களுடைய இந்த மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலையானதன்று. அது போலத்தான் உங்களுடைய வாழ்வும். எனவே நிலையில்லாத இந்த வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வுக்கு அதிக முன்னுரிமை தாருங்கள்.
ஆனால், நீங்கள் இம்மை வாழ்வுக்கே முன்னுரிமை அளிக்கின்றீர்கள். உண்மையில், மறுமையே மிகவும் மேலானதாகவும், நிலைத்து நிற்கக்கூடியதாகவும் இருக்கின்றது.                              (அத்தியாயம் 87 அல் அஃலா : 16, 17)
5. பின்வரும் துஆவை ஜனாஸா தொழுகையில் மட்டுமின்றி அடிக்கடி ஓதுவதை நாம் பழக்கப்-படுத்திக்கொள்ள வேண்டும்.
‘இறைவனே! நம்மில் உயிருடன் வாழ்வின் எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் வாழச் செய்வாயாக! நம்மில் மரணிக்கின்ற எவரையும் இறைநம்பிக்கை உள்ள நிலையில் மரணிக்கச் செய்வாயாக!
எனக்கு இன்னொரு துஆவும் மிகவும் பிடிக்கும். யூசுப் நபி செய்த துஆ அது:
வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச் செய்வாயாக! மேலும் என்னை ஒழுக்கசீலர்களுடன் சேர்ப்பாயாக!                                  
(அத்தியாயம் 12 : யூசுப் : 101)

அல்லாஹ் நம் அனைவருக்கும் இறைநம்பிக்கையின்படி வாழ்கின்ற, அந்த நிலையிலேயே மரணிக்கின்ற நற்பேற்றைத் தந்தருள்வானாக! அதறகான வழிகாட்டுதலையும் நல்லருளையும் தந்தருள்வானாக!




Tuesday, November 1, 2011

மௌன உழைப்பாளியாக...


ஒரு முஸ்லிம் என்கிற முறையில் எத்தகைய வாழ்வை நீங்கள் விரும்புவீர்கள்?

நான் ஒரு முகம் தெரியாத, மௌன உழைப்பாளியாக, ஊழியனாகவே வாழ விரும்புவேன்.

எத்தகைய ஊழியராகவெனில் உறுதியுடனும் சமநிலை தவறாமலு, நீதி நியாய உணர்வுடனும், நிலைகுலையாமலும், அழகிய பொறுமையுடனும் தொடர்ந்து இடைவிடாமல் ஓயாமல் ஒழியாமல் தொய்வின்றி இறைவழியில் பாடுபடுகின்ற ஊழியனாகவே இருக்க விரும்புகின்றேன்.

அந்த ஊழியனை நீங்கள் பத்திரிகைச் செய்திகளில் பார்க்க மாட்டீர்கள். தொலைக் காட்சித் திரையில் அவனது முகம் தோன்றாது. பிறர் பாராட்ட வேண்டும்; வாழ்த்த வேண்டும் என்கிற ஆசை அவனுக்குக் கிஞ்சிற்றும் இருக்காது. புகழுரைக்காக அவன் ஏங்கவும் மாட்டான். அவன் ஒரு அடிப்படையான ஊழியனாக இருப்பான்.

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என ஊகங்கள், சந்தேகங்களில் அவன் தனது நண்பர்களைத் துளைத்தெடுக்க மாட்டான். மனம் சஞ்சலமடையச் செய்யவும் மாட்டான்.

எந்தவொரு தோல்வியும் பின்னடைவும் அவனைத் துவளச் செய்யாது. வெற்றி கிடைத்தாலும்கூட கடமையை வெற்றிகரமாகச் செய்ததாக, பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக அவன் நினைப்பான்.

அப்படிப்பட்ட ஊழியனாக இருக்கவே, வாழவே நான் விரும்புகின்றேன்.

- ஒரு பத்திரிகையின் நேர்காணலில்
குர்ரம் முராத்
Related Posts Plugin for WordPress, Blogger...